நானென்ன பா.ரா வா? இந்த டாலர் தேசம் தொடருக்கு வேற யாராவது முன்னுரை எழுத?
நான் வலைப்பூக்கள் பக்கம் வர ஆரம்பிச்சது 2006ல். மொதல்ல படிக்க ஆரம்பிச்சது டுபுக்கின் எழுத்துக்களை. அதில் இம்ப்ரெஸ் ஆகி இன்னும் பல தளங்களைப் படிக்க ஆரம்பிச்சேன்.
2007, 2008ல பல வலைப்பூக்களைத் தேடித்தேடி படிக்க ஆரம்பிச்சேன், பின்னூட்டப் பதிவராகவே பல இணைய எழுத்தாளர்களுக்கு (இப்போ இந்த Title தான் ஃபேஷன்ல இருக்கு) அறிமுகம் ஆனேன். என்னோட பின்னூட்டங்களைப் பாத்த சில நண்பர்கள் என்கிட்ட கூட சரக்கு இருக்குறதா (தப்பா) நெனச்சி என்னையும் ப்ளாக் தொறக்கச் சொன்னாங்க.
யாருமே பத்த வெக்காமலே ஐஸ்லாண்ட் எரிமலை (அந்த எடத்தோட பேரின் ஸ்பெல்லிங் காப்பி பேஸ்ட் பண்றதுக்குக் கூட கஷ்டமா இருக்கு, எப்படித்தான் உச்சரிக்கராங்களோ?) பத்தி
எரிஞ்ச மாதிரி என்னோட எழுத்துத் தாகம் பத்தி எரிஞ்ச போது ஹாலிவுட் பாலாவும் வெட்டிப்பயல் பாலாஜியும் ரொம்ப கஷ்டப் பட்டு எனக்கு ப்ளாக்னா என்னன்னு புரிய வச்சு ஒரு பக்கத்தையும் வடிவமைச்சுக் கொடுத்தாங்க.(அதுக்காக வருத்தப் பட்டு முடிச்சிட்டாங்களா இல்ல இன்னும் வருத்தப்பட்டுக்கிட்டு இருக்காங்களான்னு தெரியல)
கிறுக்குறதுன்னு முடிவான அப்புறம் என் பேச்சை நானே கேக்காம கண்ட படி கிறுக்கலாமுன்னு நெனச்சேன், ஆனா எனக்கு முன்னாடி இருந்த மிகப் பெரிய கேள்வி - என்ன எழுதுறது?
நானெல்லாம் எழுதுறேங்கறதே ஒரு காமடி இந்த அழகுல நான் எங்க காமடியா எழுதுறது? எனவே எனக்கு கொஞ்சூண்டு தெரிஞ்ச அமெரிக்கன் விசா, வேலை வாய்ப்பு,Green Card, Spoken English, Personality Development பத்தி எழுதலாமுன்னு ஆரம்பிச்சேன். ஒரு சில பதிவுகள் மட்டுமே எழுதிய நிலையில் ஏதேதோ இலக்கில்லாம எழுதினேன். எழுத நேரமிருந்தாலும் என் சோம்பேறித்தனத்தினால் எந்த ஒரு தலைப்பைப் பத்தியும் தொடர்ந்து எழுதல.
இப்போ நான் சொல்லப் போற விசயம் எப்பவுமே நடக்கறதுதான். இருந்தாலும் கடந்த சில வாரங்களில் நடந்த சில பல நிகழ்வுகள் என்னை இந்த தொடர் எழுத வச்சிருக்கு.
1. வளைகுடா நாட்டில் கணணித்துறையில் இல்லாத ஒரு பதிவுலக நண்பர் ஒரு நாள் சாட்டில் வந்து SAP படிக்கலாமுன்னு இருக்கேன், அமெரிக்காவில் SAP இல் வேலை வாய்ப்புக்கள் எப்படி இருக்குன்னு கேட்டார். கணணித்துறையில் வேலை பாக்கும் நண்பர்களின் சம்பளம் அதிகமாக இருப்பதால் 10-15 வருட அனுபவத்தை விட்டு விட்டு துறை மாறத் துணிந்த நண்பரை Discourage செய்தேன்.
2. சீமாச்சு அவர்களின் தோழி அவரிடமிருந்து என் கைப்பேசியின் எண் வாங்கி சென்ற வார இறுதியில் பேசினார். இந்தியாவில் நல்ல கல்லூரியில் B.E Mechanical முடித்து,
அமெரிக்காவில் M.S Mechcalincal Engineering படித்த அவருக்கும் Software Developmentக்கும் ஸ்னானப் ப்ராப்தி கூட கிடையாது. அவரது கேள்வி - நான் எப்படியாவது அமெரிக்காவில் ஐடியில் செட்டிலாகணும், வழி சொல்லுங்க என்பதே. அவருக்கு அதில் உள்ள சாதக பாதகங்களை விளக்கிச் சொன்னேன்.
