நண்பர் ஈரோடு கதிர் எழுதிய இந்த இடுகையே என் இடுகைக்கு இன்ஸ்பிரேஷன்
1. போன் மணி அடிச்சா பேச வெளியிலிருந்து உள்ளே ஓடுவார்கள், இப்போ சிக்னல் கிடைக்கலேன்னு போனை எடுத்துக்கிட்டு வெளியே ஓடி வர்றாங்க
2. போன் வாங்க, போன் கனெக்ஷன் வாங்க ஆபீஸுக்கு நடையா நடக்கணும், கீரைக் கட்டு ஃப்ரெஷா வீட்டுக்கு வந்து தருவாங்க, இப்ப போனையும் போன் கனெக்ஷனையும் தெருவில் வைத்து விக்கறாங்க, கீரைக் கட்டை ஏசி வச்ச கடைக்குப் போயி வாங்கறாங்க
3. (தரமான) கல்வி இலவசம், கால்குலேட்டர் விலையே எங்க லெவலுக்கு அதிகம், இன்னிக்கு கம்ப்யூட்டர் கொள்ளை மலிவு, கல்விக் கட்டணமோ உச்சாணிக் கொம்பில்
4. பள்ளிகள் குழந்தைகளுக்கு ABCD சொல்லித்தருவது தங்களின் கடமை என நம்பின
5. அப்பாக்கள் யாரும் ஜிம்முக்கு போனதில்லை, இருப்பினும் குண்டாக இருந்ததில்லை
6. அலுவலகம் / பள்ளியிலிருந்து வந்த பின் டி வி பார்க்க நெறய நேரமிருந்தது, ஆனா பாக்க ரெண்டே ரெண்டு சானல்கள்தான் இருந்தன
7. Star Birthday வுக்கு கோவிலில் அர்ச்சனையும் English Birth Day வுக்கு வகுப்புத் தோழர்களுக்கு 50 காசு Eclairs உம் தான் அதிக பட்ச பிறந்த நாள் கொண்டாட்டம்
8. தீபாவளிக்கு சட்டைப் பையில் காசெடுத்துப் போயி பை நிறைய பட்டாசு வாங்கி வருவோம்
9. ஆங்கிலத்தில் அதிகம் உபயோகிக்கப் பட்ட எழுத்தாக E இருந்தது
10. Apple உம் Mouse உம் முறையே பழம் மற்றும் ஒரு உயிரினமாக அறியப் பட்டிருந்தன
11. இன்சூரன்ஸ் பாலிசிகள் முதலீடுகள் என்ற பெயரில் ஏமாற்றி விற்கப் படவில்லை
12. கிட்டத்தட்ட அனைத்து மாணவர்களுக்கும் “துப்பார்க்கு துப்பாய” குறள் சொல்லத் தெரிந்திருந்தது
13. ரெண்டு ரூபாய் ஐம்பது காசுகளுக்கு RMS பந்தும் 25 ரூபாய்க்கு Vishwas பேட்டும் தான் விலை மதிப்பு மிக்க விளையாட்டுப் பொருட்கள்
14. டபுள் கேசட் டேப் ரெக்கார்டர்தான் Most Sophisticated Audio device
15. நண்பர்கள் வீட்டுக்கு போவதற்கு முன் போன் பண்ணி நீ ஃப்ரியா இருக்கியா இப்போ வரலாமான்னு கேட்டதேயில்லை
Showing posts with label மொக்கை. Show all posts
Showing posts with label மொக்கை. Show all posts
Wednesday, February 8, 2012
Saturday, July 2, 2011
அமெரிக்கா வந்து எவ்ளோ நாள் ஆச்சு?
நண்பர் இளா கொசுத்தொல்லைன்னு ஒரு இடுகை போட்டிருந்தார். அதில் NRI மக்களை இந்தியா பார்க்கும் விதத்தில் இருக்கும் மாற்றங்களை சொல்லியிருந்தார். அதே மாதிரி அமெரிக்க வாழ் NRI மக்கள் எப்படி மாறிப் போகிறார்கள் என்று ஓர் இடுகை.
மொச பிடிக்கிற நாயை மூஞ்சை பார்த்தா தெரியும்னு சொல்றது மாதிரி NRI மக்களின் செய்கைகளை வச்சு அவங்க அமெரிக்கா வந்து எவ்ளோ நாள் ஆச்சுன்னு
சொல்லிடலாம்.
ஆங்கிலம் : அமெரிக்கா வந்து இறங்கியதும் முதல் ஷாக் இவங்களோட உச்சரிப்பு. இங்கிலிபீசில நான் சேக்ஸ்பியர் லெவல்ன்னு சொல்லிக்கிட்டு இருந்தவனுக்கு அமெரிக்கர்களின் ஆங்கில உச்சரிப்பு கிர்ர்ரட்டிக்கும் அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா புரிஞ்சிக்கிட்டு அத்தோட நிக்காமல் அமெரிக்கா நுனி நாக்கு ஆங்கிலம் பேச முயன்று கேவலமா தோத்துப் போவாங்க. (அமேரிக்க அக்சென்ட் வெகு சிலருக்கே வரும், இங்கே பிறந்த / வளரும் குழந்தைகள் அட்டகாசமா பேசும்).
சரி நமக்கு உச்சரிப்புதான் வாய்க்கலை, அவர்கள் உபயோகிக்கும் பதங்களை உபயோகிக்க ஆரம்பிப்பது அடுத்த லெவல்.
யாராவது How Are you ன்னு கேட்டா I am fineன்னு சொல்லியே பழக்கப்பட்ட நாம I am Good என்று சொல்ல ஆரம்பிப்போம். ஏதாவது ஒரு விசயத்துக்கு தயாரான்னு கேட்டா I am Ready என்று சொல்லாமல் I am all set என்றே சொல்லுவோம்.
