Showing posts with label தம்பட்டம். Show all posts
Showing posts with label தம்பட்டம். Show all posts

Saturday, December 11, 2010

நன்றி நண்பர்களே:

கடந்த ஏழு நாட்களாக என்னை தமிழ்மண முகப்பில் பொறுத்துக்கொண்ட உங்கள் அனைவருக்கும் நன்றி. வாய்ப்பளித்த தமிழ் மண நிர்வாகிகளுக்கும் முக்கியமாக சங்கர பாண்டி ஐயாவுக்கும் மிக்க நன்றி.

டிசம்பர் 12 - தமிழ் நாட்டின் இரண்டாம் தீபாவளி - ரஜினியின் பிறந்த நாள். கமல் ரசிகனான எனக்கு இத்தினம் வேறு வகையில் முக்கியமானது. இன்று எங்களுடைய பதினோறாவது
ஆண்டு மணநாள்.

ஒரே ஒரு வாரம் என் மூஞ்சியை பொறுத்துக் கொள்ளுவது எவ்வளவு பெரிய கஷ்டம் என்பதை உங்கள் மூலமாக உணர்ந்தபின், பதினைந்து வருடமாய் பின் தூங்கி முன் எழுந்து சகித்துக் கொண்டிருக்கும் என் சகதர்மினிக்கு இந்த பதிவில் நன்றி சொல்வது என் தலயாய கடமையாய் உணர்கிறேன். ஒரு வார கஷ்டத்தை அனுபவித்த நீங்களும் ஆட்சேபனை ஏதும் சொல்ல மாட்டீர்கள் என நம்புகிறேன். (நஞ்சப்பா...கடேசி பெஞ்சுல ஒராள் ஆட்சேபணையா புருவத்த சுருக்கறான் பாரு..அமுக்கிப் போடேய்)

சகதர்மினி, அவர், இவர், நன்றி என்றெல்லாம் கூவுவது எனக்கே ரொம்ப அன்னியப்பட்டாலும், மைக் பிடித்தால் கடமை தவறா மோகன் பரம்பரை என்ற வகையில்...பாஸ்டன் கவுண்டிங் ஸ்டார்ட்ஸ்... (அவர் இவர்ன்னு கூப்பிட்டா அடுத்த வூட்டு அம்மணியைக் கூப்பிடுற மாதிரி இருக்கு என்பதால் அவள் இவள்ன்னே செல்லமாய் கூப்பிடுக்கிறேன். பெண்ணியவாதிகள் ஓரமா குந்திகினு ஜோடா குடிங்கப்பா ப்ளீஸ்)

முதல் நன்றி பதினஞ்சு வருசத்துக்கு முன்ன சொன்ன காதலை ஏத்துக்கிட்டு, சரித்திரத்தில் நானும் ரவுடி என்று பதிவு செய்ய உதவியதற்காக.

அடுத்த நன்றி அடுத்த நாலு வருசத்தில் போட்ட சண்டைகளில் விட்டுக் குடுத்த மாதிரி நடித்து நான் பெரிய தாதா என்று அதே சரித்திரத்தை திருத்தி எழுதியதற்காக.

அப்பாலிக்கா கல்யாணத்துக்கும், அதுக்கும் மேல பதினோரு வருசமா என்னைப் பொறுத்துக் கொண்டதுக்கும், சென்னையை விட்டு வெளியே போக மாட்டேன் என கிணற்றுத் தவளையாக
இருந்த என்னை தில்லி ஆஃபரை எடுத்துக்கச் சொன்னதுக்கும்,என்னை அமெரிக்கா அழைத்து வந்ததுக்கும் அப்படின்னு ஒவ்வொண்ணுக்கா அவளுக்கு நன்றி சொல்லணும்னா, இன்னும்
ஒரு மூனு வாரம் நான் மட்டுமே தமிழ்மண ஸ்டாராக ஓட்டவேண்டியிருக்கும். (சங்கர பாண்டி ஐய்யா அப்பிடியே ஓடிப் போயிடுன்னு சொல்லிட்டார் அவ்வ்வ்வ்)

