Sunday, August 19, 2012

Resume - வேண்டா பத்து


சமீபத்தில் நண்பர் ஒருவர் "அண்ணே, ஸ்டீவ் ஜாப்ஸ் போயிட்டார்ண்ணே, அந்த வேலைக்கு என்னிய ரெக்கெமெண்டு பண்ணுங்கங்கண்ணேன்னு, ஆபிஸ்லயே ipadலாம் குடுக்கிறாய்ங்களாம்ன்னு ரொம்ப நச்சரித்துக்கொண்டிருந்தார்.சரி உங்க ரெஸ்யூமேவ அனுப்புங்கனுன்னு சொல்லி வைத்தேன். அவர் அனுப்பிய டாக்குமெண்டை திறந்து பார்த்தால் ஒரு சின்னப் பையனின் படம் ஒட்டி இருந்தது. கூப்பிட்டுக் கேட்டதில்,"ஹீ..ஹீ அது நாந்தாண்ணே..காலேஜ்ல படிக்கும் போது எடுத்தது, கைவசம் வேற பாஸ்போர்ட் சைஸ் இல்லை அதான்" என்றார். பல சந்தர்பங்களில் எனக்கு வரும் ரெஸுயுமேக்களில் நான் பார்க்கும் தவறுகள் இந்த ரகத்தில் தான் இருக்கின்றன. அவை தான் இந்த பதிவின் தூண்டுதலே. மொதல்ல ரெஸ்யூமேவில் வேண்டாத பத்தைப் பார்ப்போம்

 1. Resume. ரெஸ்யூமேவில் தேவையில்லாத முதல் விசயம் ரெஸ்யூமே. என்னடா இவன் குழப்பறானேன்னு பாக்கறீங்களா, நான் சொல்ல வந்தது Resume / Bio Data / Curriculam Vitae போன்ற தலைப்புகள். இது வேண்டாம் என்பதற்கு இரண்டு காரணங்கள். Resume க்கும் Curriculam Vitae க்கும் வித்தியாசம் நம்மில் பலருக்கு தெரிவதில்லை. இது பத்தி ஒரு தனி இடுகை எழுதலாம் - இந்த வித்தியாசம் தெரியாமல் தவறான தலைப்பு வைப்பதை விட வைக்காமலே இருக்கலாம். இரண்டாவது காரணம் - . லெட்டர் ஹெட் போன்று வடிவமைப்பதே தற்போதைய Trend. முதல் வரியில் முழுப் பெயரையும் அடுத்த வரியில் தொலைபேசி எண்ணையும் மின் மடல் முகவரியையும் குறிப்பிடுங்க, மறக்காம செண்டர் பண்ணிக்கோங்க. வீட்டின் முகவரியை போடுவது personal choice. இவற்றிற்கு கீழே ஒரு கோடு போடுங்க - இப்ப உங்க ரெஸ்யூமே ஒரு நிறுவனத்தின் லெட்டர் ஹெட் போன்று இருக்கும். முக்கியமா பெயர் முழுவதையும் Capital letterஇல் அடிக்காதீங்க.

 2. Objective : உலக அளவில் ரெஸ்யூமேக்களில் அதிக அளவில் காப்பி பேஸ்ட் செய்யப்படுவது அப்ஜெக்டிவ்தான். இது பெரும்பாலான நேரங்களில் ரெஸ்யூமேவின் சொந்தக் காரருக்கு செய்யும் உதவியை விட தொந்தரவே அதிகம். hard working, challenging environment, growth oriented, competitive enviorment போன்ற வெகு சில வார்த்தைகளை குலுக்கிப் போட்டு ஒரு வாக்கியத்தை உருவாக்கி அதுக்கு அப்ஜெக்டிவ்னு பேர் வச்சிடறாங்க.

  To work on future projects in a World-Class environment this nourishes the hard working and leadership qualities, and goal achievement in me.-

இது ஒரு ரெஸ்யூமேவில் நான் கண்ட அப்ஜெக்டிவ்.

இது மாதிரி ரெஸ்யூமேக்களைப் பார்க்கும் போது என் இண்டர்வியூவை இங்கிருந்தே ஆரம்பிப்பேன்

  World-Class environment வேணும்னு சொல்லியிருக்கீங்க, எங்களோடது ஒரு medium sized company இங்க அதெல்லாம் இருக்காது, இங்க எப்படி வேலை செய்வீங்க

 நீங்க hard working என்று சொல்லியிருக்கீங்க, எதன் அடிப்படையில் அப்படி சொன்னீங்க, விளக்குங்க

 உங்களோட leadership qualities க்கு practical examples சொல்லுங்க என்றெல்லாம் கேட்டால் ஒரு பதிலும் வராது. இப்படியெல்ல்லாம் அப்ஜெக்டிவ் எழுதறதுக்கு எழுதாமலே இருப்பது நலம்.

 விண்ணப்பிக்கும் வேலைக்கு மிகப் பொருத்தமான குறிக்கோள் உங்களுக்கு இருப்பின், அதை அழகாக விளக் Experience கலாம், உதாரணத்துக்கு Colgate Palmolive நிறுவனத்தில் Area sales Manager வேலைக்கு விண்ணப்பம் அனுப்பறீங்கன்னு வச்சிக்கலாம். எனது குறிக்கோள் FMCG சேல்ஸில் உயர்ந்த நிலையை அடைவது. குறிக்கோளை அடைய முதல் படியாக அதற்கான கல்வித்தகுதி பெற்றேன். பட்டப் படிப்புக்கு பின் MBA in Sales and Marketing முடித்தேன். களப்பணியாக XYZ என்ற சிறு நிறுவனத்தில் கடந்த ஐந்தாண்டுகளாக Senior sales representative ஆக பணிபுரிந்து வருகிறேன். இப்பொழுது உங்கள் நிறுவனத்தில் இந்த வேலையைப் பெற நான் என்னை முழுமையாக தயார் என நம்புகிறேன் என எழுதலாம். இதையும் Covering Letter இல் எழுதி ரெஸ்யூமேவை ரத்தினச் சுருக்கமாக வைக்கலாம்.

 3. Your Photo : ரெஸ்யூமேவில் Photo மாடல்களுக்கும் நடிகர்களுக்குமே உகந்தது  மற்றோருக்கு இல்லை. 
Your appearance has nothing to do with your ability to do the job, Your photo in resume comes across as naive and unprofessional.

4. Fancy Resume : போட்டோக்கள் மாடல்களுக்கு தேவைப்படுகிற மாதிரி Fancy Resume Designerகளுக்கு மட்டுமே தேவை. மற்றவர்கள் பொதுவான Format தான் உபயோகிக்கணும். Production Manager வேலைக்கு Artistic ரெஸ்யூமேவும் மருத்துவர் வேலைக்கு பல்வேறு நிறங்கள் கொண்ட ரெஸ்யூமேவும் அவர்களுடைய வாய்ப்பைக் குறைக்கும். ரெஸ்யூமேவில் உங்க படிப்பு, தகுதி,இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுங்க அழகிற்கு அல்ல.

 5. Subjective descriptions: Your resume is for experience and accomplishments only. It's not the place for subjective traits, like "great leadership skills" or "creative innovator." Smart employers ignore anything subjective that applicants write about themselves because self-assessments are wildly inaccurate, so your resume should stick to objective facts.