நண்பர்களை டேய் என்று அழைக்காமல் DUDE என்று அழைக்கத் தொடங்கும்போதும் இந்தியாவில் இருப்பவரிடம் தொலை பேசும்போது Sounds Good என்று சொல்லி மறு முனையில் இருப்பவர் நம்ம குரல் அவ்ளோ நல்லாவா இருக்குன்னு குழம்பி அவரை சுத்தலில் விடும்போது பார்ட்டி அமெரிக்கா வந்து சில பல வருஷங்கள் ஆச்சுன்னு தெரிஞ்சிக்கலாம்.
சாப்பாடு : அரிசியும் கோதுமையுமே மனுஷன் சாப்பிட உகந்தவை. சாலட் என்பது இலையும் தழையும், அது ஆடு மாடு சாப்பிடும் வஸ்து, மேலும் வெஜிடபிள் சாலட் என்பது முழு சாப்பாட்டுக்கு முன் சாப்பிடுவது, பர்கர் என்பது
இரண்டு முழு சாப்பாடுகளுக்கு இடையில் பொழுது போக சாப்பிடுவது - இதெல்லாம் ஊருக்கு வந்த புதுசில் அடிக்கும் கமெண்டுகள்.
தினமும் ஆபிஸுக்கு வீட்டு சாப்பாடு எடுத்துப் போக முடியல, பக்கத்தில இந்தியன் ரெஸ்டாரண்ட் எதுவும் கிடையாது- சூப், சாண்ட்விச், பர்கர், சாலட் இதுல ஏதாவது சாப்பிட்டு அட்ஜஸ்ட் பண்றேன் - இது வந்து ஓரிரு வருஷங்கள் ஆன நிலை.
விடுமுறை நாட்களிலும், நண்பர்கள் வீட்டுக்குப் போனாலும் - I eat only Salad and Soup for Lunch and Dinner, Rice and Wheat are full of Carbs you know!!!இப்போ ஐயா அமெரிக்கன் ஆகிட்டாருன்னு அர்த்தம்.
பண விஷயம்:
சில்லரைக் காசு அமெரிக்கா வந்த புதுசில் குழம்ப வைக்கும் இன்னொரு விசயம் - நாணயங்கள்.
ஊருக்குப் புதுசு : ஐந்து செண்டுக்கும் பத்து செண்டுக்கும் வித்தியாசம் தெரியாத நிலை, அதிலும் முக்கியமா ஐந்து செண்ட் பத்தை விட பெரிசா இருப்பது இன்னும் குழப்பும்.
ஓரிரு வருஷங்கள் ஆன பின்: அமெரிக்க நாணயங்களின் ஷேப்பும் மதிப்பும் நல்லாவே பழக்கமாகியிருக்கும், அத்துடன் பென்னியும் நிக்கலும் டைமும் நாலணா எட்டணா போல பழகியிருக்கும்.
அமெரிக்காவில் செட்டில் ஆயாச்சு : தெருமுனைக் கடைகளில் தரும் மீதப் பணத்தில் ஒரு செண்ட்களை எடுக்காமல் விட்டு விட்டு வர ஆரம்பிக்கும் போது அமெரிக்காவில் செட்டில் ஆயாச்சுன்னு தெரிஞ்சிக்கலாம்.
$ to ரூபாய் :
ஊருக்குப் புதுசு : எல்லாப் பொருட்களின் விலையையும் ரூபாயில் கன்வெர்ஷன் செய்து கவலைப் படுவது அமெரிக்கா வந்ததும் வரும் ஹாபி. ஒரு ப்ளேட் இட்லி 250 ரூபாயா? ஒரு தோசயின் விலை 500 ரூபாயா என்று சரியா சாப்பிடதா பலருண்டு இங்க.
ஒரிரு வருஷங்கள் ஆச்சு : கன்வெர்ஷன் மோகம் போயாச்சு. Your home is where you live என்பதை நம்பத்தொடங்கி பொருட்களை சகஜமாக வாங்கத் தொடங்கியிருப்போம்.
செட்டில்ட் இன் அமெரிக்கா : இவங்களை இந்திய விசிட்டின் போது தெரிஞ்சிக்கலாம் - அங்கு துணிமணி வாங்கும் போதோ, கலைப் பொருள் வாங்கும் போதோ - ஆயிரம் ருபாய் அப்படினா கிட்டத்தட்ட இருபது டாலர் அப்படின்னு சொன்னா பார்ட்டி அமெரிக்க செட்டில்ட்னு தெரிஞ்சிக்கணும்.
வீடு தேடும் படலம்:
அமெரிக்கா வந்திறங்கியது தேடும் அப்பார்ட்மெண்டில் நாம் எதிர்பார்க்கும் விசயங்கள் : வாடகை கம்மியாகவும் இந்தியர்கள் நிறையவும் இருக்கும் குடியிருப்பு, ட்ரெயினுக்குப் பக்கத்தில் இருக்கணும் (அப்பத்தான் கார் இல்லாம காலத்தை ஓட்ட முடியும்), இந்தியக் கடை மற்றும் வால்மார்ட் அருகில் இருப்பது அவசியம்.
வாடகை அதிகமானாலும் பரவாயில்லை- நல்ல தரமான அப்பார்ட்மெண்ட் வேணும், காரில் ஆபிஸ் போய் வர வசதியா இருக்கணும், தேசிக்கள் அதிகமா இல்லாம இருக்கணும் (ஒரே பாலிடிக்ஸ் யூ நோ!!)- இப்படியெல்லாம் டிமாண்ட் வச்சா அமெரிக்கா வந்து ஓரிரு வருஷங்கள் ஆச்சுன்னு அர்த்தம்.
ரியல் எஸ்டேட் ப்ரோக்கரிடம் மூணு நாலு லட்ச டாலர் விலைக்கு நல்ல வீடு பார்க்கச் சொல்லி - நல்ல டவுனா இருக்கணும், Excellent School District, க்ரைம் ரேட் கம்மியா இருக்கணும், Unemployment, diversity அப்படின்னு பெரிய Requirement லிஸ்ட் கொடுத்தால் அமெரிக்காவில் மொத்தமா செட்டில் ஆயாச்சுன்னு அர்த்தம்.