3. அமெரிக்காவில் வேலை செய்து வரும் பல நண்பர்களுக்கு H1B மற்றும் Green Card பத்தி பல விஷயங்களில் தெளிவின்மையை கண்டிருக்கிறேன். அதற்கு அவர்களையும் குறை
சொல்ல முடியாது, ஏன்னா அவங்க வேலை செய்யும் கம்பெனியில் Transparency என்பது மருந்துக்குக் கூட கிடையாது. H1B விசாவில் வேலை செய்யும் ஒரு கணணி பட்டதாரிக்கு அவருக்கு உள்ள உரிமைகள் பத்தி கூட சமயத்தில தெரியரதில்ல. சிங்கப்பூருக்கும் வளைகுடா நாடுகளுக்கும் செல்லும் கட்டிடத் தொழிலாளிகள் மாதிரி கன்சல்டன்சிகாரன் கூப்பிட்டான் இங்க வந்துட்டேன், ஆனா வேலை கிடைக்கல / சம்பளம் கொடுக்கலேன்னு புலம்புவதை பல முறை பார்த்திருக்கிறேன்.
4. சென்னையில் உள்ள பக்கத்து வீட்டுக்காரர்,என்னுடன் டெல்லியில் பணிபுரிந்தவர்,என் மாமா அனைவருக்கும் ஒரே கேள்வி - என் மகன் B.E படிச்சி முடிச்சிட்டான், அவனுக்கு அமெரிக்காவில் ஐடில ஒரு வேலை வாங்கி கொடுப்பியா என்பதுதான்.
5. இன்னொரு பதிவுலக நண்பர் புகைப்படத்துறையில் நிபுணர், அவருக்கும் ஒரு கேள்வி - தான் அமெரிக்கா எப்படி வருவது? வந்தா கேமரா மேன் வேலை கெடைக்குமா???
இப்படி நம்மில் பலருக்கும் அமெரிக்கா பற்றி ஒரு மாயை இருக்கு (வெளிய இருக்குறவங்களுக்கு எப்படி உள்ள வர்றது மற்றும் உள்ள வந்தவங்களுக்கு எப்படி இங்க நிரந்தரமா தங்கறது) இதுக்குக் காரணம் ஒரு டாலரின் மதிப்பு ஐம்பது ரூபாய். 1 $ = 1 ரூபாய் அதுகூட வேணாம் 1$ = 10 ரூபாய்னு ஆச்சுன்னா நம்மில் பல பேருக்கு அமெரிக்க ஆசை போயிடும். அதனால தான் பா.ரா உபயோகித்த தலைப்பாக இருந்தாலும் இதையே இந்த தொடருக்கு வச்சிருக்கேன்.
US Immigration (H1B, Green Card Process), Full time - Consulting jobs in USA, Study and work in USA, Living in USA
பத்தியெல்லாம் எனக்குத் தெரிஞ்ச கொஞ்ச விஷயங்களை எழுதலாமுன்னு இருக்கேன். இது பத்தி சம்பந்தப் படாதவர்களுக்கு இது போரடிக்கும், நான் எது எழுதினாலும்தான் போரடிக்கும்,
இது சில பேருக்காவது உபயோகமா இருக்கும் எனவே பொருத்தருள்க.
மொதல்ல நல்ல விஷயத்தைப் பத்தி சொல்லலாம். சில மாதங்களுக்கு முன்னால் இருந்த உள்நுழைவு பிரச்சனை பத்தி நம்ம பழமை பேசி இந்த இடுகையில் எழுதியிருந்தார், அதிலேயே இது பத்தி தெளிவு கெடச்சவுடனே எழுதறேன்னு சொல்லியிருந்தேன். என்னோட சோம்பேறித்தனத்தால இன்னிக்கு வரை எழுதல, அது பத்தியும் Current Job Market பத்தியும் அடுத்த இடுகையில எழுதறேன். Stay Tuned for the next post.. Adios
டிஸ்கி : நான் எழுதத் துணிந்த சப்ஜெக்ட் ரொம்பப் பெரிசு.எதப் பத்தி எழுதறதுன்னு யோசிச்சிக்கிட்டே எதப்பத்தியும் எழுதாம காலத்தை ஓட்டிடுவேன் நான், எனவே நீங்க உங்களுக்கு இருக்கும் கேள்விகளை பின்னூட்டத்திலோ அல்லது தனிமடலிலோ அனுப்பினால், அதுக்கு பதில் சொல்லும் சாக்கில் ஒரு தலைப்பை கவர் பண்ணிடுவேன்.
அதுக்காக பாஸ்டன்ல Strip Club எங்க இருக்குன்னெல்லாம் கேக்கப் படாது...சொல்லிட்டேன்..
Monday, April 26, 2010
Friday, April 2, 2010
டாப் டென் படங்கள்
தருமி ஐயாவோட இந்த பதிவ படிச்ச உடனே ரூமெல்லாம் போடாம ஒக்காந்து யோசிச்சேன் - நான் இது வரை பார்த்த தமிழ் படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த 10 படங்கள் எதுன்னு.