 6. Send a Resume and not a Novel : ரெஸ்யூமே என்பது 4-5 பக்கங்களில் எழுதப்படவேண்டியது. பக்கத்துக்கு ரெண்டு மார்க் போட்டாலும் 18 பக்கங்களுக்கு 36 மார்க் ஆச்சு, நிச்சயம் பாஸ் என்கிற எலிமெண்டரி ஸ்கூல் நினைப்பு இங்கு உதவாது. உண்மைத் தமிழனோட இடுகைகள் மாதிரி உங்க ரெஸ்யூமே இருந்தா அவர் வணங்கும் முருகன்தான் இறங்கி வந்து உங்களுக்கு வேலை கொடுக்கணும். சொல்ல வேண்டியதை சின்னதா சிறப்பா சொல்லுங்க. எந்த ரெஸ்யூமேவும் மூன்றாவது பக்கத்துக்கு மேல் படிக்கப் படுவதில்லை என்பதை நினைவில் கொள்க.

 உங்களுக்கு இருபது ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் இருந்து உங்க ரெஸ்யூமே 5 பக்கங்களுக்கு மேல் போனால் ஐந்தாம் பக்கத்தின் இறுதியில் ”Past projects have been removed for brevity. Details available on request" என்று எழுதி ரெஸ்யூமேவை முடிச்சிடுங்க.

 7. Personal Information : இன்னமும் ரெஸ்யூமேக்களில் Father's name, Sex, Marital status, Present address, Permanent address, Date of Birth, Passport Number என்றெல்லாம் போட்டு அரை பக்கத்தை நிரப்புவதைக் காண்கிறேன். இவற்றின் தேவை நான் முதல் ரெஸ்யூமே எழுதத் தொடங்கும் முன்பே வழக்கொழிந்து விட்டது. இவற்றில் எதுவும் ஒரு Prospective Employer உங்களை Shortlist செய்ய உதவப் போவதில்லை, அதற்கு உதவாத எதுவும் ரெஸ்யூமேவில் இருக்கத் தேவையில்லை

 8. Hobbies : இதுவும் மேலே சொன்ன கேட்டகரியில்தான் வரும். உங்களுக்கு உதவாத எதுவும் ரெஸ்யூமேவில் இருக்கத் தேவையில்லை. Hobby க்கும் Pastimeக்கும் வித்தியாசம் தெரியாமல் watching TV, Listening to music, Playing Criket என்று ரொம்பவே மொக்கையா ஹாபிக்களை எழுவது எப்பத்தான் மாறுமோ தெரியல. மேலும் தற்போது பெரும்பான்மையோரின் பொழுது போக்கு, முழுநேர வேலை எல்லாமே Face Book, Twitter, Google Plus இன்ன பிற social networking site களில் மொக்கை போடுவதே - இதை எழுதினால் சத்தியமா வேலை கிடைக்காது


 9. References: வேலை தேடும் போது நூற்றுக்கணகான இடங்களுக்கு நம்ம ரெஸ்யூமேவை அனுப்பி வைப்போம், எல்லா இடங்களுக்கும் உங்க referenceகளின் தகவல்களை அனுப்பாதீங்க

 அ. வெகு சில நிறுவனங்கள் தவிர பெரும்பான்மையான நிறுவனங்கள் Selection Process இல் ஒரு சில கட்டங்கள் தாண்டும் வரை reference கேட்பதில்லை

ஆ. reference கொடுக்க சம்மதித்தவர்களும் தினமும் பத்து போன்கால் வந்தா கடுப்பாகிடுவாங்க

இ. HR placment agencies க்கு தேவையில்லாமல் reference அனுப்பாதீங்க, அவங்க உங்க referenceகளை கூப்பிட்டு வேலைமாற விரும்பறீங்களான்னு தொந்தரவு பண்ணுவாங்க

  "References are available upon request." 
You don't need to say that you'll provide references if asked, it goes without saying. You're not causing any harm by including an out-of-fashion statement, but it takes up space you could use for something else. 

10. Declaration Statement : இன்னொரு very outdated விசயம் கடைசியில் கொடுக்கும் வாக்குமூலம்.

All stated above are true to my knowledgeனு சொல்ல இது நீதிமன்றத்தில் கொடுக்கும் வாக்குமூலமல்ல.

இவை எல்லாத்தையும் எடுத்துட்டா ரெஸ்யூமேல என்னதான் எழுதறதுன்னு கேக்கறீங்களா? ரெஸ்யூமேவில் இருக்க வேண்டிய பத்து ஓரிரு நாட்களில்....

Sunday, February 19, 2012

தப்புத் தப்பாய் ஒரு தலையங்கம் - அமெரிக்க NRI களின் மீது தினமணியின் கொலவெறி...

ஜெயலலிதா சசிகலா நட்பு, ஸ்டாலின் - அழகிரி ஊடல், ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் இதெல்லாம் தமிழக அச்சுத் துறை ஊடகங்களின் Ever Green Subjects. என்னவோ இவர்களின் நிருபர்கள் கூடவே இருந்து பாத்தா மாதிரி எழுதுவாங்க. இந்த வகையறாவில் இன்னொரு சப்ஜெக்ட் அமெரிக்கா. விரும்பினாலும் வெறுத்தாலும் கருணாநிதியை தவிர்த்து விட்டு தமிழக அரசியல் குறித்து பேச முடியாது, அதே மாதிரி அமெரிக்காவைப் பற்றி குறிப்பிடாமல் சமகால உலக அரசியல் / பொருளாதாரம் குறித்து பேச முடியாது. அமெரிக்கா பலருக்கு கனவு தேசம், நம் கைக்கு எட்டாத அந்த பழம் புளிக்கும் என்று சொல்வதில் ஊடகங்களுக்கு ஒரு அலாதி மகிழ்ச்சி.

Ground Reality பத்தி எதுவுமே தெரிந்து கொள்ளாமல், மேம்போக்காக எழுதப் பட்ட கட்டுரைகள் பலவற்றைப் படித்திருக்கிறேன். அமெரிக்காவில் பாதி பேர் வீடு கடனில் மூழ்கிப் போய் கார்களில் வாழ்வதாகவும், கார் கடனை கட்ட

முடியாமல் காரை நடுரோட்டில் விட்டுச் செல்வதாகவும் எழுதி கிட்டத்தட்ட அந்நாட்டை Write Off செய்து வருகின்றன இந்திய குறிப்பாக தமிழக ஊடகங்கள்.

இது போன்ற ஒரு கட்டுரையை தினமணி போன்ற பொறுப்புள்ள பத்திரிக்கை அதுவும் தன் தலையங்கத்திலேயே வெளியிட்டு இருக்கிறது.

மிக மிக மேம்போக்காக எழுதிய அக்கட்டுரையை இங்கு காணலாம்.


இக்கட்டுரையில் மிக அதிக அளவில் பேசப் பட்டவை அமெரிக்காவில் வேலை வாய்ப்பு நிலவரம், H1B விசா மற்றும் அமெரிக்காவில் வேலை செய்து வரும் இந்தியர்களின் நிலைமை. இவற்றைப் பற்றி விரிவாக எழுதினால்
ஒரு நெடுந்தொடர் அளவுக்கு வந்துவிடும் என்பதால் ஒரு சில விவரங்களை மட்டும் சொல்லிவிட்டு கட்டுரையை Point -by - Point அலசலாம்.

1. அமெரிக்கா பொருளாதார மந்த நிலையிலிருந்து மெள்ள மீண்டு வந்து கொண்டு இருக்கிறது. வேலையில்லாதோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து நிலையாக நின்று பின்னர் படிப்படியாகக் குறைந்து சனவரி 2012ல் 8.3% ஆக இருக்கிறது. கடைசியாக இதே அளவு இருந்தது Feb 2009ல். அதாவது போக வேண்டிய தூரம் இன்னும் இருந்தாலும் மூன்றாண்டுகளில் குறைந்த பட்ச வேலையில்லாத்திண்டாட்டம் இன்று -
இதுதான் உண்மையான நிலைமை. இதற்கான தரவு

2. அமெரிக்காவை Write off செய்யும் அளவுக்கு மோசமாக இருந்த பொருளாதார மந்த நிலையிலும் ஒவ்வொரு வருசமும் (2009, 2010, 2011) H1B Quota முழுவதுமாக வழங்கப் பட்டது.