நான் இதுவரை எடுத்த முடிவுகளிலேயே மிகச்சிறந்த முடிவுகள் இரண்டு, ஒன்று என் இன்றைய மனைவியை 15 வருஷத்துக்கு முன்னர் காதலியாக்கிக் கொண்டது மற்றது 2002 இல் புதுதில்லிக்கு சென்றது. 'comfort zone'-ஐ விட்டு வெளியே வந்தால் தான் உலகம் எவ்வளவு பெரிசுன்னு தெரியும். "A ship is safe in harbor, but that's not what ships are for"ன்னு சும்மாவா சோக்கா சொன்னாங்க? நானும் என்னுடைய 'comfort zone'-ஐ விட்டு வந்தப்புறம்தான் என்னுள் பலப்பல மாற்றங்கள். நான் அன்று தயங்கிய போது என் மனைவி மட்டும் "போய்த்தான் பாக்கலாமே"ன்னு சொல்லாமல் இருந்திருந்தா இன்று நாங்கள் பல விசயங்களை அடைந்திருக்கவே முடியாது.

புதுதில்லியில் இருக்கும் போது ஒரு நாள் நான் திடீரென்று "வேலையை விட்டு விட்டு பிசினஸ் செய்யப்போறே"ன்னு சொன்ன போது அவள் மறுப்பேதும் சொல்லவில்லை. சில
மாதங்களுக்குப் பிறகு "Business is not my cup of tea, I am getting back to work"ன்னு சொன்னபோதும் ஒன்றும் சொல்லலை. வேறொருவராய் இருந்தால் "நான் அன்னிக்கே சொன்னேனே கேட்டானா பாவி மனுஷன் "- பாட்டு ஆரம்பமாகியிருக்கும்.

தமிழ்நாட்டில் உள்ள சில ஏழைக்குழந்தைகளின் படிப்புக்கு பண உதவி செய்யவேண்டும் என்பது என் கனவு. அது பற்றி சொன்ன போது "எவ்வளவு பணம் குடுக்கப் போற?...எப்படி..?"
என்றெல்லாம் மருந்துக்கு கூட கேட்கவில்லை. இப்போதும் நான் என் குடும்பத்தாருக்கு பணமோ / கிப்ஃடோ குடுக்கும் போது "இவ்வளவுதான் குடுக்கப் போறியா, அவங்களுக்கு இது
போதுமான்னு கேட்டியா - வேணும்னா இன்னும் கொஞ்சம் கொடுக்கலாமே" என்பதைத் தவிர வேறு தர்க்கம் ஏதுவும் அவர் செய்து கேட்டறியேன். எத்தனை பேர் மாமியாருக்கும்
நாத்தனாருக்கும் கணவன் பணம் கொடுக்கும் போது இப்படி சொல்வார்கள் என்று நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். நண்பர்களுக்கு பல தடவை பண உதவி செய்து சில சமயம் நஷ்டப்
பட்ட போதும் கூட இன்றளவில் நான் செய்யும் உதவிகளை அவர் ஆட்சேபித்து ஒரு வார்த்தை கூட சொன்னதில்லை.

இதற்கெல்லாம் மேல் அவருக்கு அமெரிக்காவிற்கு ட்ரான்ஸ்பர் ஆகிய போது, நானும் எல்2 விசாவில் அவர் கூடவே வந்து இங்கு வேலை தேடிக்கொள்ளலாம் என்று முடிவு செய்தோம்.
வந்த அடுத்த மாதமே எனக்கு வேலை கிட்டியதென்றாலும், அந்த முப்பது நாளும் நான் சம்பாதிக்கவில்லையே என்று கவலைப் பட்டுவிடக்கூடாதே என்று அவர் கையில் இருந்த பணம் எல்லாவற்றையும் என் கையில் குடுத்து, வங்கிக் கணக்கின் ஆன்லைன் ஆப்ரேஷனையும் என்வசம் ஒப்படைத்து, அவர் செலவுக்குக் கூட என்னிடம் பணம் வாங்கிச்சென்ற அவரின் அன்பையும், பாசத்தையும் நினைத்து நெகிழ்ச்சியோடு ஒரு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

