Thursday, March 17, 2011

என் வாழ்வில் இன்னுமொரு பெண்

காத்து காத்து கண்கள் பூத்திருந்தேன் நீ வருவாயென !! பூத்து பூத்து புன்னகை சேர்த்து வைத்தேன் நீ வருவாயென!!
வந்தாயடி என் வாழ்வின் வசந்தமாக.. வாழ்வாயடி நீ வளமனைத்தும் பெற்றவளாக..
மூன்றாவது முக்கியப் பெண்ணடி நீ என் வாழ்வில்.. மூன்றுமே முத்துக்களடி என்னளவில்..
பத்து மாதம் தாய் பொருத்தாள் உன் பாரம், இனி நீதானடி என் வாழ்வின் ஆதாரம்..
இத்தனை நாள் பொறுமை காத்தோமடி உன்னைக் காண.. இனி நீண்ட நாள் வேண்டாமடி உன் பெருமைகள் காண.
என் மாதிரி உன் மாதிரி நீ ஆக ஆசையில்லை கண்ணே- நீ ஆக வேண்டியது உலகுக்கே முன் மாதிரி..
ஆசையோடு உனக்கிட்ட பேர் ஸ்ரீஹிதா, சந்தோஷங்களை இனி நீ அள்ளித்தா..


சோழர் பரம்பரையில் மற்றுமொரு MLA. முதல் குழந்தையாக பெண்ணைப் பெற்ற நீண்ட பதிவர்கள் வரிசையில் இன்று நான். நானும் என் மனைவியும் எங்க முதல் குழந்தையை எதிர் பார்த்திருந்தது உங்களில் சிலருக்குத் தெரியும். இன்று உதயமானது எங்கள் சொர்க்கம்.
பெண் குழந்தைக்கு ஸ்ரீஹிதா ஸ்ரீராம் என்று பெயரிட்டிருக்கிறோம். ஸ்ரீஹிதாவின் முதல் புகைப் படம் உங்கள் பார்வைக்கு..



ஹிதா வரும் காலத்தில் என்னவாக வேண்டுமானாலும் ஆகட்டும். நல்ல உள்ளங்களின் வாழ்த்துக்களோடு நேர்மையான,நல்ல மனுஷியாக அவளை வளர்ப்போம்.