விசா: வாழ்க்கை ஒரு வட்டம் என்பதற்கு இந்தியர்களும் அமெரிக்கக் குடியுரிமையும் சிறந்த உதாரணம்.
இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மையான பொட்டி தட்டும் மக்களின் கனவு H1B Visa. அமெரிக்கா வந்திறங்கியதும், ஷார்ட் டெர்ம் விசிட்டை லாங் டெர்ம் ஆக்குவதற்கு எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப் படும்
விசாவும் நீண்ட நாள் தங்கும் ஆசையும் நிறைவேறியதும் அடுத்த இலக்கு பச்சை அட்டை (Green Card) மிக நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட வரிசையில் இணைந்து இதற்காக பலவருடங்கள் காத்திருப்பது இடைப்பட்ட நிலை.
பச்சை அட்டை கிடைத்து ஐந்தாண்டுகளில் அமெரிக்கக் குடியுரிமை அடுத்த இலக்கு. அமெரிக்கா வந்து பத்தி பதினைந்து ஆண்டுகள் விசாவையும், பச்சை அட்டையையும், குடியுரிமையும் துரத்தி கடேசில எல்லாம் கிடைச்சப்புறம், செட்டிலானபின், I am going back to India for Good என்பது உச்சகட்டக் கொடுமை.
நான் இப்போது பெரும்பான்மையான விசயங்களில் ரெண்டாவது கேட்டகரியில் இருக்கிறேன்.
இவை தவிர நீங்க நினைக்கும் மத்த விசயங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்
மொச பிடிக்கிற நாயை மூஞ்சை பார்த்தா தெரியும்னு சொல்றது மாதிரி NRI மக்களின் செய்கைகளை வச்சு அவங்க அமெரிக்கா வந்து எவ்ளோ நாள் ஆச்சுன்னு
சொல்லிடலாம்.
ஆங்கிலம் : அமெரிக்கா வந்து இறங்கியதும் முதல் ஷாக் இவங்களோட உச்சரிப்பு. இங்கிலிபீசில நான் சேக்ஸ்பியர் லெவல்ன்னு சொல்லிக்கிட்டு இருந்தவனுக்கு அமெரிக்கர்களின் ஆங்கில உச்சரிப்பு கிர்ர்ரட்டிக்கும் அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா புரிஞ்சிக்கிட்டு அத்தோட நிக்காமல் அமெரிக்கா நுனி நாக்கு ஆங்கிலம் பேச முயன்று கேவலமா தோத்துப் போவாங்க. (அமேரிக்க அக்சென்ட் வெகு சிலருக்கே வரும், இங்கே பிறந்த / வளரும் குழந்தைகள் அட்டகாசமா பேசும்).
சரி நமக்கு உச்சரிப்புதான் வாய்க்கலை, அவர்கள் உபயோகிக்கும் பதங்களை உபயோகிக்க ஆரம்பிப்பது அடுத்த லெவல்.
யாராவது How Are you ன்னு கேட்டா I am fineன்னு சொல்லியே பழக்கப்பட்ட நாம I am Good என்று சொல்ல ஆரம்பிப்போம். ஏதாவது ஒரு விசயத்துக்கு தயாரான்னு கேட்டா I am Ready என்று சொல்லாமல் I am all set என்றே சொல்லுவோம்.
நண்பர்களை டேய் என்று அழைக்காமல் DUDE என்று அழைக்கத் தொடங்கும்போதும் இந்தியாவில் இருப்பவரிடம் தொலை பேசும்போது Sounds Good என்று சொல்லி மறு முனையில் இருப்பவர் நம்ம குரல் அவ்ளோ நல்லாவா இருக்குன்னு குழம்பி அவரை சுத்தலில் விடும்போது பார்ட்டி அமெரிக்கா வந்து சில பல வருஷங்கள் ஆச்சுன்னு தெரிஞ்சிக்கலாம்.
சாப்பாடு : அரிசியும் கோதுமையுமே மனுஷன் சாப்பிட உகந்தவை. சாலட் என்பது இலையும் தழையும், அது ஆடு மாடு சாப்பிடும் வஸ்து, மேலும் வெஜிடபிள் சாலட் என்பது முழு சாப்பாட்டுக்கு முன் சாப்பிடுவது, பர்கர் என்பது
இரண்டு முழு சாப்பாடுகளுக்கு இடையில் பொழுது போக சாப்பிடுவது - இதெல்லாம் ஊருக்கு வந்த புதுசில் அடிக்கும் கமெண்டுகள்.
தினமும் ஆபிஸுக்கு வீட்டு சாப்பாடு எடுத்துப் போக முடியல, பக்கத்தில இந்தியன் ரெஸ்டாரண்ட் எதுவும் கிடையாது- சூப், சாண்ட்விச், பர்கர், சாலட் இதுல ஏதாவது சாப்பிட்டு அட்ஜஸ்ட் பண்றேன் - இது வந்து ஓரிரு வருஷங்கள் ஆன நிலை.
விடுமுறை நாட்களிலும், நண்பர்கள் வீட்டுக்குப் போனாலும் - I eat only Salad and Soup for Lunch and Dinner, Rice and Wheat are full of Carbs you know!!!இப்போ ஐயா அமெரிக்கன் ஆகிட்டாருன்னு அர்த்தம்.
பண விஷயம்:
சில்லரைக் காசு அமெரிக்கா வந்த புதுசில் குழம்ப வைக்கும் இன்னொரு விசயம் - நாணயங்கள்.
ஊருக்குப் புதுசு : ஐந்து செண்டுக்கும் பத்து செண்டுக்கும் வித்தியாசம் தெரியாத நிலை, அதிலும் முக்கியமா ஐந்து செண்ட் பத்தை விட பெரிசா இருப்பது இன்னும் குழப்பும்.
ஓரிரு வருஷங்கள் ஆன பின்: அமெரிக்க நாணயங்களின் ஷேப்பும் மதிப்பும் நல்லாவே பழக்கமாகியிருக்கும், அத்துடன் பென்னியும் நிக்கலும் டைமும் நாலணா எட்டணா போல பழகியிருக்கும்.