நானெல்லாம் ஒரு காமடி பீஸு, என்னை யாரும் தொடர் பதிவு எழுத கூப்பிடமாட்டங்க, அதனால நானே ஜீப்பில ஏறி இந்த டாப் டென் பதிவ போடறேன்.
இந்த பத்துப் படங்கள் தமிழ்த்திரையுலகின் மிகச் சிறந்த படங்கள்னு அர்த்தமாகாது, நான் பார்த்ததில் எனக்கு மிகவும் பிடித்த படங்கள் இவை.
1. அன்பே சிவம்
2. மொழி
3. மூன்றாம் பிறை
4. நாயகன்
5. எதிர் நீச்சல்
6. தவமாய் தவமிருந்து
7. பாட்ஷா - இத விட சிறந்த எண்டர்டெயினர் தமிழில் நான் இதுவரை பார்க்கவில்லை
8. ஆண் பாவம்
9. முதல்வன்
10.ரிதம்.
பம்பாய், சேது, மைக்கேல் மதன காம ராஜன், சலங்கை ஒலி, சர்வர் சுந்தரம் ஆகிய படங்களும் நான் மிகவும் ரசித்தவை. But they did not make it to my top 10.
இதைப் படிக்கும் அனைவரையும் அவர்களுக்குப் பிடித்த பத்து படங்களை பட்டியலிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்..
நானெல்லாம் ஒரு காமடி பீஸு, என்னை யாரும் தொடர் பதிவு எழுத கூப்பிடமாட்டங்க, அதனால நானே ஜீப்பில ஏறி இந்த டாப் டென் பதிவ போடறேன்.
இந்த பத்துப் படங்கள் தமிழ்த்திரையுலகின் மிகச் சிறந்த படங்கள்னு அர்த்தமாகாது, நான் பார்த்ததில் எனக்கு மிகவும் பிடித்த படங்கள் இவை.
1. அன்பே சிவம்
2. மொழி
3. மூன்றாம் பிறை
4. நாயகன்
5. எதிர் நீச்சல்
6. தவமாய் தவமிருந்து
7. பாட்ஷா - இத விட சிறந்த எண்டர்டெயினர் தமிழில் நான் இதுவரை பார்க்கவில்லை
8. ஆண் பாவம்
9. முதல்வன்
10.ரிதம்.
பம்பாய், சேது, மைக்கேல் மதன காம ராஜன், சலங்கை ஒலி, சர்வர் சுந்தரம் ஆகிய படங்களும் நான் மிகவும் ரசித்தவை. But they did not make it to my top 10.
இதைப் படிக்கும் அனைவரையும் அவர்களுக்குப் பிடித்த பத்து படங்களை பட்டியலிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்..
Thursday, April 1, 2010
ரொம்ப நல்லவனின் இரு தவறுகள் மற்றும் இரு வேடங்கள்
ஒரு ஊர்ல ஒரு தான் தோன்றி இருந்தானாம். அவன் ஒரு நாள் ரொம்ப நல்லவங்க ஒண்ணா கூடின எடத்துக்குப் போயிட்டு வந்து தன்னோட நோட்டுப் புத்தகத்தில அது பத்தி
கிறுக்கினானாம். அப்படி கிறுக்கயில ரெண்டு தடவ தப்பு பண்ணானாம். ஒரு தப்பு ஒரு தனி மனுஷியப் பத்தி கமெண்ட் சொன்னது, ரெண்டாவது தப்பு ஒரு சமூகத்தையே நோக்கி
காரணமில்லாமல் மற்றும் அடிப்படை இல்லாமல் புழுதியைத் தூற்றினது.
ரெண்டுமே தப்புதான்னு அவனுக்கும், அவனைச் சுற்றி இருப்பவர்களுக்கும், அந்த நல்லவங்க கூட்டம்னு சொன்னேனில்ல அங்க வந்த எல்லோருக்கும் தெரியும். ஒரு சமூகத்துக்கே அவன் செஞ்ச கொடுமையை எல்லோரும் சுட்டிக் காட்டியும், பல பேர் காட்டமாகக் கூறியும் அவன் அதை தவறுன்னு ஒத்துக்கவுமில்லை, கிறுக்கியதை ரப்பர் போட்டு அழிக்கவுமில்லை. இந்த பஞ்சாயத்து நாலஞ்சு நாள் நடந்தும் இதுதான் நிலைமை.
