Monday, April 26, 2010

டாலர் தேசம் 1

நானென்ன பா.ரா வா? இந்த டாலர் தேசம் தொடருக்கு வேற யாராவது முன்னுரை எழுத?

நான் வலைப்பூக்கள் பக்கம் வர ஆரம்பிச்சது 2006ல். மொதல்ல படிக்க ஆரம்பிச்சது டுபுக்கின் எழுத்துக்களை. அதில் இம்ப்ரெஸ் ஆகி இன்னும் பல தளங்களைப் படிக்க ஆரம்பிச்சேன்.

2007, 2008ல பல வலைப்பூக்களைத் தேடித்தேடி படிக்க ஆரம்பிச்சேன், பின்னூட்டப் பதிவராகவே பல இணைய எழுத்தாளர்களுக்கு (இப்போ இந்த Title தான் ஃபேஷன்ல இருக்கு) அறிமுகம் ஆனேன். என்னோட பின்னூட்டங்களைப் பாத்த சில நண்பர்கள் என்கிட்ட கூட சரக்கு இருக்குறதா (தப்பா) நெனச்சி என்னையும் ப்ளாக் தொறக்கச் சொன்னாங்க.

யாருமே பத்த வெக்காமலே ஐஸ்லாண்ட் எரிமலை (அந்த எடத்தோட பேரின் ஸ்பெல்லிங் காப்பி பேஸ்ட் பண்றதுக்குக் கூட கஷ்டமா இருக்கு, எப்படித்தான் உச்சரிக்கராங்களோ?) பத்தி
எரிஞ்ச மாதிரி என்னோட எழுத்துத் தாகம் பத்தி எரிஞ்ச போது ஹாலிவுட் பாலாவும் வெட்டிப்பயல் பாலாஜியும் ரொம்ப கஷ்டப் பட்டு எனக்கு ப்ளாக்னா என்னன்னு புரிய வச்சு ஒரு பக்கத்தையும் வடிவமைச்சுக் கொடுத்தாங்க.(அதுக்காக வருத்தப் பட்டு முடிச்சிட்டாங்களா இல்ல இன்னும் வருத்தப்பட்டுக்கிட்டு இருக்காங்களான்னு தெரியல)

கிறுக்குறதுன்னு முடிவான அப்புறம் என் பேச்சை நானே கேக்காம கண்ட படி கிறுக்கலாமுன்னு நெனச்சேன், ஆனா எனக்கு முன்னாடி இருந்த மிகப் பெரிய கேள்வி - என்ன எழுதுறது?
நானெல்லாம் எழுதுறேங்கறதே ஒரு காமடி இந்த அழகுல நான் எங்க காமடியா எழுதுறது? எனவே எனக்கு கொஞ்சூண்டு தெரிஞ்ச அமெரிக்கன் விசா, வேலை வாய்ப்பு,Green Card, Spoken English, Personality Development பத்தி எழுதலாமுன்னு ஆரம்பிச்சேன். ஒரு சில பதிவுகள் மட்டுமே எழுதிய நிலையில் ஏதேதோ இலக்கில்லாம எழுதினேன். எழுத நேரமிருந்தாலும் என் சோம்பேறித்தனத்தினால் எந்த ஒரு தலைப்பைப் பத்தியும் தொடர்ந்து எழுதல.


இப்போ நான் சொல்லப் போற விசயம் எப்பவுமே நடக்கறதுதான். இருந்தாலும் கடந்த சில வாரங்களில் நடந்த சில பல நிகழ்வுகள் என்னை இந்த தொடர் எழுத வச்சிருக்கு.

1. வளைகுடா நாட்டில் கணணித்துறையில் இல்லாத ஒரு பதிவுலக நண்பர் ஒரு நாள் சாட்டில் வந்து SAP படிக்கலாமுன்னு இருக்கேன், அமெரிக்காவில் SAP இல் வேலை வாய்ப்புக்கள் எப்படி இருக்குன்னு கேட்டார். கணணித்துறையில் வேலை பாக்கும் நண்பர்களின் சம்பளம் அதிகமாக இருப்பதால் 10-15 வருட அனுபவத்தை விட்டு விட்டு துறை மாறத் துணிந்த நண்பரை Discourage செய்தேன்.