அமெரிக்காவில் செட்டில் ஆயாச்சு : தெருமுனைக் கடைகளில் தரும் மீதப் பணத்தில் ஒரு செண்ட்களை எடுக்காமல் விட்டு விட்டு வர ஆரம்பிக்கும் போது அமெரிக்காவில் செட்டில் ஆயாச்சுன்னு தெரிஞ்சிக்கலாம்.
$ to ரூபாய் :
ஊருக்குப் புதுசு : எல்லாப் பொருட்களின் விலையையும் ரூபாயில் கன்வெர்ஷன் செய்து கவலைப் படுவது அமெரிக்கா வந்ததும் வரும் ஹாபி. ஒரு ப்ளேட் இட்லி 250 ரூபாயா? ஒரு தோசயின் விலை 500 ரூபாயா என்று சரியா சாப்பிடதா பலருண்டு இங்க.
ஒரிரு வருஷங்கள் ஆச்சு : கன்வெர்ஷன் மோகம் போயாச்சு. Your home is where you live என்பதை நம்பத்தொடங்கி பொருட்களை சகஜமாக வாங்கத் தொடங்கியிருப்போம்.
செட்டில்ட் இன் அமெரிக்கா : இவங்களை இந்திய விசிட்டின் போது தெரிஞ்சிக்கலாம் - அங்கு துணிமணி வாங்கும் போதோ, கலைப் பொருள் வாங்கும் போதோ - ஆயிரம் ருபாய் அப்படினா கிட்டத்தட்ட இருபது டாலர் அப்படின்னு சொன்னா பார்ட்டி அமெரிக்க செட்டில்ட்னு தெரிஞ்சிக்கணும்.
வீடு தேடும் படலம்:
அமெரிக்கா வந்திறங்கியது தேடும் அப்பார்ட்மெண்டில் நாம் எதிர்பார்க்கும் விசயங்கள் : வாடகை கம்மியாகவும் இந்தியர்கள் நிறையவும் இருக்கும் குடியிருப்பு, ட்ரெயினுக்குப் பக்கத்தில் இருக்கணும் (அப்பத்தான் கார் இல்லாம காலத்தை ஓட்ட முடியும்), இந்தியக் கடை மற்றும் வால்மார்ட் அருகில் இருப்பது அவசியம்.
வாடகை அதிகமானாலும் பரவாயில்லை- நல்ல தரமான அப்பார்ட்மெண்ட் வேணும், காரில் ஆபிஸ் போய் வர வசதியா இருக்கணும், தேசிக்கள் அதிகமா இல்லாம இருக்கணும் (ஒரே பாலிடிக்ஸ் யூ நோ!!)- இப்படியெல்லாம் டிமாண்ட் வச்சா அமெரிக்கா வந்து ஓரிரு வருஷங்கள் ஆச்சுன்னு அர்த்தம்.
ரியல் எஸ்டேட் ப்ரோக்கரிடம் மூணு நாலு லட்ச டாலர் விலைக்கு நல்ல வீடு பார்க்கச் சொல்லி - நல்ல டவுனா இருக்கணும், Excellent School District, க்ரைம் ரேட் கம்மியா இருக்கணும், Unemployment, diversity அப்படின்னு பெரிய Requirement லிஸ்ட் கொடுத்தால் அமெரிக்காவில் மொத்தமா செட்டில் ஆயாச்சுன்னு அர்த்தம்.
விசா: வாழ்க்கை ஒரு வட்டம் என்பதற்கு இந்தியர்களும் அமெரிக்கக் குடியுரிமையும் சிறந்த உதாரணம்.
இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மையான பொட்டி தட்டும் மக்களின் கனவு H1B Visa. அமெரிக்கா வந்திறங்கியதும், ஷார்ட் டெர்ம் விசிட்டை லாங் டெர்ம் ஆக்குவதற்கு எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப் படும்
விசாவும் நீண்ட நாள் தங்கும் ஆசையும் நிறைவேறியதும் அடுத்த இலக்கு பச்சை அட்டை (Green Card) மிக நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட வரிசையில் இணைந்து இதற்காக பலவருடங்கள் காத்திருப்பது இடைப்பட்ட நிலை.
பச்சை அட்டை கிடைத்து ஐந்தாண்டுகளில் அமெரிக்கக் குடியுரிமை அடுத்த இலக்கு. அமெரிக்கா வந்து பத்தி பதினைந்து ஆண்டுகள் விசாவையும், பச்சை அட்டையையும், குடியுரிமையும் துரத்தி கடேசில எல்லாம் கிடைச்சப்புறம், செட்டிலானபின், I am going back to India for Good என்பது உச்சகட்டக் கொடுமை.
நான் இப்போது பெரும்பான்மையான விசயங்களில் ரெண்டாவது கேட்டகரியில் இருக்கிறேன்.
இவை தவிர நீங்க நினைக்கும் மத்த விசயங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்
Thursday, December 9, 2010
தத்துபித்துவங்கள் இருபது
நேத்து பிடிக்காத பத்து அதுக்கு முன்னாடி பிடிச்ச பத்து, இன்னிக்கு தத்து பித்துவங்கள் இருபது. ரெண்டு நாளா கொஞ்சம் சீரியஸா டிஸ்கஷன் போச்சு, அடுத்ததும் அமெரிக்க
காண்ட்ராக்ட் வேலை நிலவரம் பத்தி சீரியஸா வருது. எனவே நடுவுல ஒரு கெக்கே பிக்கே காமடி.பொருத்தருள்க.
1. நீ எவ்ளோ பெரிய படிப்பாளியா இருந்தாலும் எக்ஸாம் ஹால்ல போய் படிக்க முடியாது.
2. ஸ்கூல் டெஸ்ட்லே பிட் அடிக்கலாம்... காலேஜ் டெஸ்ட்லே பிட் அடிக்கலாம்... ஆனால் ப்ளட் டெஸ்ட்லே பிட் அடிக்க முடியாது.