இவன் ஒரு பெண்மணிக்கு செஞ்ச தப்பை யாருமே சில நாள் கண்டுக்கலை (பெரிய தப்பு சின்ன தப்பை மறைத்து விட்டதுன்னு நினைக்கிறேன்), நாலு நாள் கழிச்சி இரண்டாம் கம்பர்
நல்லவங்க கூட்டம் நடத்தின பின்னர் நடக்கும் அரசியல் பத்தி தன்னோட நோட்ல எழுதும் போது தான் தோன்றியின் இந்த தப்பை சுட்டிக் காட்டி துப்பியிருந்தார். உடனே களத்தில குதிச்ச நண்பர்கள் இது தப்பு, இது தப்புன்னு பின்பாட்டு பாடினார்கள். சம்பந்தப்பட்ட பெண்மணியும் தான் தனக்கு இழைக்கப் பட்ட கொடுமையை தான் பெருந்தன்மையாக மன்னித்து விட்டதாக சொல்லிட்டாங்க. இதுல வேடிக்கை என்னன்னா தான் தோன்றி தான் தப்பாக எதுவும் சொல்லவில்லை, தனது வார்த்தைகளை இரண்டாம் கம்பர் திரித்து விட்டாதாக சொன்னான். அப்படி சொல்லிட்டு உடனே அடிச்சான் பாருங்க பல்டி.. அந்தர் பல்டி, இந்தர் பல்டியெல்லாம் தோத்துப் போயிடும் இவருகிட்ட.
தான் தவறு செய்யவே இல்லைன்னு நம்புறவன் என்னா செய்யணும், சம்பந்தப் பட்டவங்ககிட்ட பேச்சின் மூலமோ எழுத்தின் மூலமோ தனது நிலைப் பாட்டை தெளிவு படுத்தி இருக்கணும். ஆனா நம்ப ஹீரோ என்ன செஞ்சாருன்னா, சம்பந்தப்பட்ட பெண்மணிக்கு போன் பண்ணி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டிருக்கிறார். ஏன்னா ஒரு பெண் சம்பந்தமான குற்றச்சாட்டு தன் மீது சுமத்தப் பட்டால் என்ன ஆகும்னு ஹீரோவுக்கு நல்லாவே தெரியும். கவுஜ படிக்க வர்ற பெண்கள் யாரும் வரமாட்டாங்களே.. கடையில யாருமே கல்லா கட்ட மாட்டாங்களே...
ஒரு பெண்மணிக்கு ஏற்பட்ட மனவருத்தத்தை உணர்ந்து தான் தவறு செய்ததாகவே கருதாத போதிலும் மன்னிப்பு கேட்ட தான் தோன்றி ஒரு சமூகத்தையே கேவலமாகப் பேசியதன் மூலம்
பலருக்கு ஏற்பட்ட (நான் உள்பட) மனவருத்தத்தைப் போக்க ஏதாவது செய்வாரா??? யாராவது கேட்டு சொல்லுங்களேன்... ரெண்டாம் கம்பரே..உங்க சொல்லுக்கு ஹீரோ மதிப்பு
தருவான்னு நெனைக்கிறேன்.. you too Kambar? கேள்விக்கு பதில் சொல்லிட்டு இதுக்கு பதில் கேட்டுச் சொல்லுங்களேன்...
டிஸ்கி 1: இது ஒரு கற்பனைக் கதை, யாரையும் குறிப்பதில்லைன்னு ஜல்லி அடிக்கப் போறதில்லை, நீங்க நெனைக்கிற ஆளைப்பத்தித்தான் சொல்லி இருக்கிறேன்.
டிஸ்கி 2 : இது பல நாள் குமுறல், சும்மா சும்மா தேவையில்லாம பாப்பான்னு எழுதினா எவண்டா ஜாட்டான்னு நானும் கேக்கலாமுன்னு இருக்கேன்.
டிஸ்கி 3 : இது நாள் வரை பின்னூட்டப் பெட்டி திறந்த்துதான் இருந்தது, உங்க எல்லாரோட Maturity மேல இருக்குற நம்பிக்கையில இன்னிக்கும் அப்படியே வச்சிட்டு தூங்கப்
போறேன்.
கிறுக்கினானாம். அப்படி கிறுக்கயில ரெண்டு தடவ தப்பு பண்ணானாம். ஒரு தப்பு ஒரு தனி மனுஷியப் பத்தி கமெண்ட் சொன்னது, ரெண்டாவது தப்பு ஒரு சமூகத்தையே நோக்கி
காரணமில்லாமல் மற்றும் அடிப்படை இல்லாமல் புழுதியைத் தூற்றினது.
ரெண்டுமே தப்புதான்னு அவனுக்கும், அவனைச் சுற்றி இருப்பவர்களுக்கும், அந்த நல்லவங்க கூட்டம்னு சொன்னேனில்ல அங்க வந்த எல்லோருக்கும் தெரியும். ஒரு சமூகத்துக்கே அவன் செஞ்ச கொடுமையை எல்லோரும் சுட்டிக் காட்டியும், பல பேர் காட்டமாகக் கூறியும் அவன் அதை தவறுன்னு ஒத்துக்கவுமில்லை, கிறுக்கியதை ரப்பர் போட்டு அழிக்கவுமில்லை. இந்த பஞ்சாயத்து நாலஞ்சு நாள் நடந்தும் இதுதான் நிலைமை.