3. கட்டுரையில் சொல்லியதற்கு நேர் மாறாக அமெரிக்காவில் வாழும் இந்தியர்களின் க்ரீன் கார்ட் கடந்த ஆறு மாதங்களாக மிக வேகமாக நகர்ந்து வருகிறது. செப்டெம்பர் 2011 ல் ஏப்ரல் 2007 இல் நின்ற EB2 க்யூ இன்று மே 2010ல் நிற்கிறது. க்ரீன் கார்ட், EB1, 2, 3 பத்தியெல்லாம் பேச ஆரம்பிச்சா தினமணியின் ஒரு நாள் பேப்பர் நிரம்பும் அளவுக்கு பேசலாம். விசாவில் இருக்கும் இந்தியர்களை துரத்தும் எண்ணமெல்லாம் இல்லை, அப்படி இருந்திருந்தால் 6 மாசத்தில் 3 வருட க்யூவை காலி செய்திருக்க மாட்டார்கள்.


இப்போ கட்டுரையில் சொல்லியிருப்பவற்றை பாக்கலாம்

1. //இந்தியப் பொருளாதார மேதையும் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றவருமான அமர்தியா சென்னுக்கு அமெரிக்க விருது வழங்கிப் பாராட்டிப் பேசும்போது மண்ணின் மைந்தருக்கு முன்னுரிமை என்பதை மீண்டும் தெளிவாக வலியுறுத்தியிருக்கிறார்.//

நானறிந்தவரையில் ஒபாமா அன்று அவ்வாறு கூறவில்லை. கட்டுரை ஆசிரியருக்கு அமெரிக்க நிலவரம்தான் தெரியாது, அடிப்படை ஆங்கிலம் கூடவா தெரியாது? இதோ அந்நிகழ்ச்சியில் ஒபாமா பேசியது இதுதான் - இதைப் படித்து விட்டு சொல்லுங்கப்பூ, அப்படி ஏதாவது அர்த்தம் வருதான்னு

///You create new possibilities for all of us. And that's a special trait. And it assigns you a special task. Because in moments of calm, as in

moments of crisis; in times of triumph, as in times of tragedy: you help guide our growth as a people. The true power of the arts and the

humanities is that you speak to everyone. There is not one of us here who hasn’t had their beliefs challenged by a writer’s eloquence; or their

knowledge deepened by a historian’s insights; or their sagging spirits lifted by a singer’s voice. Those are some of the most endearing and memorable moments in our lives. Equal to the impact you have on each of us every day as individuals is the impact you have on us as a society. And we are told we're divided as a

people, and then suddenly the arts have this power to bring us together and speak to our common condition.////

நான் தினமணி தலையங்கக் கட்டுரை ஆசிரியர் மாதிரி போகிற போக்கில் அடிச்சிவிட்டதாக நீங்க நினைக்கக் கூடாதில்லையா, இதோ வெள்ளை மாளிகையின் அதிகாரப் பூர்வ செய்தி

http://www.whitehouse.gov/blog/2012/02/13/president-obama-awards-2011-national-medals-arts-and-humanities-white-house

2. //அமெரிக்காவில், பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டு, பல நிறுவனங்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், முதலீட்டுச் சிக்கலில் உள்ள நிறுவனங்களை மீட்கும் திட்டம் கொண்டு வந்துள்ள ஒபாமா, இதை ஒரு நிபந்தனையாகவே அறிவித்தார்.

இந்தத் திட்டத்தின் கீழ் அரசின் நிதியுதவி, சலுகையைப் பெறும் நிறுவனங்கள் அமெரிக்க மண்ணில் அன்னியர்களுக்கு வழங்கப்படும் "தாற்காலிகப் பணி அனுமதி'யான எச்-1பி விசா பெற்றவர்களைப் பணிநியமனம் செய்யக்கூடாது என்பது நிபந்தனை. //

இந்த வரிகள் என்னை இக்கட்டுரை இரண்டாண்டுகளுக்கு முன்னர் எழுதப் பட்டு கிடப்பில் போடப் பட்டிருக்குமோ என்ற சந்தேகத்தை உண்டாக்குகிறது. ஏனெனில்
Fannie Mae & Freddie mac நிறுவனங்களுக்கென தனியே வந்த பெயில் அவுட் 183 பில்லியன் டாலர். இவை இரண்டும் வீட்டுக் கடன் கொடுத்துவிட்டு சிக்கலில் இருப்பவை, இவை இதுவரை 30 பில்லியன் டாலரை
திருப்பித் தந்துள்ளன

924 இதர நிறுவனங்களுக்கென வழங்கப் பட்ட பெயில் அவுட் தொகை 413 பில்லியன்
288 நிறுவனங்கள் வாங்கிய தொகையை திருப்பி தந்து விட்டன. 31 நிறுவனங்கள் முழுமையாக திருப்பா விட்டாலும் ஓரளுக்கு திருப்பித் தந்து விட்டன
இதுவரை 279 பில்லியன் டாலர் அளவுக்கு அசலும் 40 பில்லியன் டாலர் அளவுக்கு வட்டியும் (Divident, Interest, warrant etc) திருப்பித் தரப்பட்டுள்ளது.

இவ்வளவு நடந்தபின்னர், என்னவோ இப்பத்தான் ஒபாமா பணம் கொடுத்தா மாதிரியும் இன்னமும் இந்நிறுவனங்கள் ஒபாமாவின் கட்டுப் பாட்டில் இருப்பதுபோலவும் தேவையில்லாத பில்டப் எதுக்கு???

பணம் கொடுத்த போது ஒபாமா நிபந்தனைகள் விதித்தது உண்மைதான். வேலையில்லாதோரின் எண்ணிக்கை 10% ஆக இருக்க்கும் போது அவர் அப்படித்தான் பேச வேண்டும். அமெரிக்கரை வேலையிலிருந்து அனுப்பிவிட்டு அந்த இடத்துக்கு ஒரு H1B visaவில் இருப்பவரை வைக்கக் கூடாது, H1B visaவில் இருப்பவரை பணியில் அமர்த்தக் கூடாது என்று நிபந்தனைகள் விதிக்கப் பட்டன. இதுவரைதான் உலகுக்குத் தெரியும். உண்மை நிலவரம் என்ன தெரியுமா?

முதல் நிபந்தனைக்குக் காரணம் அதிக சம்பள அமெரிக்கரை வீட்டுக்கு அனுப்பிவிட்டு குறைவான சம்பளம் கொடுக்க ஆசைப்பட்டு விசாவில் இருப்பரை அமர்த்தக் கூடாதென்பதே. இது பெரும்பாலும் இந்தியர்களுக்குப் பொருந்தாது - ஏனெனில் ஒரு வேலைக்கு அமெரிக்கர் கேட்கும் சம்பளத்தை விட நம்மாள் கேட்கும் சம்பளம் அதிகம்

ரெண்டாவது - இந்த நிபந்தனை பணியமர்த்தல் அதாவது Employment க்குத்தான் பொருந்தும். இந்தியர்கள் பெரும்பாலும் Contracting அடிப்படையில்தான் இந்நிறுவனங்களில் வேலை செய்வார்கள், அவர்களுக்கு
பெரிய அளவில் பிரச்சனைகள் ஏற்படவில்லை (நெறய Contract கள் Terminate செய்யப் பட்டன - அவர்களில் பலருக்கு வேறு Contract கிடைத்தது). மேலும் ஒபாமா உதவி பெறும் நிறுவனங்கள் அங்கே இருந்த H1B மக்களை அனுப்பிவிட்டு அமெரிக்கர்களை வேலைக்கு எடுக்கச் சொல்லவில்லை. 10% அமெரிக்கர்கள் வேலையின்றி தவித்த போதும் பெரும்பாலான இந்தியர்கள் வேலையில் இருந்தார்கள்.