3. ஆயிரம் தான் இருந்தாலும் ஆயிரத்து ஒண்ணுதான் பெருசு
4. என்னதான் அகிம்சாவாதியா இருந்தாலும் சப்பாத்தியை சுட்டுத்தான் சாப்பிட முடியும்.
5. காசு இருந்தா கால் டாக்சி!! காசு இல்லைன்னா கால் தான் டாக்சி!!!
6. பல்லு வலின்னா பல்லைப் புடுங்கலாம். ஆனா கண்ணு வலின்னா கண்ணைப் புடுங்க முடியுமா?
7. இட்லி பொடியைத் தொட்டு இட்லி சாப்பிடலாம். ஆனா மூக்குப் பொடியைத் தொட்டு மூக்கை சாப்பிட முடியாது.
8. பாண்ட் போட்டு முட்டிப்போட முடியும். ஆனா முட்டிப் போட்டு பாண்ட் போட முடியுமா?
9. இன்னைக்குத் தூங்கினா நாளைக்கு எந்திரிக்கலாம். ஆனால் நாளைக்குத் தூங்கினா இன்னைக்கு எந்திரிக்க முடியுமா?
10. பஸ்சுல கலெக்டரே ஏறினாலும், முதல் சீட்டு டிரைவருக்குத் தான்.
11. சைக்கிள் கேரியர்ல டிபன் கேரியரை வெச்சி எடுத்துட்டுப் போகலாம். ஆனால் டிபன் கேரியர்லே சைக்கிளை வெச்சு எடுத்துட்டுப் போக முடியாது
12. டிக்கெட் வாங்கிட்டு உள்ளே போனா அது சினிமா தியேட்டர். ஆனால் உள்ளே போய்ட்டு டிக்கெட் வாங்கினா அது ஆபரேஷன் தியேட்டர்.
13. என்னதான் மீனுக்கு நீந்தத் தெரிஞ்சாலும், அதால மீன் குழம்புலே நீந்த முடியாது.
14. நீ என்ன தான் காஸ்ட்லி மொபைல் வச்சிருந்தாலும், அதுல எவ்வளவு தான் ரீசார்ஜ் பண்ணாலும், உன்னால உனக்கு கால் பண்ண முடியாது.
15. க்ரீம் பிஸ்கட்லே க்ரீம் இருக்கும், ஆனா நாய் பிஸ்கட்லே நாய் இருக்குமா?
16. ஒரு எறும்பு நினைச்சா 1000 யானைகளைக் கடிக்கும். ஆனால் 1000 யானைகள் நினைச்சாலும் ஒரு எறும்பைக் கூட கடிக்க முடியாது.
17. குவார்ட்டர் அடிச்சிட்டு குப்புற படுக்கலாம். ஆனால் குப்புற படுத்துக்கிட்டு குவார்ட்டர் அடிக்க முடியாது.
18. செல்போனுலே பாலன்ஸ் இல்லைன்னா கால் பண்ண முடியாது. ஆனால் மனுசனுக்கு கால் இல்லைன்னா பாலன்ஸ் பண்ண முடியாது.
19. ரயில்வே ஸ்டேஷன்லே போலீஸ் ஸ்டேஷன் இருக்கலாம். ஆனால் போலீஸ் ஸ்டேஷன்லே ரயில்வே ஸ்டேஷன் இருக்க முடியாது.
20. என்னதான் உயர பறந்தாலும் கொசுவை பறவை லிஸ்டில் சேர்க்கமுடியாது
தத்துபித்துவங்கள் கண்டெடுத்தது இணையத்தில், மூழ்கி முத்தெடுத்தவர் : “என்றும் அன்புடன்” பாஸ்டன் ஸ்ரீராம்
காண்ட்ராக்ட் வேலை நிலவரம் பத்தி சீரியஸா வருது. எனவே நடுவுல ஒரு கெக்கே பிக்கே காமடி.பொருத்தருள்க.
1. நீ எவ்ளோ பெரிய படிப்பாளியா இருந்தாலும் எக்ஸாம் ஹால்ல போய் படிக்க முடியாது.
2. ஸ்கூல் டெஸ்ட்லே பிட் அடிக்கலாம்... காலேஜ் டெஸ்ட்லே பிட் அடிக்கலாம்... ஆனால் ப்ளட் டெஸ்ட்லே பிட் அடிக்க முடியாது.
3. ஆயிரம் தான் இருந்தாலும் ஆயிரத்து ஒண்ணுதான் பெருசு
4. என்னதான் அகிம்சாவாதியா இருந்தாலும் சப்பாத்தியை சுட்டுத்தான் சாப்பிட முடியும்.
5. காசு இருந்தா கால் டாக்சி!! காசு இல்லைன்னா கால் தான் டாக்சி!!!
6. பல்லு வலின்னா பல்லைப் புடுங்கலாம். ஆனா கண்ணு வலின்னா கண்ணைப் புடுங்க முடியுமா?
7. இட்லி பொடியைத் தொட்டு இட்லி சாப்பிடலாம். ஆனா மூக்குப் பொடியைத் தொட்டு மூக்கை சாப்பிட முடியாது.
8. பாண்ட் போட்டு முட்டிப்போட முடியும். ஆனா முட்டிப் போட்டு பாண்ட் போட முடியுமா?
9. இன்னைக்குத் தூங்கினா நாளைக்கு எந்திரிக்கலாம். ஆனால் நாளைக்குத் தூங்கினா இன்னைக்கு எந்திரிக்க முடியுமா?
10. பஸ்சுல கலெக்டரே ஏறினாலும், முதல் சீட்டு டிரைவருக்குத் தான்.
11. சைக்கிள் கேரியர்ல டிபன் கேரியரை வெச்சி எடுத்துட்டுப் போகலாம். ஆனால் டிபன் கேரியர்லே சைக்கிளை வெச்சு எடுத்துட்டுப் போக முடியாது
12. டிக்கெட் வாங்கிட்டு உள்ளே போனா அது சினிமா தியேட்டர். ஆனால் உள்ளே போய்ட்டு டிக்கெட் வாங்கினா அது ஆபரேஷன் தியேட்டர்.