இவன் ஒரு பெண்மணிக்கு செஞ்ச தப்பை யாருமே சில நாள் கண்டுக்கலை (பெரிய தப்பு சின்ன தப்பை மறைத்து விட்டதுன்னு நினைக்கிறேன்), நாலு நாள் கழிச்சி இரண்டாம் கம்பர்
நல்லவங்க கூட்டம் நடத்தின பின்னர் நடக்கும் அரசியல் பத்தி தன்னோட நோட்ல எழுதும் போது தான் தோன்றியின் இந்த தப்பை சுட்டிக் காட்டி துப்பியிருந்தார். உடனே களத்தில குதிச்ச நண்பர்கள் இது தப்பு, இது தப்புன்னு பின்பாட்டு பாடினார்கள். சம்பந்தப்பட்ட பெண்மணியும் தான் தனக்கு இழைக்கப் பட்ட கொடுமையை தான் பெருந்தன்மையாக மன்னித்து விட்டதாக சொல்லிட்டாங்க. இதுல வேடிக்கை என்னன்னா தான் தோன்றி தான் தப்பாக எதுவும் சொல்லவில்லை, தனது வார்த்தைகளை இரண்டாம் கம்பர் திரித்து விட்டாதாக சொன்னான். அப்படி சொல்லிட்டு உடனே அடிச்சான் பாருங்க பல்டி.. அந்தர் பல்டி, இந்தர் பல்டியெல்லாம் தோத்துப் போயிடும் இவருகிட்ட.
தான் தவறு செய்யவே இல்லைன்னு நம்புறவன் என்னா செய்யணும், சம்பந்தப் பட்டவங்ககிட்ட பேச்சின் மூலமோ எழுத்தின் மூலமோ தனது நிலைப் பாட்டை தெளிவு படுத்தி இருக்கணும். ஆனா நம்ப ஹீரோ என்ன செஞ்சாருன்னா, சம்பந்தப்பட்ட பெண்மணிக்கு போன் பண்ணி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டிருக்கிறார். ஏன்னா ஒரு பெண் சம்பந்தமான குற்றச்சாட்டு தன் மீது சுமத்தப் பட்டால் என்ன ஆகும்னு ஹீரோவுக்கு நல்லாவே தெரியும். கவுஜ படிக்க வர்ற பெண்கள் யாரும் வரமாட்டாங்களே.. கடையில யாருமே கல்லா கட்ட மாட்டாங்களே...
ஒரு பெண்மணிக்கு ஏற்பட்ட மனவருத்தத்தை உணர்ந்து தான் தவறு செய்ததாகவே கருதாத போதிலும் மன்னிப்பு கேட்ட தான் தோன்றி ஒரு சமூகத்தையே கேவலமாகப் பேசியதன் மூலம்
பலருக்கு ஏற்பட்ட (நான் உள்பட) மனவருத்தத்தைப் போக்க ஏதாவது செய்வாரா??? யாராவது கேட்டு சொல்லுங்களேன்... ரெண்டாம் கம்பரே..உங்க சொல்லுக்கு ஹீரோ மதிப்பு
தருவான்னு நெனைக்கிறேன்.. you too Kambar? கேள்விக்கு பதில் சொல்லிட்டு இதுக்கு பதில் கேட்டுச் சொல்லுங்களேன்...
டிஸ்கி 1: இது ஒரு கற்பனைக் கதை, யாரையும் குறிப்பதில்லைன்னு ஜல்லி அடிக்கப் போறதில்லை, நீங்க நெனைக்கிற ஆளைப்பத்தித்தான் சொல்லி இருக்கிறேன்.
டிஸ்கி 2 : இது பல நாள் குமுறல், சும்மா சும்மா தேவையில்லாம பாப்பான்னு எழுதினா எவண்டா ஜாட்டான்னு நானும் கேக்கலாமுன்னு இருக்கேன்.
டிஸ்கி 3 : இது நாள் வரை பின்னூட்டப் பெட்டி திறந்த்துதான் இருந்தது, உங்க எல்லாரோட Maturity மேல இருக்குற நம்பிக்கையில இன்னிக்கும் அப்படியே வச்சிட்டு தூங்கப்
போறேன்.
Sunday, February 7, 2010
அப்ரைசல் ஆப்பு வைக்காமல் இருக்க:
நல்ல நாளிலேயே நமக்கெல்லாம் அப்ரைசல் ஆப்புவைக்கும் வைபவமாகவே இருக்கும், இப்போ இருக்குற (உண்மையிலேயே இன்னும் இருக்கா??)பொருளாதார மந்த நெலமையில ஆப்பு இன்னும் ஸ்ட்ராங்காவே இருக்கும். அப்படியெல்லாம் ஆகாம இருக்க என்ன பண்ணனும்னு இந்தப் பதிவில் பாக்கலாம்.
மொதல்ல Performance Appraisalனா என்னன்னு பாக்கலாம், ஏற்கனவே முடிவு செஞ்சி வச்சிருக்குற ஊதிய உயர்வை கொடுக்குறதுக்குஅல்லது ஊதிய உயர்வு இல்லேன்னு சொல்றதுக்கு முன்னாடி நடக்குற சடங்குன்னு நீங்கல்லாம் சொல்றது கேக்குது, ஆனால் Ideal Appraisal அப்படி இருக்கக் கூடாது.