Bank of America உதவி பெற்ற ஒரு நிறுவனம். இங்கு வேலையை இழந்த ஒரு அமெரிக்கரையும் எனக்குத் தெரியும், கடந்த நான்காண்டுகளாக Contracting இல் இருந்து வரும் ஒரு H1B இந்தியரையும் எனக்குத் தெரியும்.

பணத்தைக் கொடுத்து விட்டு அரசாங்கம் கம்பெனியை தன் இஷ்டப் படி நடத்த விரும்புகிறது என்று குறை கூறியே பெரும்பாலான நிறுவனங்கள் பணத்தைத் திருப்பிக் கொடுத்தன.

3. //இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 1.95 லட்சமாக இருந்தது. இப்போது, வெறும் 65,000 பேருக்கு மட்டுமே தாற்காலிகப் பணி அனுமதி என்று மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கப்பட்டுள்ளது//

கொய்யால.... இது பரணிலிருந்து தூசி தட்டி எடுத்த கட்டுரைதான் போலிருக்கு. 1,95,000 H1B விசா கடேசியா கொடுத்தது 2003ல்.
1990 முதல் 1998 வரை இருந்த quota 65,000 ஆயிரம்தான்
1999 & 2000 ஆம் ஆண்டுகளில் 115000 விசாக்களும் 2001 முதல் 2003 வரை 1,95,000 விசாக்களும் வழங்கப்பட்டன, வேலைகளுக்கு ஆட்கள் தேவைப் பட்ட காரணத்தால் AC21 ( American Competitiveness in the Twenty-first century act ) என்ற விசேஷ சட்டம் இயற்றப் பட்டு அதிக விசாக்கள் வழங்கப் பட்டன. 2004 முதல் மறுபடியும் பழைய எண்ணிக்கையான 65,000 க்கு விசாக்களின் எண்ணிக்கை குறைக்கப் பட்டன.

H1B தவிர ஆயிரக்கணக்கான இந்தியர்கள் L Visa (Intra company transfer - Ex: Infosys India to Infosys US), F Visa (Students Visa) , Nurse களுக்கான விசா, R visa (கோவில் அர்ச்சகர்கள் - Religious workers) என்று பல விசாக்களில் அமெரிக்காவில் வேலை பார்க்கின்றனர். மேலும் பலர் ஒவ்வொரு வருடமும் வந்து கொண்டிருக்கின்றனர்

வருசத்துக்கு 20,000 H1B விசாக்கள் அமெரிக்காவில் மேல் படிப்பு படிக்க வந்தவர்களுக்கென தனியே வழங்கப் படுகிறது, அதுலயும் அதிகம் ஆட்டையைப் போடுவது நம்மாட்கள்தான்

உண்மை இப்படி இருக்கையில், தினமணியின் கட்டுரை ஒபாமா இந்தியர்களை விரட்டியடிக்க விசாக்களின் எண்ணிக்கையை குறைத்தது போல படம் போட்டிருப்பது எதுக்காகன்னு தெரியல.

4. // ஒரு லட்சம் பேர் மாணவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் கல்விக் கட்டணத்தைச் செலுத்தவும், வாழ்க்கைச் செலவுக்காகவும் பணியாற்றுகிறார்கள். தற்போது அமெரிக்கா இந்தப் புதிய சட்டத்தின் மூலம், அந்த வாய்ப்புக்குத்

தடை போட்டுள்ளது. ஆகவே, இனி அமெரிக்காவுக்குப் போய், வேலை செய்துகொண்டே படிக்கலாம் என்பவர்களின் கனவு இனி பகல்கனவுதான்.
புதிதாக மாணவர்கள் அங்கே செல்வது குறையும் என்றாலும், ஏற்கெனவே இத்தகைய பகுதிநேர வேலையை நம்பி அங்கே சென்ற மாணவர்களின் கதி என்னவாகும்? அதனால், ஏற்கெனவே அமெரிக்காவில் படித்துக்கொண்டிருக்கும்

மாணவர்களுக்கு மட்டுமாவது அவர்கள் தமது படிப்பை முடிக்கும் வரை, பணியாற்றவும், பணி வழங்கவும் அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்க அரசுக்குக் கோரிக்கை வைக்க வேண்டிய கடமை இந்திய அரசுக்கு உள்ளது.//

கட்டுரையில் இருப்பவற்றில் மிகத் தவறான தகவல் இதுதான். மேலே சொன்னவற்றில் பல விசயங்கள் மேம்போக்காகவும், திரித்துக் கூறப் பட்டவை, இந்த பாயிண்ட் அடிப்படையிலேயே தவறு.

M.S அல்லது வேறு மேல் படிப்பு படிக்க வரும் மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் மட்டுமே வாரத்துக்கு 20 மணி நேரம் வேலை செய்யலாம். கடுமையான சட்டதிட்டத்துக்கு உட்பட்டு வெகு அரிதாக சிலர் வெளியில் வேலை பார்க்கலாம்.
அந்த கண்டிஷன்கள் இங்கு தேவையில்லை என நினைக்கிறேன். மேலதிக தகவல் வேண்டுவோம் இங்கு தெரிந்து கொள்ளலாம்

அமெரிக்காவில் மேல் படிப்பு படித்த வெளி நாட்டவரை அமெரிக்காவிலேயே (அமெரிக்காவுக்கே என்று பொருள் கொள்க) வேலை செய்ய வைக்க அந்நாடு விரும்புகிறது. ஒபாமா ஆட்சியில்தான் M.S முடித்த மாணவர்களுகான OPT (Optional Practical Training)12 மாதங்களிலிருந்து 29 மாசமாக உயர்த்தப்பட்டது. இதிலும் அதிகம் பயனடைவது இந்தியர்களே. பெரும்பாலான மாணவர்கள் OPT யில் வேலை தேடிக்கொண்டு பின்னர் H1B விசா வாங்கி இங்கேயே செட்டில் ஆகின்றனர். ஒபாமா ஆட்சியில் இப்படியாக சலுகைகள் அறிவிக்கப் பட்டனவே தவிர மாணவர்களுக்கு(ம்) எந்த வித புதிய தடையும் விதிக்கப் படவில்லை.

இங்கு முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய விசயம், மாணவர்களுக்கு Work Visa கிடையவே கிடையாது, நம்மூர் மாணவர்கள் வெளியில் இந்தியர்களில் நிறுவனங்களிலும் உணவகங்களிலும் Cash Job செய்கின்றனர்.இதில் எதுவும் மாறி விடவில்லை. கொய்யால சுத்தமா அடிப்படை அறிவு / ஞானம் இல்லாமல் கட்டுரை எழுதிவிட்டு பயபுள்ள இந்திய அரசுக்குள்ள கடமையைப் பத்தியெல்லாம் பேசுது!!!

கவிதைக்குப் பொய் அழகு என்றார் வைரமுத்து, அது கட்டுரைக்கும் பொருந்தும் என தினமணி நினைக்கிறது போல இருக்கு.

அமெரிக்கா உலகில் வாழத்தக்க இடங்களில் முதன்மையானதல்ல, சொல்லப் போனால் முதல் பத்து நாடுகளில் அமெரிக்கா இருக்குமா என்பதே சந்தேகம்தான். அமெரிக்காவின் மீது வைக்க விமர்சனங்கள பலவுண்டு, என் போன்றோரைக் கேட்டால் நாங்க எழுதிக் கொடுத்துட்டுப் போறோம், அதை விட்டுட்டு தினமணிக்கு இந்த பொழப்பு தேவைதானா?