13. என்னதான் மீனுக்கு நீந்தத் தெரிஞ்சாலும், அதால மீன் குழம்புலே நீந்த முடியாது.
14. நீ என்ன தான் காஸ்ட்லி மொபைல் வச்சிருந்தாலும், அதுல எவ்வளவு தான் ரீசார்ஜ் பண்ணாலும், உன்னால உனக்கு கால் பண்ண முடியாது.
15. க்ரீம் பிஸ்கட்லே க்ரீம் இருக்கும், ஆனா நாய் பிஸ்கட்லே நாய் இருக்குமா?
16. ஒரு எறும்பு நினைச்சா 1000 யானைகளைக் கடிக்கும். ஆனால் 1000 யானைகள் நினைச்சாலும் ஒரு எறும்பைக் கூட கடிக்க முடியாது.
17. குவார்ட்டர் அடிச்சிட்டு குப்புற படுக்கலாம். ஆனால் குப்புற படுத்துக்கிட்டு குவார்ட்டர் அடிக்க முடியாது.
18. செல்போனுலே பாலன்ஸ் இல்லைன்னா கால் பண்ண முடியாது. ஆனால் மனுசனுக்கு கால் இல்லைன்னா பாலன்ஸ் பண்ண முடியாது.
19. ரயில்வே ஸ்டேஷன்லே போலீஸ் ஸ்டேஷன் இருக்கலாம். ஆனால் போலீஸ் ஸ்டேஷன்லே ரயில்வே ஸ்டேஷன் இருக்க முடியாது.
20. என்னதான் உயர பறந்தாலும் கொசுவை பறவை லிஸ்டில் சேர்க்கமுடியாது
தத்துபித்துவங்கள் கண்டெடுத்தது இணையத்தில், மூழ்கி முத்தெடுத்தவர் : “என்றும் அன்புடன்” பாஸ்டன் ஸ்ரீராம்
Thursday, April 1, 2010
ரொம்ப நல்லவனின் இரு தவறுகள் மற்றும் இரு வேடங்கள்
ஒரு ஊர்ல ஒரு தான் தோன்றி இருந்தானாம். அவன் ஒரு நாள் ரொம்ப நல்லவங்க ஒண்ணா கூடின எடத்துக்குப் போயிட்டு வந்து தன்னோட நோட்டுப் புத்தகத்தில அது பத்தி
கிறுக்கினானாம். அப்படி கிறுக்கயில ரெண்டு தடவ தப்பு பண்ணானாம். ஒரு தப்பு ஒரு தனி மனுஷியப் பத்தி கமெண்ட் சொன்னது, ரெண்டாவது தப்பு ஒரு சமூகத்தையே நோக்கி
காரணமில்லாமல் மற்றும் அடிப்படை இல்லாமல் புழுதியைத் தூற்றினது.
ரெண்டுமே தப்புதான்னு அவனுக்கும், அவனைச் சுற்றி இருப்பவர்களுக்கும், அந்த நல்லவங்க கூட்டம்னு சொன்னேனில்ல அங்க வந்த எல்லோருக்கும் தெரியும். ஒரு சமூகத்துக்கே அவன் செஞ்ச கொடுமையை எல்லோரும் சுட்டிக் காட்டியும், பல பேர் காட்டமாகக் கூறியும் அவன் அதை தவறுன்னு ஒத்துக்கவுமில்லை, கிறுக்கியதை ரப்பர் போட்டு அழிக்கவுமில்லை. இந்த பஞ்சாயத்து நாலஞ்சு நாள் நடந்தும் இதுதான் நிலைமை.
இவன் ஒரு பெண்மணிக்கு செஞ்ச தப்பை யாருமே சில நாள் கண்டுக்கலை (பெரிய தப்பு சின்ன தப்பை மறைத்து விட்டதுன்னு நினைக்கிறேன்), நாலு நாள் கழிச்சி இரண்டாம் கம்பர்
நல்லவங்க கூட்டம் நடத்தின பின்னர் நடக்கும் அரசியல் பத்தி தன்னோட நோட்ல எழுதும் போது தான் தோன்றியின் இந்த தப்பை சுட்டிக் காட்டி துப்பியிருந்தார். உடனே களத்தில குதிச்ச நண்பர்கள் இது தப்பு, இது தப்புன்னு பின்பாட்டு பாடினார்கள். சம்பந்தப்பட்ட பெண்மணியும் தான் தனக்கு இழைக்கப் பட்ட கொடுமையை தான் பெருந்தன்மையாக மன்னித்து விட்டதாக சொல்லிட்டாங்க. இதுல வேடிக்கை என்னன்னா தான் தோன்றி தான் தப்பாக எதுவும் சொல்லவில்லை, தனது வார்த்தைகளை இரண்டாம் கம்பர் திரித்து விட்டாதாக சொன்னான். அப்படி சொல்லிட்டு உடனே அடிச்சான் பாருங்க பல்டி.. அந்தர் பல்டி, இந்தர் பல்டியெல்லாம் தோத்துப் போயிடும் இவருகிட்ட.
தான் தவறு செய்யவே இல்லைன்னு நம்புறவன் என்னா செய்யணும், சம்பந்தப் பட்டவங்ககிட்ட பேச்சின் மூலமோ எழுத்தின் மூலமோ தனது நிலைப் பாட்டை தெளிவு படுத்தி இருக்கணும். ஆனா நம்ப ஹீரோ என்ன செஞ்சாருன்னா, சம்பந்தப்பட்ட பெண்மணிக்கு போன் பண்ணி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டிருக்கிறார். ஏன்னா ஒரு பெண் சம்பந்தமான குற்றச்சாட்டு தன் மீது சுமத்தப் பட்டால் என்ன ஆகும்னு ஹீரோவுக்கு நல்லாவே தெரியும். கவுஜ படிக்க வர்ற பெண்கள் யாரும் வரமாட்டாங்களே.. கடையில யாருமே கல்லா கட்ட மாட்டாங்களே...