அப்ரைசலின் முக்கிய நோக்கங்கள்
சென்ற வருடத்தில் நீங்க செஞ்ச வேலைக்கான Feedback கொடுக்க
நடப்பு ஆண்டிற்க்கான் இலக்கை நிர்ணயம் செய்ய (To set the Target for this Year)
சம்பள உயர்வுக்கும் பதவி உயர்வுக்கும் தேவையானவற்றை முடிவு செய்ய (To set a base for salary increases, promotions,bonuses)
நிர்வாகத்துக்கும் ஊழியர்களுக்கும் இடையே அதிகாரபூர்வமான பேச்சுவார்த்தை நடத்த.
சில பல நிர்வாகங்கள் வேலை செய்பவர்களை சுய மதிப்பீட்டு அறிக்கை (Self Evaluation report) கொடுக்கச் சொல்வார்கள். உங்க கம்பெனியில் கேட்டாலும் கேட்காவிட்டாலும் இந்த ரிப்போர்ட்டை கண்டிப்பா அப்ரைசலுக்கு முன்னர் தயார் பண்ணுங்க,This will help you in presenting your case in the appraisal and to be in the driver's seat of the review process. இதில் நாலு விஷயங்களை கவர் பண்ணனும், அவை
1.Job Resposibilities and Skills
2. Achievement
3.Overall Performance and
4.Goal Setting.
தனக்குத்தானே ரிவ்யூ எழுதுவது கடினமான காரியம், முடிந்த அளவுக்கு ரிவ்யூ சப்ஜெக்டிவ்வாக இல்லாமல் Measurable ஆக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
Tangible / Measurable format will allow you to show how you are contributing to your employer's bottom line.
உதாரணமாக : Your contribution in getting a new client on board and the revenue from that client.
1. திறமைகள் மற்றும் வேலை விவரங்கள் (Skills and Job Responsibilities)
ரிப்போர்ட்டின் முதல் பாகத்தில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு வேலையையும் (ஆபிஸ் நேரத்தில் ப்ளாக் படிப்பதையும் கிறுக்குவதையும் சொல்லவே கூடாது)
- Phone calls, Emails, Budgets, Account Follow up, Client meetings, Coding, Testing எதையும் விடாமல் பட்டியலிடுங்கள்.
அடுத்து உங்களுக்கு இருக்கும் அனைத்து திறமைகளையும் (அப்படின்னு ஒண்ணு இல்லாதவங்க என்னய மாதிரி கற்பனை குதிரையைத் தட்டிவிட்டு ஏதாவது
எழுதுங்க) - Strong Communication skills, Project managament skills, Ability to focus on achieving strategic objectives Nurturing and instilling confidence in your team memebers - பட்டியலிடுங்கள்.
நீங்க செய்த வேலைகளையும், குறிப்பிட்ட வேலையை தனியாகச் செய்தீர்களா அல்லது ஒரு குழுவின் அங்கமாக செயல்பட்டீர்களா என்பதையும் தெளிவாகக் குறிப்பிடுங்கள். ஒரு குறிப்பிட்ட பிரிவையோ (Division) ஒரு குறிப்பிட்டா க்ளையண்டையோ நீங்கள் நிர்வகித்து இருந்தால், அந்தப் பிரிவின் சென்ற வருட இலக்கையும (Target), Achievementயும் குறிப்பிடுங்கள். Mentioning the value makes a better impact.
Ex : I manage a team, I lead the group, I worked with the team on XYZ accounts, I worked on a $ 50 M account alone successfully, managing the day to day communication with 100 clients.
2. சென்ற வருடத்தில் நீங்க சாதித்ததை (Achievement) தெளிவாகப் பட்டியலிடுங்கள். Be Honest but make sure to acknowledge all your accomplishments. இங்கு உபயோகிக்க வேண்டிய சில வார்த்தைகள்
** Successfully
** Contributed
** Negotiated
** Supported
** Nurtured
நீங்கள் தனியாக சாதித்தவற்றையும், குழுவாகச் செய்தவற்றையும் தனித்தனியே குறிப்பிடுங்கள். ஒரு போதும் அணியின் / இலாகாவின் (Team / Department)வெற்றியை தனதாக்க வேண்டாம்.
நீங்கள் கொணர்ந்த க்ளையண்ட் மூலம் சென்ற வருடம் கிடைத்த வருமானத்தை மட்டுமல்லாமல் வருமாண்டுகளில் அந்த க்ளையண்ட்டிடமிருந்து எதிர்நோக்கும்
வருமானத்தையும் குறிப்பிடுங்கள் (Forecast)
சென்ற வருடம் உங்கள் கம்பெனி சரிவை நோக்கி சென்றிருந்தால், உங்கள் இலாகா மற்ற இலாகாகளை விட எவ்வாறு சிறப்பாக செயல்பட்டதுன்னு சொல்லுங்க
Ex. Successfully cut costs to help the bottomline of the company.
3. Overall Performance.
இதில் மூன்று விஷயங்கள சொல்லணும், Strength, Growth and Areas that need improvement.