Wednesday, February 8, 2012

நான் சின்னப் பையனாக இருந்த போது

நண்பர் ஈரோடு கதிர் எழுதிய இந்த இடுகையே என் இடுகைக்கு இன்ஸ்பிரேஷன்

1. போன் மணி அடிச்சா பேச வெளியிலிருந்து உள்ளே ஓடுவார்கள், இப்போ சிக்னல் கிடைக்கலேன்னு போனை எடுத்துக்கிட்டு வெளியே ஓடி வர்றாங்க

2. போன் வாங்க, போன் கனெக்‌ஷன் வாங்க ஆபீஸுக்கு நடையா நடக்கணும், கீரைக் கட்டு ஃப்ரெஷா வீட்டுக்கு வந்து தருவாங்க, இப்ப போனையும் போன் கனெக்‌ஷனையும் தெருவில் வைத்து விக்கறாங்க, கீரைக் கட்டை ஏசி வச்ச கடைக்குப் போயி வாங்கறாங்க

3. (தரமான) கல்வி இலவசம், கால்குலேட்டர் விலையே எங்க லெவலுக்கு அதிகம், இன்னிக்கு கம்ப்யூட்டர் கொள்ளை மலிவு, கல்விக் கட்டணமோ உச்சாணிக் கொம்பில்

4. பள்ளிகள் குழந்தைகளுக்கு ABCD சொல்லித்தருவது தங்களின் கடமை என நம்பின

5. அப்பாக்கள் யாரும் ஜிம்முக்கு போனதில்லை, இருப்பினும் குண்டாக இருந்ததில்லை

6. அலுவலகம் / பள்ளியிலிருந்து வந்த பின் டி வி பார்க்க நெறய நேரமிருந்தது, ஆனா பாக்க ரெண்டே ரெண்டு சானல்கள்தான் இருந்தன

7. Star Birthday வுக்கு கோவிலில் அர்ச்சனையும் English Birth Day வுக்கு வகுப்புத் தோழர்களுக்கு 50 காசு Eclairs உம் தான் அதிக பட்ச பிறந்த நாள் கொண்டாட்டம்

8. தீபாவளிக்கு சட்டைப் பையில் காசெடுத்துப் போயி பை நிறைய பட்டாசு வாங்கி வருவோம்

9. ஆங்கிலத்தில் அதிகம் உபயோகிக்கப் பட்ட எழுத்தாக E இருந்தது

10. Apple உம் Mouse உம் முறையே பழம் மற்றும் ஒரு உயிரினமாக அறியப் பட்டிருந்தன

11. இன்சூரன்ஸ் பாலிசிகள் முதலீடுகள் என்ற பெயரில் ஏமாற்றி விற்கப் படவில்லை

12. கிட்டத்தட்ட அனைத்து மாணவர்களுக்கும் “துப்பார்க்கு துப்பாய” குறள் சொல்லத் தெரிந்திருந்தது

13. ரெண்டு ரூபாய் ஐம்பது காசுகளுக்கு RMS பந்தும் 25 ரூபாய்க்கு Vishwas பேட்டும் தான் விலை மதிப்பு மிக்க விளையாட்டுப் பொருட்கள்

14. டபுள் கேசட் டேப் ரெக்கார்டர்தான் Most Sophisticated Audio device

15. நண்பர்கள் வீட்டுக்கு போவதற்கு முன் போன் பண்ணி நீ ஃப்ரியா இருக்கியா இப்போ வரலாமான்னு கேட்டதேயில்லை

Monday, October 17, 2011

கலைச் சேவை

2010ம் ஆண்டின் வசந்த காலத்தில் ஒரு அழகிய மாலைப் பொழுது. வேலை முடிந்து வீட்டுக்கு வந்து முகம் கழுவி ஜிம்முக்கு செல்ல எத்தனித்த போது அலறியது அலைபேசி. எடுத்துப் பேசிக் கொண்டே ஜிம்மை நோக்கி நடந்தேன். நான் நியூ ஜெர்சியிலிருந்து இளா பேசறேங்க, "சீமாச்சு" வாசன் நம்பர் குடுத்தார் என்றது அந்தப் பக்கக் குரல். சிலரை முதல் முறை பார்க்கும் போதே காரணம் ஏதுமின்றி பிடித்துப் போகும், இளாவுடன் முதல் முறை பேசினாலே
அவரைப் பிடித்துப் போகும் - அப்படிப்பட்ட நட்பான பேச்சு அவருடையது. நட்பு கொள்ளத் தூண்டியது நண்பர்களானோம்.

நான் வேலை செய்யும் நிறுவனத்தில் அவர் சேர்ந்ததும்,அதுக்காக பாஸ்டன் மாநகருக்கு மாறி வந்ததும்,பின்னர் நாங்களிருவரும் ஒரே குடியிருப்பில் இருப்பதும்,எங்களுக்கு குழந்தை பிறந்த போது Support சிஸ்டத்தில் அவர் முக்கியமானவராக இருந்ததும் வரலாறு.

அன்று மட்டும் அந்த போன் கால் வராமல் இருந்திருந்தால், தமிழ்த் திரையுலகம் ஒரு நல்ல கலைஞனை அடையாளம் காணாமலே போயிருக்கும் - இது எனக்கே ரொம்ப ஓவரா இருக்கு, எனவே நேர மேட்டருக்குப் போயிடுவோம்.


ஒரு நாள் இளா போன் பண்ணி ஷார்ட் ஃபிலிம் ஒண்ணு பண்றோம் நடிக்கிறீங்களா என்றார். என்ன விளையாடறீங்களா இளா, எனக்கு நடிக்கவெல்லாம் வராது என்றேன். விடாக் கண்டனாக அவரோ யார் யாரோ நடிக்கறாங்க, நீங்க ஏன் நடிக்கக் கூடாது மேலும் நீங்க பண்ணப் போறது "சார் போஸ்ட்" அளவுக்கு சின்ன ரோல்தான் என்றெல்லாம் சொல்லி சம்மதிக்க வைத்து விட்டார்.

ஒன் லைனை மெருகேத்தினா திரைக் கதை வரணும், எங்க விசயத்தில் வேற கதை வந்தது. மொதல்ல நாங்க பேசின சப்ஜெக்ட்டை விட இது கேட்சியா இருந்ததால் இதையே முடிவு பண்ணோம். எங்களுக்குள் இருந்த புரிந்துணர்வு ரொம்ப உதவியா இருந்தது. இந்த டயலாக் நல்லா இல்லை நான் பேசமாட்டேனெல்லாம் எங்க டைரடக்கர்கிட்ட சொல்லலாம் - அவ்ளோ நல்லவர் அவர்.

இந்த குறும்படம் எங்களுக்கு முதலிரவு மாதிரி - பங்கேற்று இருக்கும் மூவருக்கும் (இளா, நான் மற்றும் ஜெயவேலன்) இதுதான் முதல் அனுபவம். எனவே பிழைகளை பொருத்தருள்க, அடுத்த படத்தில் பிழைகள் வெளியில தெரியாத மாதிரி பாத்துக்கறோம்.

படம் எடுக்க முடிவு பண்ண நாளிலிருந்து ஊண் உறக்கம் இல்லாமல் படத்தைப் பத்தியே யோசித்து, பேசி,கதா பாத்திரமாகவே மாறி, படம் முடிவதற்குள் பத்து கிலோ உடல் எடை குறைந்து - இப்படியெல்லாம் சொல்லணும்னு ஆசைதான் ஆனா விளையாட்டா பேசி, விளையாட்டா எடுத்த படம் இதோ உங்க பார்வைக்கு.