ஒரு பெண்மணிக்கு ஏற்பட்ட மனவருத்தத்தை உணர்ந்து தான் தவறு செய்ததாகவே கருதாத போதிலும் மன்னிப்பு கேட்ட தான் தோன்றி ஒரு சமூகத்தையே கேவலமாகப் பேசியதன் மூலம்
பலருக்கு ஏற்பட்ட (நான் உள்பட) மனவருத்தத்தைப் போக்க ஏதாவது செய்வாரா??? யாராவது கேட்டு சொல்லுங்களேன்... ரெண்டாம் கம்பரே..உங்க சொல்லுக்கு ஹீரோ மதிப்பு
தருவான்னு நெனைக்கிறேன்.. you too Kambar? கேள்விக்கு பதில் சொல்லிட்டு இதுக்கு பதில் கேட்டுச் சொல்லுங்களேன்...
டிஸ்கி 1: இது ஒரு கற்பனைக் கதை, யாரையும் குறிப்பதில்லைன்னு ஜல்லி அடிக்கப் போறதில்லை, நீங்க நெனைக்கிற ஆளைப்பத்தித்தான் சொல்லி இருக்கிறேன்.
டிஸ்கி 2 : இது பல நாள் குமுறல், சும்மா சும்மா தேவையில்லாம பாப்பான்னு எழுதினா எவண்டா ஜாட்டான்னு நானும் கேக்கலாமுன்னு இருக்கேன்.
டிஸ்கி 3 : இது நாள் வரை பின்னூட்டப் பெட்டி திறந்த்துதான் இருந்தது, உங்க எல்லாரோட Maturity மேல இருக்குற நம்பிக்கையில இன்னிக்கும் அப்படியே வச்சிட்டு தூங்கப்
போறேன்.
கிறுக்கினானாம். அப்படி கிறுக்கயில ரெண்டு தடவ தப்பு பண்ணானாம். ஒரு தப்பு ஒரு தனி மனுஷியப் பத்தி கமெண்ட் சொன்னது, ரெண்டாவது தப்பு ஒரு சமூகத்தையே நோக்கி
காரணமில்லாமல் மற்றும் அடிப்படை இல்லாமல் புழுதியைத் தூற்றினது.
ரெண்டுமே தப்புதான்னு அவனுக்கும், அவனைச் சுற்றி இருப்பவர்களுக்கும், அந்த நல்லவங்க கூட்டம்னு சொன்னேனில்ல அங்க வந்த எல்லோருக்கும் தெரியும். ஒரு சமூகத்துக்கே அவன் செஞ்ச கொடுமையை எல்லோரும் சுட்டிக் காட்டியும், பல பேர் காட்டமாகக் கூறியும் அவன் அதை தவறுன்னு ஒத்துக்கவுமில்லை, கிறுக்கியதை ரப்பர் போட்டு அழிக்கவுமில்லை. இந்த பஞ்சாயத்து நாலஞ்சு நாள் நடந்தும் இதுதான் நிலைமை.
இவன் ஒரு பெண்மணிக்கு செஞ்ச தப்பை யாருமே சில நாள் கண்டுக்கலை (பெரிய தப்பு சின்ன தப்பை மறைத்து விட்டதுன்னு நினைக்கிறேன்), நாலு நாள் கழிச்சி இரண்டாம் கம்பர்
நல்லவங்க கூட்டம் நடத்தின பின்னர் நடக்கும் அரசியல் பத்தி தன்னோட நோட்ல எழுதும் போது தான் தோன்றியின் இந்த தப்பை சுட்டிக் காட்டி துப்பியிருந்தார். உடனே களத்தில குதிச்ச நண்பர்கள் இது தப்பு, இது தப்புன்னு பின்பாட்டு பாடினார்கள். சம்பந்தப்பட்ட பெண்மணியும் தான் தனக்கு இழைக்கப் பட்ட கொடுமையை தான் பெருந்தன்மையாக மன்னித்து விட்டதாக சொல்லிட்டாங்க. இதுல வேடிக்கை என்னன்னா தான் தோன்றி தான் தப்பாக எதுவும் சொல்லவில்லை, தனது வார்த்தைகளை இரண்டாம் கம்பர் திரித்து விட்டாதாக சொன்னான். அப்படி சொல்லிட்டு உடனே அடிச்சான் பாருங்க பல்டி.. அந்தர் பல்டி, இந்தர் பல்டியெல்லாம் தோத்துப் போயிடும் இவருகிட்ட.
தான் தவறு செய்யவே இல்லைன்னு நம்புறவன் என்னா செய்யணும், சம்பந்தப் பட்டவங்ககிட்ட பேச்சின் மூலமோ எழுத்தின் மூலமோ தனது நிலைப் பாட்டை தெளிவு படுத்தி இருக்கணும். ஆனா நம்ப ஹீரோ என்ன செஞ்சாருன்னா, சம்பந்தப்பட்ட பெண்மணிக்கு போன் பண்ணி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டிருக்கிறார். ஏன்னா ஒரு பெண் சம்பந்தமான குற்றச்சாட்டு தன் மீது சுமத்தப் பட்டால் என்ன ஆகும்னு ஹீரோவுக்கு நல்லாவே தெரியும். கவுஜ படிக்க வர்ற பெண்கள் யாரும் வரமாட்டாங்களே.. கடையில யாருமே கல்லா கட்ட மாட்டாங்களே...
ஒரு பெண்மணிக்கு ஏற்பட்ட மனவருத்தத்தை உணர்ந்து தான் தவறு செய்ததாகவே கருதாத போதிலும் மன்னிப்பு கேட்ட தான் தோன்றி ஒரு சமூகத்தையே கேவலமாகப் பேசியதன் மூலம்
பலருக்கு ஏற்பட்ட (நான் உள்பட) மனவருத்தத்தைப் போக்க ஏதாவது செய்வாரா??? யாராவது கேட்டு சொல்லுங்களேன்... ரெண்டாம் கம்பரே..உங்க சொல்லுக்கு ஹீரோ மதிப்பு
தருவான்னு நெனைக்கிறேன்.. you too Kambar? கேள்விக்கு பதில் சொல்லிட்டு இதுக்கு பதில் கேட்டுச் சொல்லுங்களேன்...