கண்டிப்பா ஓரிரு பாயிண்ட் Needs Improvement லிஸ்டில் இருக்கட்டும் (This enhances your credibility) ஆனா எப்பவும் Strength லிஸ்ட்ல அதிக பாயிண்ட்ஸ் இருக்கட்டும்.
Strength : List what you do and feel confident about. Demostrate your understading of the market in which your company operates. கம்பெனியின் வளர்ச்சிக்கும் லாபத்துக்கும் உங்களின் பங்கை தெளிவாகச் சொல்லுங்கள்.
Growth : சென்ற வருடத்தில் நடந்த முக்கியமான வளர்ச்சிகளை குறிப்பிடுங்கள். நீங்க புதுசா கத்துக்கிட்டதை எப்படி Implement செஞ்சீங்கன்னு சொல்லுங்க
EX : Skill your recently acquired, How PMP certification helped you to be a better project manager etc.
Needs Improvement : நீங்க எந்தெந்த விஷயங்களில் முன்னெற நினைக்கிறீர்கள்னு சொல்லுங்கள், கூடவே இலக்கினை அடைய இதுவரை எடுத்துள்ள முயற்சி பற்றி சொல்லுங்கள். இலக்கினை அடைய உங்களின் திட்டமும் Deadline உம் மிக அவசியம்.
4. அடுத்தாண்டிற்கான இலக்கு (Goal Setting):
அடுத்தாண்டுக்கான நீங்கள் எண்ணியிருக்கும் டார்கெட்டை குறிப்பிடுங்கள். ஒரு விஷயம் ஞாபகம் இருக்கட்டும் - கை எட்டும் தூரத்தில் இருப்பது - Reachable கஷ்டப்பட்டு எட்டிப் பிடிப்பது - Goal. உங்க கோல் எப்போதும் கஷ்டப்பட்டு எட்டும் படி இருக்கட்டும். அதுக்கப்புறம் உங்க மேனேஜரிடம் கலந்தாலோசித்து இலக்கில் மூன்று விஷயங்களை முடிவு செய்யுங்கள்.
இலக்குகள் என்னென்ன (What are the goals)
அவற்றை அடையும் வழி மற்றும் திட்டம் (How to achieve the goals)
Priority and On a Scale of one to hundred what weight do they have on your job.
Plan B - மாற்றுத்திட்டம் திட்டமிடலின் முக்கிய அம்சம், உங்களின் Plan B யும் தெளிவாக இருக்கட்டும்.
இவற்றின் மூலம் உங்களின் அடுத்தாண்டு அப்ரைசல் எதன் அடிப்படையில் இருக்குமென்று தெளிவாக குறிப்பிட முடியும்.
Good luck with your evaluation and remember - There is no harm in self promotion.
பின்குறிப்பு : எவ்வளவோ முயன்றும் இதை விட கம்மியா ஆங்கிலம் உபயோகிக்க முடியவில்லை, மன்னிக்கவும்.
மொதல்ல Performance Appraisalனா என்னன்னு பாக்கலாம், ஏற்கனவே முடிவு செஞ்சி வச்சிருக்குற ஊதிய உயர்வை கொடுக்குறதுக்குஅல்லது ஊதிய உயர்வு இல்லேன்னு சொல்றதுக்கு முன்னாடி நடக்குற சடங்குன்னு நீங்கல்லாம் சொல்றது கேக்குது, ஆனால் Ideal Appraisal அப்படி இருக்கக் கூடாது.
அப்ரைசலின் முக்கிய நோக்கங்கள்
சென்ற வருடத்தில் நீங்க செஞ்ச வேலைக்கான Feedback கொடுக்க
நடப்பு ஆண்டிற்க்கான் இலக்கை நிர்ணயம் செய்ய (To set the Target for this Year)
சம்பள உயர்வுக்கும் பதவி உயர்வுக்கும் தேவையானவற்றை முடிவு செய்ய (To set a base for salary increases, promotions,bonuses)
நிர்வாகத்துக்கும் ஊழியர்களுக்கும் இடையே அதிகாரபூர்வமான பேச்சுவார்த்தை நடத்த.
சில பல நிர்வாகங்கள் வேலை செய்பவர்களை சுய மதிப்பீட்டு அறிக்கை (Self Evaluation report) கொடுக்கச் சொல்வார்கள். உங்க கம்பெனியில் கேட்டாலும் கேட்காவிட்டாலும் இந்த ரிப்போர்ட்டை கண்டிப்பா அப்ரைசலுக்கு முன்னர் தயார் பண்ணுங்க,This will help you in presenting your case in the appraisal and to be in the driver's seat of the review process. இதில் நாலு விஷயங்களை கவர் பண்ணனும், அவை
1.Job Resposibilities and Skills
2. Achievement
3.Overall Performance and
4.Goal Setting.
தனக்குத்தானே ரிவ்யூ எழுதுவது கடினமான காரியம், முடிந்த அளவுக்கு ரிவ்யூ சப்ஜெக்டிவ்வாக இல்லாமல் Measurable ஆக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
Tangible / Measurable format will allow you to show how you are contributing to your employer's bottom line.