படத்தைப் பார்த்தாச்சா? பாராட்ட நினைப்பவர்கள் எல்லாம் பின்னூட்டத்தில் பாராட்டலாம், திட்டணும்னு நெனச்சா என்னையும் இளாவையும் கோத்து விட்ட "சீமாச்சு" வாசனையோ என்னையெல்லாம் நடிக்க வைக்கலாம்னு நெனச்சஇளாவையோ தாராளமா எவ்வளவு வேணா திட்டலாம். ரெண்டு பேரும் ரொம்ப நல்லவங்க தப்பாவே எடுத்துக்க மாட்டாங்க. இதெல்லாம் போதாது காரி துப்பியே ஆகணும்னு நெனைக்கறவங்க வசதிக்காக:



வேறு எந்த பேனரிலும் ஒரு வருஷத்துக்கு நடிக்கக் கூடாதுன்னு டைரடக்கர் கட்டளை. எனவே காலேஜ் சப்ஜெக்ட் ஹீரோ, அமெரிக்க மாப்பிள்ளை போன்ற எந்த ரோல்களையும் ஒத்துக் கொள்ள முடியாத கையறு நிலையில் இருக்கேன். நாந்தான் நடிக்கணும் இல்லைனா படமே எடுக்க மாட்டேன்னு யாரும் அடம் பிடிக்க வேண்டாம், என்னால தமிழ்த் திரையுலகம் ஒரு வருடம் ஸ்தம்பித்துப் போவதை நான் அனுமதிக்க முடியாது.. நீங்க கல்லை எடுக்கறதுக்கு முன்ன நான் அடுத்த ஷூட்டிங்குக்கு ஜூட்...

Sunday, August 21, 2011

தாய்மை தானம்

வியாழக் கிழமை சாயந்திரம் நாலு மணிக்கு அலுவலகத்தில் மும்முமராய் வேலை செஞ்சிக்கிட்டு இருந்த போது (சொன்னா நம்பணும், சிரிக்கப் படாது), ”Wife Calling" என்றது கைப்பேசி. சீக்கிரம் வீட்டுக்கு வந்துடுவியா? கட் ஆஃப் டையத்துக்கு முன்னாடி கொரியர் அனுப்பனும், நாளைக்குள்ள போய்ச் சேரலேன்னா சனி ஞாயிறு கொரியர் ஆபீஸ்ல தங்கிடும். யாருக்கும் உபயோகம் இல்லாமல் போயிடும், பட்ட கஷ்டம் வீண் என்று பாடம் நடத்தப் பட்டது.

ஆபிஸ்லேருந்து வீட்டுக்குப் போக பத்து நிமிஷம், பார்சல் எடுத்துக்க ஒரு அஞ்சு நிமிஷம் வீட்லேருந்து ஒரு கொரியர் ஆபிஸ் ஒரு அஞ்சு நிமிஷம் எப்படியும் ஒரு இருபது நிமிசத்தில் போயிடலாம் இன்னும் நெறய நேரமிருக்குன்னு கணக்கு போட்டது கார் டிரைவர் மனசு.மவனே இதுல ஏதாச்சும் மிஸ் ஆகி பல்பு வாங்கினா ஆப்பு பலமா இருக்கும்டி என்று எச்சரித்தது “ப்ராக்டிகல் புருஷன்” மனசு. ரெண்டாவது மனசு ஜெயித்ததுன்னு தனியா வேற சொல்லணுமாக்கும். உடனே Fedex ஆபீஸுக்கு போன் பண்ணி cut off time என்னன்னு கேட்டேன், ஆறரை மணி என்றது அந்த முனையில் இருந்த வெள்ளையம்மா. சீக்கிரமா கொண்டாந்தா சீக்கிரமா அனுப்பிடுவீங்களான்னு கேணத்தனமா கேட்டேன். முழு கண்டெய்னர் அளவுக்கு பொருள் இருந்தாத்தான் தனி ஷிப்மெண்ட்னு நக்கலா விளக்கமான்னு புரிஞ்சிக்க முடியாத ஒரு தொனியில் பதில் வந்தது. “நன்றி சொல்ல உனக்கு வார்த்தையில்லை எனக்கு”ன்னு சொல்லிட்டு ஆபிஸ் வேலைகளை முடிச்சு அஞ்சு மணிக்கு கெளம்பி வீட்டுக்குப் போனா பார்சல் தயாராகலை. ஏன்னு கேட்டதுக்கு தங்கமணி, உன்னைய நம்பி நான் பேக் பண்ணி வச்சிட்டு உக்காந்திருந்தா நீ அன்னிக்குத்தான் ஆணி அதிகம்னு சீன் போட்டு லேட்டா வருவ , என்னிக்கு நான் தயாரா இல்லையோ அன்னிக்குத்தான் நீ சரியான நேரத்துக்கு வருவ, அதனாலதான் அதை ஃபிரீசர்லேந்து எடுக்கலன்னு சொன்னா. அரக்க பறக்க ஃப்ரீசர் பேக்கை எடுத்து பேக் பண்ணி, பிரிபெய்டு லேபில் ஒட்டி பார்சலை எடுத்துக்கிட்டு ஓடினேன்.

Fedex ஆபிஸ் போன பொது மணி ஆறு. கவுண்டரில் இருந்த உயர்ந்த மனிதனிடம் இந்த பார்சல் நாளைக்கு கண்டிப்பா போயிடுமா அதில் உனக்கு ஏதாவது சந்தேகம் இருந்தா இப்பவே சொல்லிடு, இப்ப போயிட்டு திங்கக் கிழமை திரும்ப வர்றேன்னு சொன்னேன். Over Night Shipping கண்டிப்பா நாளைக்குப் போயிடும், ஆமா எதுக்கு இவ்வளவு கேக்கறே, அப்படி அதுல என்னதான் இருக்கு தங்கம் அல்லது ஏதாவது விலை உயர்ந்த பொருள் அனுப்பறியான்னு கேட்டான். அதுக்கு நான் இதுக்குள்ள இருப்பதுக்கு விலையே நிர்ணயம் பண்ண முடியாது, தங்ககத்தை விலை கொடுத்து வாங்கிக்கலாம் இதுக்குள்ள இருப்பதை நீயோ நானோ என்ன பண்ணாலும் உருவாக்க முடியாது என்றேன். Hmm, what is so precious 'bout it என்று என்று கேட்டுக்கொண்டே பார்சலின் மீது இருந்த National Milk Bank பேரைப் பார்த்த அவர் ஒ உள்ளே தாய்ப்பால் இருக்கா? இப்ப புரியுது உன் அக்கரைக்குக் காரணம் என்றார். உன் மனைவிக்குத்தான் எவ்வளவு தாராள குணம் அவருக்கு என் வாழ்த்துக்களைத் தெறித்துவிடு, தாய்ப்பாலை தானம் செய்யும் வாய்ப்பு எல்லாருக்கும் கிடைப்பதில்லை, கிடைப்பவர்கள் எல்லோரும் தானம் செய்வதில்லை என்றார்.