2. சீமாச்சு அவர்களின் தோழி அவரிடமிருந்து என் கைப்பேசியின் எண் வாங்கி சென்ற வார இறுதியில் பேசினார். இந்தியாவில் நல்ல கல்லூரியில் B.E Mechanical முடித்து,
அமெரிக்காவில் M.S Mechcalincal Engineering படித்த அவருக்கும் Software Developmentக்கும் ஸ்னானப் ப்ராப்தி கூட கிடையாது. அவரது கேள்வி - நான் எப்படியாவது அமெரிக்காவில் ஐடியில் செட்டிலாகணும், வழி சொல்லுங்க என்பதே. அவருக்கு அதில் உள்ள சாதக பாதகங்களை விளக்கிச் சொன்னேன்.

3. அமெரிக்காவில் வேலை செய்து வரும் பல நண்பர்களுக்கு H1B மற்றும் Green Card பத்தி பல விஷயங்களில் தெளிவின்மையை கண்டிருக்கிறேன். அதற்கு அவர்களையும் குறை
சொல்ல முடியாது, ஏன்னா அவங்க வேலை செய்யும் கம்பெனியில் Transparency என்பது மருந்துக்குக் கூட கிடையாது. H1B விசாவில் வேலை செய்யும் ஒரு கணணி பட்டதாரிக்கு அவருக்கு உள்ள உரிமைகள் பத்தி கூட சமயத்தில தெரியரதில்ல. சிங்கப்பூருக்கும் வளைகுடா நாடுகளுக்கும் செல்லும் கட்டிடத் தொழிலாளிகள் மாதிரி கன்சல்டன்சிகாரன் கூப்பிட்டான் இங்க வந்துட்டேன், ஆனா வேலை கிடைக்கல / சம்பளம் கொடுக்கலேன்னு புலம்புவதை பல முறை பார்த்திருக்கிறேன்.

4. சென்னையில் உள்ள பக்கத்து வீட்டுக்காரர்,என்னுடன் டெல்லியில் பணிபுரிந்தவர்,என் மாமா அனைவருக்கும் ஒரே கேள்வி - என் மகன் B.E படிச்சி முடிச்சிட்டான், அவனுக்கு அமெரிக்காவில் ஐடில ஒரு வேலை வாங்கி கொடுப்பியா என்பதுதான்.

5. இன்னொரு பதிவுலக நண்பர் புகைப்படத்துறையில் நிபுணர், அவருக்கும் ஒரு கேள்வி - தான் அமெரிக்கா எப்படி வருவது? வந்தா கேமரா மேன் வேலை கெடைக்குமா???

இப்படி நம்மில் பலருக்கும் அமெரிக்கா பற்றி ஒரு மாயை இருக்கு (வெளிய இருக்குறவங்களுக்கு எப்படி உள்ள வர்றது மற்றும் உள்ள வந்தவங்களுக்கு எப்படி இங்க நிரந்தரமா தங்கறது) இதுக்குக் காரணம் ஒரு டாலரின் மதிப்பு ஐம்பது ரூபாய். 1 $ = 1 ரூபாய் அதுகூட வேணாம் 1$ = 10 ரூபாய்னு ஆச்சுன்னா நம்மில் பல பேருக்கு அமெரிக்க ஆசை போயிடும். அதனால தான் பா.ரா உபயோகித்த தலைப்பாக இருந்தாலும் இதையே இந்த தொடருக்கு வச்சிருக்கேன்.

US Immigration (H1B, Green Card Process), Full time - Consulting jobs in USA, Study and work in USA, Living in USA
பத்தியெல்லாம் எனக்குத் தெரிஞ்ச கொஞ்ச விஷயங்களை எழுதலாமுன்னு இருக்கேன். இது பத்தி சம்பந்தப் படாதவர்களுக்கு இது போரடிக்கும், நான் எது எழுதினாலும்தான் போரடிக்கும்,
இது சில பேருக்காவது உபயோகமா இருக்கும் எனவே பொருத்தருள்க.