டிஸ்கி 1: இது ஒரு கற்பனைக் கதை, யாரையும் குறிப்பதில்லைன்னு ஜல்லி அடிக்கப் போறதில்லை, நீங்க நெனைக்கிற ஆளைப்பத்தித்தான் சொல்லி இருக்கிறேன்.
டிஸ்கி 2 : இது பல நாள் குமுறல், சும்மா சும்மா தேவையில்லாம பாப்பான்னு எழுதினா எவண்டா ஜாட்டான்னு நானும் கேக்கலாமுன்னு இருக்கேன்.
டிஸ்கி 3 : இது நாள் வரை பின்னூட்டப் பெட்டி திறந்த்துதான் இருந்தது, உங்க எல்லாரோட Maturity மேல இருக்குற நம்பிக்கையில இன்னிக்கும் அப்படியே வச்சிட்டு தூங்கப்
போறேன்.
Thursday, January 21, 2010
ஒரு சூப்பர் அப்ளிகேஷன்
டிஸ்கி : சுட்டபழம்
To: The Personnel manager
RE: Replacement of the dead manager
I refer to the recent death of the manager at your company and wish to apply for the replacement of the dead manager.
Each time I apply for employment I am told there is no vacancy but on this one I even attended the funeral and the all burial process and made sure that I hear from you who will take up the position. All I can remember is you saying that he will be difficult to replace meaning there is no one at the moment.
Its sad that he has left us but at least I benefit as he has left a vacancy for me.
I only hope there will be no corruption as we are all still mourning. He was my neighbor and it will be easy for me to continue with his legacy because I was seeing the time he was come for work and knocking off.
I will be sending my pictures whilst attending the funeral and burial so that you can see how tough I was and can be when employed.
Thanks for advertising the funeral because I could not have known.
Yours smiling,
XXX.
To: The Personnel manager
RE: Replacement of the dead manager
I refer to the recent death of the manager at your company and wish to apply for the replacement of the dead manager.
Each time I apply for employment I am told there is no vacancy but on this one I even attended the funeral and the all burial process and made sure that I hear from you who will take up the position. All I can remember is you saying that he will be difficult to replace meaning there is no one at the moment.
Its sad that he has left us but at least I benefit as he has left a vacancy for me.
I only hope there will be no corruption as we are all still mourning. He was my neighbor and it will be easy for me to continue with his legacy because I was seeing the time he was come for work and knocking off.
I will be sending my pictures whilst attending the funeral and burial so that you can see how tough I was and can be when employed.
Thanks for advertising the funeral because I could not have known.
Yours smiling,
XXX.
Monday, September 14, 2009
ஐடியா
என் அலுவலகம் இருக்கும் கட்டிடத்தில் சென்ற முறை மராமத்து நடந்த போது, கட்டிடத்தில் இருக்கும் அனைத்து கம்பெனிகளுக்கும்Property Management Company ஒரு அறிக்கை அனுப்பியது. அந்த அறிக்கையில் நடக்கவிருந்த வேலைகள் பற்றியும் எந்தெந்த வசதிகள் (Toilet, Parking) எவ்வளவு நாளைக்கு உபயோகிக்க முடியாது என்பதெல்லாம் சொல்லப்பட்டிருந்தது. அவர்கள் எவ்வளவுதான் முயற்சி செய்து குறிப்பு அனுப்பியிருந்தாலும், பல பேர் எனக்கு தகவல் வரவில்லைன்னு குறை சொன்னார்கள்.
இந்த வருட மராமத்து வேலைகள் இன்று முதல் ஆரம்பம், போனமுறை சரியாக தகவல் தெரிவிக்கவில்லை என குற்றச்சாட்டுக்கு ஆளானவர் (அவர் எல்லா
நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பிய போதும்) இந்த முறை ஒரு ஐடியா செய்தார் பாருங்கள் - தொலைக்காட்சி நடுவர்க்ள் பாஷையில் சொன்னால் -
சான்ஸே இல்லை. கட்டிடத்தில் இருக்கும் நாலு கழிவறைகளின் கதவிலும் நோட்டிஸை ஒட்டிவிட்டார். மவனே ஆபிஸ் வந்தால் டெஸ்கில் இருக்கீங்களோ
இல்லயோ ஒரு நாளைக்கு பல தடவ இங்குதானடா வருவீங்க, இங்க ஒட்டினா எப்படி தெரியாதுன்னு சொல்லுவீங்கன்னு செஞ்சாரு பாருங்க ஒரு ஐடியா?
இதத்தான் Out of the Box Thinking ன்னு சொல்லுவாங்களோ?
இந்த வருட மராமத்து வேலைகள் இன்று முதல் ஆரம்பம், போனமுறை சரியாக தகவல் தெரிவிக்கவில்லை என குற்றச்சாட்டுக்கு ஆளானவர் (அவர் எல்லா
நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பிய போதும்) இந்த முறை ஒரு ஐடியா செய்தார் பாருங்கள் - தொலைக்காட்சி நடுவர்க்ள் பாஷையில் சொன்னால் -
சான்ஸே இல்லை. கட்டிடத்தில் இருக்கும் நாலு கழிவறைகளின் கதவிலும் நோட்டிஸை ஒட்டிவிட்டார். மவனே ஆபிஸ் வந்தால் டெஸ்கில் இருக்கீங்களோ
இல்லயோ ஒரு நாளைக்கு பல தடவ இங்குதானடா வருவீங்க, இங்க ஒட்டினா எப்படி தெரியாதுன்னு சொல்லுவீங்கன்னு செஞ்சாரு பாருங்க ஒரு ஐடியா?
இதத்தான் Out of the Box Thinking ன்னு சொல்லுவாங்களோ?
Subscribe to:
Posts (Atom)