அதுவரை இந்த விஷயத்தில் அதிக ஆர்வம் காட்டாத எனக்கு அவர் சொன்னதைக் கேட்டதும் பெருமை பிடிபடலை. ஆம் அந்த பார்சலில் இருந்தது 250 Ounce கிட்டத்தட்ட 7.5 லிட்டர் தாய்ப்பால். அது ஒரு பிறந்த குழந்தைக்கு இரண்டு வாரங்களுக்கான உணவு. தாய்ப்பாலின் மகத்துவம் பற்றி இம்சை அரசி இங்கே எழுதியிருக்கிறார்.பிறந்து ஆறு மாதங்களுக்கு வெறும் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் நல்ல நோய் எதிர்ப்பு சக்தி பெறுகின்றன என பல மருத்துவ குறிப்புகள் கூறுகின்றன. குழந்தை பெற்ற தாய்மார்களில் பலருக்கு தேவையான அளவுக்கு பால் சுரப்பதில்லை, அதில் ஒரு சில குழந்தைகளின் பசியை என் மனைவி போக்கியிருக்கிறாள், அதை கொண்டு சேர்த்த புண்ணியத்தை நான் கட்டிகொண்டேன். பகிர்ந்தளிக்கும் அளவுக்கு வழங்கிய கடவுளுக்கு நன்றியையும, பகிர்ந்த என் மனைவிக்குப் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


இது கண்டிப்பா தம்பட்டம் அடிக்க அல்ல. ரத்த தானம், கண்தானம், உறுப்பு தானம் பற்றி நம்மில் பலருக்குத் தெரியும், பலர் செய்தும் வருகிறோம். தாய்ப்பால் தானம் பற்றிய அறிதல் மிகக் குறைவு, அதற்காகவே இப்பதிவு. இதைப் படிக்கும் யாரேனும் ஒருவர் இன்னொரு தாய் தன்னிடம் உபரியாக இருக்கும் தாய்ப்பாலை தானம் செய்யத் தூண்டினால் அதுவே போதும்.

இதுக்காக என் மனைவி, National Milk Bank இடம் கேட்டது எங்க மகள் பெயரில் ஒரு ThankYou Note. தனக்கு மட்டுமே உரித்தான சொத்தை அவள் சக குழந்தைகளுடன் பகிர்ந்து கொண்டு இருக்கிறாள், இது அவளுக்கு இன்று புரியாது. விவரம் புரியும் போது விளக்கி இந்த ThankYou Note காட்ட எண்ணம். "சந்தோஷங்களில் பெரிய சந்தோஷம் அடுத்தவங்களை சந்தோஷப் படுத்திப் பாக்கறதுதான்" இதை எங்க மகளின் மனதில் விதைக்க எண்ணியுள்ளோம்,
நீ பிறந்ததிலிருந்தே உனக்கானதை பகிர்ந்தவள் என்று சொல்லி புரியவைக்க இது உதவியா இருக்கும்.

அமெரிக்காவில் இதை National Milk Bank என்ற சேவை நிறுவனம் செய்து வருகிறது (www.nationalmilkbank.org). நீங்க தயாரா இருந்தாலும் அவர்கள் உடனே பெற்றுக் கொள்வதில்லை, முதலில் தாயின் ரத்தத்தைப் பரிசோதனை செய்து பாக்கறாங்க, பின்னர் தாயின் மருத்துவரிடமும் குழந்தையின் மருத்துவரிடமும் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற்று அவங்களுக்கு அனுப்பனும். அப்புறம்தான் ஃப்ரீசர் பேக்கை அனுப்புவாங்க. குறிப்பிட்ட அளவு பால் சேர்ந்ததும் அவங்க செலவில் கொரியர் அனுப்பிடலாம். யாரிடமிருந்து பெறப்பட்டது யார் யாருக்கு வழங்கப் பட்டது போன்ற தகவல்கள் ரகசியமாக வைக்கப் படுகின்றன.

வாய்ப்பும், விருப்பமும் இருப்பவர்கள் உபரி தாய்ப்பாலை தானமாக வழங்கலாம், வாய்ப்பில்லாதவர்கள் இந்நிறுவனத்துக்குப் பொருளதவி வழங்கலாமே !!!

Saturday, July 2, 2011

அமெரிக்கா வந்து எவ்ளோ நாள் ஆச்சு?

நண்பர் இளா கொசுத்தொல்லைன்னு ஒரு இடுகை போட்டிருந்தார். அதில் NRI மக்களை இந்தியா பார்க்கும் விதத்தில் இருக்கும் மாற்றங்களை சொல்லியிருந்தார். அதே மாதிரி அமெரிக்க வாழ் NRI மக்கள் எப்படி மாறிப் போகிறார்கள் என்று ஓர் இடுகை.

மொச பிடிக்கிற நாயை மூஞ்சை பார்த்தா தெரியும்னு சொல்றது மாதிரி NRI மக்களின் செய்கைகளை வச்சு அவங்க அமெரிக்கா வந்து எவ்ளோ நாள் ஆச்சுன்னு
சொல்லிடலாம்.

ஆங்கிலம் : அமெரிக்கா வந்து இறங்கியதும் முதல் ஷாக் இவங்களோட உச்சரிப்பு. இங்கிலிபீசில நான் சேக்ஸ்பியர் லெவல்ன்னு சொல்லிக்கிட்டு இருந்தவனுக்கு அமெரிக்கர்களின் ஆங்கில உச்சரிப்பு கிர்ர்ரட்டிக்கும் அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா புரிஞ்சிக்கிட்டு அத்தோட நிக்காமல் அமெரிக்கா நுனி நாக்கு ஆங்கிலம் பேச முயன்று கேவலமா தோத்துப் போவாங்க. (அமேரிக்க அக்சென்ட் வெகு சிலருக்கே வரும், இங்கே பிறந்த / வளரும் குழந்தைகள் அட்டகாசமா பேசும்).

சரி நமக்கு உச்சரிப்புதான் வாய்க்கலை, அவர்கள் உபயோகிக்கும் பதங்களை உபயோகிக்க ஆரம்பிப்பது அடுத்த லெவல்.

யாராவது How Are you ன்னு கேட்டா I am fineன்னு சொல்லியே பழக்கப்பட்ட நாம I am Good என்று சொல்ல ஆரம்பிப்போம். ஏதாவது ஒரு விசயத்துக்கு தயாரான்னு கேட்டா I am Ready என்று சொல்லாமல் I am all set என்றே சொல்லுவோம்.

நண்பர்களை டேய் என்று அழைக்காமல் DUDE என்று அழைக்கத் தொடங்கும்போதும் இந்தியாவில் இருப்பவரிடம் தொலை பேசும்போது Sounds Good என்று சொல்லி மறு முனையில் இருப்பவர் நம்ம குரல் அவ்ளோ நல்லாவா இருக்குன்னு குழம்பி அவரை சுத்தலில் விடும்போது பார்ட்டி அமெரிக்கா வந்து சில பல வருஷங்கள் ஆச்சுன்னு தெரிஞ்சிக்கலாம்.

சாப்பாடு : அரிசியும் கோதுமையுமே மனுஷன் சாப்பிட உகந்தவை. சாலட் என்பது இலையும் தழையும், அது ஆடு மாடு சாப்பிடும் வஸ்து, மேலும் வெஜிடபிள் சாலட் என்பது முழு சாப்பாட்டுக்கு முன் சாப்பிடுவது, பர்கர் என்பது
இரண்டு முழு சாப்பாடுகளுக்கு இடையில் பொழுது போக சாப்பிடுவது - இதெல்லாம் ஊருக்கு வந்த புதுசில் அடிக்கும் கமெண்டுகள்.

தினமும் ஆபிஸுக்கு வீட்டு சாப்பாடு எடுத்துப் போக முடியல, பக்கத்தில இந்தியன் ரெஸ்டாரண்ட் எதுவும் கிடையாது- சூப், சாண்ட்விச், பர்கர், சாலட் இதுல ஏதாவது சாப்பிட்டு அட்ஜஸ்ட் பண்றேன் - இது வந்து ஓரிரு வருஷங்கள் ஆன நிலை.

விடுமுறை நாட்களிலும், நண்பர்கள் வீட்டுக்குப் போனாலும் - I eat only Salad and Soup for Lunch and Dinner, Rice and Wheat are full of Carbs you know!!!இப்போ ஐயா அமெரிக்கன் ஆகிட்டாருன்னு அர்த்தம்.


பண விஷயம்:

சில்லரைக் காசு அமெரிக்கா வந்த புதுசில் குழம்ப வைக்கும் இன்னொரு விசயம் - நாணயங்கள்.