மொதல்ல நல்ல விஷயத்தைப் பத்தி சொல்லலாம். சில மாதங்களுக்கு முன்னால் இருந்த உள்நுழைவு பிரச்சனை பத்தி நம்ம பழமை பேசி இந்த இடுகையில் எழுதியிருந்தார், அதிலேயே இது பத்தி தெளிவு கெடச்சவுடனே எழுதறேன்னு சொல்லியிருந்தேன். என்னோட சோம்பேறித்தனத்தால இன்னிக்கு வரை எழுதல, அது பத்தியும் Current Job Market பத்தியும் அடுத்த இடுகையில எழுதறேன். Stay Tuned for the next post.. Adios


டிஸ்கி : நான் எழுதத் துணிந்த சப்ஜெக்ட் ரொம்பப் பெரிசு.எதப் பத்தி எழுதறதுன்னு யோசிச்சிக்கிட்டே எதப்பத்தியும் எழுதாம காலத்தை ஓட்டிடுவேன் நான், எனவே நீங்க உங்களுக்கு இருக்கும் கேள்விகளை பின்னூட்டத்திலோ அல்லது தனிமடலிலோ அனுப்பினால், அதுக்கு பதில் சொல்லும் சாக்கில் ஒரு தலைப்பை கவர் பண்ணிடுவேன்.
அதுக்காக பாஸ்டன்ல Strip Club எங்க இருக்குன்னெல்லாம் கேக்கப் படாது...சொல்லிட்டேன்..

Friday, April 2, 2010

டாப் டென் படங்கள்

தருமி ஐயாவோட இந்த பதிவ படிச்ச உடனே ரூமெல்லாம் போடாம ஒக்காந்து யோசிச்சேன் - நான் இது வரை பார்த்த தமிழ் படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த 10 படங்கள் எதுன்னு.

நானெல்லாம் ஒரு காமடி பீஸு, என்னை யாரும் தொடர் பதிவு எழுத கூப்பிடமாட்டங்க, அதனால நானே ஜீப்பில ஏறி இந்த டாப் டென் பதிவ போடறேன்.

இந்த பத்துப் படங்கள் தமிழ்த்திரையுலகின் மிகச் சிறந்த படங்கள்னு அர்த்தமாகாது, நான் பார்த்ததில் எனக்கு மிகவும் பிடித்த படங்கள் இவை.

1. அன்பே சிவம்

2. மொழி

3. மூன்றாம் பிறை

4. நாயகன்

5. எதிர் நீச்சல்

6. தவமாய் தவமிருந்து

7. பாட்ஷா - இத விட சிறந்த எண்டர்டெயினர் தமிழில் நான் இதுவரை பார்க்கவில்லை

8. ஆண் பாவம்

9. முதல்வன்

10.ரிதம்.

பம்பாய், சேது, மைக்கேல் மதன காம ராஜன், சலங்கை ஒலி, சர்வர் சுந்தரம் ஆகிய படங்களும் நான் மிகவும் ரசித்தவை. But they did not make it to my top 10.


இதைப் படிக்கும் அனைவரையும் அவர்களுக்குப் பிடித்த பத்து படங்களை பட்டியலிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்..

Thursday, April 1, 2010

ரொம்ப நல்லவனின் இரு தவறுகள் மற்றும் இரு வேடங்கள்

ஒரு ஊர்ல ஒரு தான் தோன்றி இருந்தானாம். அவன் ஒரு நாள் ரொம்ப நல்லவங்க ஒண்ணா கூடின எடத்துக்குப் போயிட்டு வந்து தன்னோட நோட்டுப் புத்தகத்தில அது பத்தி
கிறுக்கினானாம். அப்படி கிறுக்கயில ரெண்டு தடவ தப்பு பண்ணானாம். ஒரு தப்பு ஒரு தனி மனுஷியப் பத்தி கமெண்ட் சொன்னது, ரெண்டாவது தப்பு ஒரு சமூகத்தையே நோக்கி
காரணமில்லாமல் மற்றும் அடிப்படை இல்லாமல் புழுதியைத் தூற்றினது.

ரெண்டுமே தப்புதான்னு அவனுக்கும், அவனைச் சுற்றி இருப்பவர்களுக்கும், அந்த நல்லவங்க கூட்டம்னு சொன்னேனில்ல அங்க வந்த எல்லோருக்கும் தெரியும். ஒரு சமூகத்துக்கே அவன் செஞ்ச கொடுமையை எல்லோரும் சுட்டிக் காட்டியும், பல பேர் காட்டமாகக் கூறியும் அவன் அதை தவறுன்னு ஒத்துக்கவுமில்லை, கிறுக்கியதை ரப்பர் போட்டு அழிக்கவுமில்லை. இந்த பஞ்சாயத்து நாலஞ்சு நாள் நடந்தும் இதுதான் நிலைமை.