என்னுலகத்தில் அவள் ஒரு முக்கிய அங்கம், அவளுக்கு உலகமே நான் தான். இப்பேற்பட்ட பெருமையை அளித்த அவளுக்கு இந்நன்னாளில் என் வாழ்த்துகளும் நன்றியும்.

இந்த நட்சத்திர வாரம் என் மணநாளில் முடியுமாறு வாய்ப்பை வழங்கிய தமிழ் மண நிர்வாகிகளுக்கும், ஊக்கமளித்த உங்களுக்கும் நன்றி..

அடுத்து வரும் தமிழ்மண நட்சத்திர பதிவருக்கு வாழ்த்துக்களைச் சொல்லி உங்களிடமிருந்து "என்றும் அன்புடன்" விடை பெறுகிறேன் நண்பர்களே...

Wednesday, August 12, 2009

இரண்டாவது துவக்கம்

ஏப்ரல் 2008 ல் எழுத முடிவெடுத்து 3 இடுகைகள் எழுதிய நிலையில் சில பல காரணங்களுக்காக இது வரை எழுதுவதை தவிர்த்து வந்தேன். தமிழ் பதிவுலகில் நான் பார்த்த POLITICS, அதில் நான் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை, நான் ரொம்ப சீக்கிரம் எதற்கும் ADDICT ஆகிவிடுபவன், இதிலும் அப்படி மாட்டிக்கொள்ள வேண்டாம் என்றும் நினைத்தேன்.

15 மாதமாக தமிழ்மணத்தில் வரும் almost every post படித்து வந்தேன்.நான் போட்ட பின்னூட்டங்கள் மூலம் நிறைய நண்பர்கள்.இப்போ என்ன ஆனாலும் சரி, எழுதிதான் பாத்துடுவோம் என்ற முடிவுக்கு வந்துட்டேன். (பயப்படாதீங்க, என் எழுத்து கொஞ்சம் மோசமாக இருக்கும், ரொம்ப மோசமா இருக்காது)
மேட்டருக்கு போவதற்கு முன்னர், ஒரு விஷயத்தை சொல்லணும், இதை கேட்டு விட்டு, காறி துப்புறதா, என்னை அடிக்குறதுக்கு எதையாவது தேடுறதாங்குறதைஉங்க முடிவுக்கே வுடறேன். ஒரு வாரத்துக்கு முன்ன, நம்ம் டுபுக்கு கிட்ட தொலைபேசிய போது, ஏன் ஆரம்பிச்சிட்டு அப்புறம் எழுதலன்னு கேட்டார், நானும் ரொம்ப மரியாதையா, என்ன எழுதறதுன்னு தெரியலன்னு சொன்னேன், சரி, atleast comments போட்டவங்களுக்காவது நன்றி சொல்லலாமே என்று சொன்னார். எனக்கு யாருங்க கமெண்ட்டெல்லாம் போடப்போறாஙக என்று நான் சொன்னதும், டுபுக்கு திட்டியதை அச்சில் ஏத்த முடியாது. பதிவு போட்ட பின்நானே என் பக்கத்தை திறந்து பாக்கல, மக்கா, சத்தியமா சொல்றேன்,16 comments வந்தது எனக்கு தெரியவே தெரியாது. அன்னிக்கு முடிவு பண்ணேன், எழுதுரதுன்னு, நம்ம பதிவுலகம், எவ்வளவோ தாங்கிடுச்சு, இதையும் தாங்காதா என்ன??