ஊருக்குப் புதுசு : ஐந்து செண்டுக்கும் பத்து செண்டுக்கும் வித்தியாசம் தெரியாத நிலை, அதிலும் முக்கியமா ஐந்து செண்ட் பத்தை விட பெரிசா இருப்பது இன்னும் குழப்பும்.

ஓரிரு வருஷங்கள் ஆன பின்: அமெரிக்க நாணயங்களின் ஷேப்பும் மதிப்பும் நல்லாவே பழக்கமாகியிருக்கும், அத்துடன் பென்னியும் நிக்கலும் டைமும் நாலணா எட்டணா போல பழகியிருக்கும்.

அமெரிக்காவில் செட்டில் ஆயாச்சு : தெருமுனைக் கடைகளில் தரும் மீதப் பணத்தில் ஒரு செண்ட்களை எடுக்காமல் விட்டு விட்டு வர ஆரம்பிக்கும் போது அமெரிக்காவில் செட்டில் ஆயாச்சுன்னு தெரிஞ்சிக்கலாம்.

$ to ரூபாய் :

ஊருக்குப் புதுசு : எல்லாப் பொருட்களின் விலையையும் ரூபாயில் கன்வெர்ஷன் செய்து கவலைப் படுவது அமெரிக்கா வந்ததும் வரும் ஹாபி. ஒரு ப்ளேட் இட்லி 250 ரூபாயா? ஒரு தோசயின் விலை 500 ரூபாயா என்று சரியா சாப்பிடதா பலருண்டு இங்க.

ஒரிரு வருஷங்கள் ஆச்சு : கன்வெர்ஷன் மோகம் போயாச்சு. Your home is where you live என்பதை நம்பத்தொடங்கி பொருட்களை சகஜமாக வாங்கத் தொடங்கியிருப்போம்.

செட்டில்ட் இன் அமெரிக்கா : இவங்களை இந்திய விசிட்டின் போது தெரிஞ்சிக்கலாம் - அங்கு துணிமணி வாங்கும் போதோ, கலைப் பொருள் வாங்கும் போதோ - ஆயிரம் ருபாய் அப்படினா கிட்டத்தட்ட இருபது டாலர் அப்படின்னு சொன்னா பார்ட்டி அமெரிக்க செட்டில்ட்னு தெரிஞ்சிக்கணும்.


வீடு தேடும் படலம்:

அமெரிக்கா வந்திறங்கியது தேடும் அப்பார்ட்மெண்டில் நாம் எதிர்பார்க்கும் விசயங்கள் : வாடகை கம்மியாகவும் இந்தியர்கள் நிறையவும் இருக்கும் குடியிருப்பு, ட்ரெயினுக்குப் பக்கத்தில் இருக்கணும் (அப்பத்தான் கார் இல்லாம காலத்தை ஓட்ட முடியும்), இந்தியக் கடை மற்றும் வால்மார்ட் அருகில் இருப்பது அவசியம்.

வாடகை அதிகமானாலும் பரவாயில்லை- நல்ல தரமான அப்பார்ட்மெண்ட் வேணும், காரில் ஆபிஸ் போய் வர வசதியா இருக்கணும், தேசிக்கள் அதிகமா இல்லாம இருக்கணும் (ஒரே பாலிடிக்ஸ் யூ நோ!!)- இப்படியெல்லாம் டிமாண்ட் வச்சா அமெரிக்கா வந்து ஓரிரு வருஷங்கள் ஆச்சுன்னு அர்த்தம்.

ரியல் எஸ்டேட் ப்ரோக்கரிடம் மூணு நாலு லட்ச டாலர் விலைக்கு நல்ல வீடு பார்க்கச் சொல்லி - நல்ல டவுனா இருக்கணும், Excellent School District, க்ரைம் ரேட் கம்மியா இருக்கணும், Unemployment, diversity அப்படின்னு பெரிய Requirement லிஸ்ட் கொடுத்தால் அமெரிக்காவில் மொத்தமா செட்டில் ஆயாச்சுன்னு அர்த்தம்.

விசா: வாழ்க்கை ஒரு வட்டம் என்பதற்கு இந்தியர்களும் அமெரிக்கக் குடியுரிமையும் சிறந்த உதாரணம்.

இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மையான பொட்டி தட்டும் மக்களின் கனவு H1B Visa. அமெரிக்கா வந்திறங்கியதும், ஷார்ட் டெர்ம் விசிட்டை லாங் டெர்ம் ஆக்குவதற்கு எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப் படும்

விசாவும் நீண்ட நாள் தங்கும் ஆசையும் நிறைவேறியதும் அடுத்த இலக்கு பச்சை அட்டை (Green Card) மிக நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட வரிசையில் இணைந்து இதற்காக பலவருடங்கள் காத்திருப்பது இடைப்பட்ட நிலை.

பச்சை அட்டை கிடைத்து ஐந்தாண்டுகளில் அமெரிக்கக் குடியுரிமை அடுத்த இலக்கு. அமெரிக்கா வந்து பத்தி பதினைந்து ஆண்டுகள் விசாவையும், பச்சை அட்டையையும், குடியுரிமையும் துரத்தி கடேசில எல்லாம் கிடைச்சப்புறம், செட்டிலானபின், I am going back to India for Good என்பது உச்சகட்டக் கொடுமை.

நான் இப்போது பெரும்பான்மையான விசயங்களில் ரெண்டாவது கேட்டகரியில் இருக்கிறேன்.


இவை தவிர நீங்க நினைக்கும் மத்த விசயங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்

Thursday, March 17, 2011

என் வாழ்வில் இன்னுமொரு பெண்

காத்து காத்து கண்கள் பூத்திருந்தேன் நீ வருவாயென !! பூத்து பூத்து புன்னகை சேர்த்து வைத்தேன் நீ வருவாயென!!
வந்தாயடி என் வாழ்வின் வசந்தமாக.. வாழ்வாயடி நீ வளமனைத்தும் பெற்றவளாக..
மூன்றாவது முக்கியப் பெண்ணடி நீ என் வாழ்வில்.. மூன்றுமே முத்துக்களடி என்னளவில்..
பத்து மாதம் தாய் பொருத்தாள் உன் பாரம், இனி நீதானடி என் வாழ்வின் ஆதாரம்..
இத்தனை நாள் பொறுமை காத்தோமடி உன்னைக் காண.. இனி நீண்ட நாள் வேண்டாமடி உன் பெருமைகள் காண.
என் மாதிரி உன் மாதிரி நீ ஆக ஆசையில்லை கண்ணே- நீ ஆக வேண்டியது உலகுக்கே முன் மாதிரி..
ஆசையோடு உனக்கிட்ட பேர் ஸ்ரீஹிதா, சந்தோஷங்களை இனி நீ அள்ளித்தா..


சோழர் பரம்பரையில் மற்றுமொரு MLA. முதல் குழந்தையாக பெண்ணைப் பெற்ற நீண்ட பதிவர்கள் வரிசையில் இன்று நான். நானும் என் மனைவியும் எங்க முதல் குழந்தையை எதிர் பார்த்திருந்தது உங்களில் சிலருக்குத் தெரியும். இன்று உதயமானது எங்கள் சொர்க்கம்.
பெண் குழந்தைக்கு ஸ்ரீஹிதா ஸ்ரீராம் என்று பெயரிட்டிருக்கிறோம். ஸ்ரீஹிதாவின் முதல் புகைப் படம் உங்கள் பார்வைக்கு..



ஹிதா வரும் காலத்தில் என்னவாக வேண்டுமானாலும் ஆகட்டும். நல்ல உள்ளங்களின் வாழ்த்துக்களோடு நேர்மையான,நல்ல மனுஷியாக அவளை வளர்ப்போம்.