இவன் ஒரு பெண்மணிக்கு செஞ்ச தப்பை யாருமே சில நாள் கண்டுக்கலை (பெரிய தப்பு சின்ன தப்பை மறைத்து விட்டதுன்னு நினைக்கிறேன்), நாலு நாள் கழிச்சி இரண்டாம் கம்பர்
நல்லவங்க கூட்டம் நடத்தின பின்னர் நடக்கும் அரசியல் பத்தி தன்னோட நோட்ல எழுதும் போது தான் தோன்றியின் இந்த தப்பை சுட்டிக் காட்டி துப்பியிருந்தார். உடனே களத்தில குதிச்ச நண்பர்கள் இது தப்பு, இது தப்புன்னு பின்பாட்டு பாடினார்கள். சம்பந்தப்பட்ட பெண்மணியும் தான் தனக்கு இழைக்கப் பட்ட கொடுமையை தான் பெருந்தன்மையாக மன்னித்து விட்டதாக சொல்லிட்டாங்க. இதுல வேடிக்கை என்னன்னா தான் தோன்றி தான் தப்பாக எதுவும் சொல்லவில்லை, தனது வார்த்தைகளை இரண்டாம் கம்பர் திரித்து விட்டாதாக சொன்னான். அப்படி சொல்லிட்டு உடனே அடிச்சான் பாருங்க பல்டி.. அந்தர் பல்டி, இந்தர் பல்டியெல்லாம் தோத்துப் போயிடும் இவருகிட்ட.

தான் தவறு செய்யவே இல்லைன்னு நம்புறவன் என்னா செய்யணும், சம்பந்தப் பட்டவங்ககிட்ட பேச்சின் மூலமோ எழுத்தின் மூலமோ தனது நிலைப் பாட்டை தெளிவு படுத்தி இருக்கணும். ஆனா நம்ப ஹீரோ என்ன செஞ்சாருன்னா, சம்பந்தப்பட்ட பெண்மணிக்கு போன் பண்ணி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டிருக்கிறார். ஏன்னா ஒரு பெண் சம்பந்தமான குற்றச்சாட்டு தன் மீது சுமத்தப் பட்டால் என்ன ஆகும்னு ஹீரோவுக்கு நல்லாவே தெரியும். கவுஜ படிக்க வர்ற பெண்கள் யாரும் வரமாட்டாங்களே.. கடையில யாருமே கல்லா கட்ட மாட்டாங்களே...


ஒரு பெண்மணிக்கு ஏற்பட்ட மனவருத்தத்தை உணர்ந்து தான் தவறு செய்ததாகவே கருதாத போதிலும் மன்னிப்பு கேட்ட தான் தோன்றி ஒரு சமூகத்தையே கேவலமாகப் பேசியதன் மூலம்
பலருக்கு ஏற்பட்ட (நான் உள்பட) மனவருத்தத்தைப் போக்க ஏதாவது செய்வாரா??? யாராவது கேட்டு சொல்லுங்களேன்... ரெண்டாம் கம்பரே..உங்க சொல்லுக்கு ஹீரோ மதிப்பு
தருவான்னு நெனைக்கிறேன்.. you too Kambar? கேள்விக்கு பதில் சொல்லிட்டு இதுக்கு பதில் கேட்டுச் சொல்லுங்களேன்...


டிஸ்கி 1: இது ஒரு கற்பனைக் கதை, யாரையும் குறிப்பதில்லைன்னு ஜல்லி அடிக்கப் போறதில்லை, நீங்க நெனைக்கிற ஆளைப்பத்தித்தான் சொல்லி இருக்கிறேன்.

டிஸ்கி 2 : இது பல நாள் குமுறல், சும்மா சும்மா தேவையில்லாம பாப்பான்னு எழுதினா எவண்டா ஜாட்டான்னு நானும் கேக்கலாமுன்னு இருக்கேன்.

டிஸ்கி 3 : இது நாள் வரை பின்னூட்டப் பெட்டி திறந்த்துதான் இருந்தது, உங்க எல்லாரோட Maturity மேல இருக்குற நம்பிக்கையில இன்னிக்கும் அப்படியே வச்சிட்டு தூங்கப்
போறேன்.