என்னையும் ஒரு ஆளா மதிச்சு பின்னூட்டம் போட்ட, கயல் விழி,பிரேம்ஜி, இரா.வசந்தகுமார், ராதா ஸ்ரீராம் (யக்கோவ், word verification எடுத்தாச்சு)காரூரன், டுபுக்கு, லக்கிலுக், கேபிள் (@ யூத்து), வண்ணத்துபூச்சியார், சுரேஷ், வால்பையன், இயற்கை, பிரபா அனைவருக்கும், ஒரு பெரிய நன்றி.தனித்தனியா, பதில் கமெண்டோட நன்றி சொல்ல ஜாக்கி அளவுக்கு எனக்கு சரக்கு போதாது, அதனால, எல்லாருக்கும் பொதுவா ஒரு கும்பிடு.

ஒரு வாரமா, எனக்கு பொறுமையாக,எல்லாத்தையும் சொல்லிக்கொடுத்த, வெட்டிப்பயல் பாலாஜிக்கு ஒரு Special Thanks (பேருக்கேத்தாப்போல, வெட்டியாத்தான் இருக்காருன்னு நினைக்கிறேன், எப்ப போன் பண்ணாலும் எடுத்து, பொறுமையா பதில் சொல்றார்) Infy ல சொல்லி அவருக்கு கொஞ்சம் வேல குடுக்க சொல்லணும்.
என்னை எழுத சொல்லி ஊக்கப் படுத்திய, வெட்டிப்பயல், டுபுக்கு, லக்கி, ஜாக்கி, கேபிள் @ யூத்து , ஹாலிவுட் பாலா, வால்பையன்,நர்சிம்,சீமாச்சு அனைவரையும் அன்புடன் நினைவு கூறுகிறேன்.

எப்படா, மேட்டருக்கு வருவேங்கற உங்களோட Mind Voice எனக்கு கேக்குது. அதனால,நான் சொல்ல வந்தத சொல்லிடறேன், அப்பப்போ பொதுவான விஷயங்களையும், ரெகுலரா H1B - Work Visa for America வை பத்தியும் எழுதலாமுன்னு இருக்கேன், Subject Matter பத்தி எழுத எனக்கு என்னதெரியுமுன்னு கேட்டீங்கன்னா - 3 வருஷமா பாஸ்டன்ல ஒரு Consulting company ல Marketing Department க்கு Head ஆ இருக்கேன், கம்பெனிக்கு கஸ்டமரிடமிருந்த்து Projects தேடுறது, Placement தேடுறது எல்லாம் என் தலைமையில் தான், முக்கியமாக H1B, Greencard Processingஆகியவற்றில் 3 வருஷ அனுபவம். நான் எழுதுவது நாலு பேருக்கு உபயோகமா இருந்தா சந்தோஷம். Applying for H1B, Green Card processing, Choosing the right company, Fulltime Job Vs consulting, How does the Contracting work, life of IT folks in USன்னு பல விஷயங்கள் பற்றி எழுதலாமுன்னு முடிவு பண்ணிருக்கேன், நீங்க ஏதாவது specific ஆ கேட்டா, அது உங்களுக்கு மட்டுமான பதிலா இருந்தா, தனி மடலில் பதில் சொல்கிறேன், எல்லாருக்கும் அந்த பதில் பொதுவா இருந்தா, ஒரு போஸ்ட் போடுறேன்.

மத்தபடி, சமூக அவலங்கள், பாலிடிக்ஸ்,கிரிக்கெட், சினிமா பற்றியும் எழுத ஆசை (கண்டிப்பா நம்ம லெவல் உலக சினிமா இலல, கமல் வாழ்த்து, விஜய்ஜோக்ஸ் இப்படித்தான் இருக்கும்)
சீக்கிரமே நெக்ஸ்ட் மீட் பண்றேன்
என்றும் அன்புடன்ஸ்ரீராம்