உதாரணமாக : Your contribution in getting a new client on board and the revenue from that client.
1. திறமைகள் மற்றும் வேலை விவரங்கள் (Skills and Job Responsibilities)
ரிப்போர்ட்டின் முதல் பாகத்தில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு வேலையையும் (ஆபிஸ் நேரத்தில் ப்ளாக் படிப்பதையும் கிறுக்குவதையும் சொல்லவே கூடாது)
- Phone calls, Emails, Budgets, Account Follow up, Client meetings, Coding, Testing எதையும் விடாமல் பட்டியலிடுங்கள்.
அடுத்து உங்களுக்கு இருக்கும் அனைத்து திறமைகளையும் (அப்படின்னு ஒண்ணு இல்லாதவங்க என்னய மாதிரி கற்பனை குதிரையைத் தட்டிவிட்டு ஏதாவது
எழுதுங்க) - Strong Communication skills, Project managament skills, Ability to focus on achieving strategic objectives Nurturing and instilling confidence in your team memebers - பட்டியலிடுங்கள்.
நீங்க செய்த வேலைகளையும், குறிப்பிட்ட வேலையை தனியாகச் செய்தீர்களா அல்லது ஒரு குழுவின் அங்கமாக செயல்பட்டீர்களா என்பதையும் தெளிவாகக் குறிப்பிடுங்கள். ஒரு குறிப்பிட்ட பிரிவையோ (Division) ஒரு குறிப்பிட்டா க்ளையண்டையோ நீங்கள் நிர்வகித்து இருந்தால், அந்தப் பிரிவின் சென்ற வருட இலக்கையும (Target), Achievementயும் குறிப்பிடுங்கள். Mentioning the value makes a better impact.
Ex : I manage a team, I lead the group, I worked with the team on XYZ accounts, I worked on a $ 50 M account alone successfully, managing the day to day communication with 100 clients.
2. சென்ற வருடத்தில் நீங்க சாதித்ததை (Achievement) தெளிவாகப் பட்டியலிடுங்கள். Be Honest but make sure to acknowledge all your accomplishments. இங்கு உபயோகிக்க வேண்டிய சில வார்த்தைகள்
** Successfully
** Contributed
** Negotiated
** Supported
** Nurtured
நீங்கள் தனியாக சாதித்தவற்றையும், குழுவாகச் செய்தவற்றையும் தனித்தனியே குறிப்பிடுங்கள். ஒரு போதும் அணியின் / இலாகாவின் (Team / Department)வெற்றியை தனதாக்க வேண்டாம்.
நீங்கள் கொணர்ந்த க்ளையண்ட் மூலம் சென்ற வருடம் கிடைத்த வருமானத்தை மட்டுமல்லாமல் வருமாண்டுகளில் அந்த க்ளையண்ட்டிடமிருந்து எதிர்நோக்கும்
வருமானத்தையும் குறிப்பிடுங்கள் (Forecast)
சென்ற வருடம் உங்கள் கம்பெனி சரிவை நோக்கி சென்றிருந்தால், உங்கள் இலாகா மற்ற இலாகாகளை விட எவ்வாறு சிறப்பாக செயல்பட்டதுன்னு சொல்லுங்க
Ex. Successfully cut costs to help the bottomline of the company.
3. Overall Performance.
இதில் மூன்று விஷயங்கள சொல்லணும், Strength, Growth and Areas that need improvement.
கண்டிப்பா ஓரிரு பாயிண்ட் Needs Improvement லிஸ்டில் இருக்கட்டும் (This enhances your credibility) ஆனா எப்பவும் Strength லிஸ்ட்ல அதிக பாயிண்ட்ஸ் இருக்கட்டும்.
Strength : List what you do and feel confident about. Demostrate your understading of the market in which your company operates. கம்பெனியின் வளர்ச்சிக்கும் லாபத்துக்கும் உங்களின் பங்கை தெளிவாகச் சொல்லுங்கள்.
Growth : சென்ற வருடத்தில் நடந்த முக்கியமான வளர்ச்சிகளை குறிப்பிடுங்கள். நீங்க புதுசா கத்துக்கிட்டதை எப்படி Implement செஞ்சீங்கன்னு சொல்லுங்க
EX : Skill your recently acquired, How PMP certification helped you to be a better project manager etc.
Needs Improvement : நீங்க எந்தெந்த விஷயங்களில் முன்னெற நினைக்கிறீர்கள்னு சொல்லுங்கள், கூடவே இலக்கினை அடைய இதுவரை எடுத்துள்ள முயற்சி பற்றி சொல்லுங்கள். இலக்கினை அடைய உங்களின் திட்டமும் Deadline உம் மிக அவசியம்.
4. அடுத்தாண்டிற்கான இலக்கு (Goal Setting):
அடுத்தாண்டுக்கான நீங்கள் எண்ணியிருக்கும் டார்கெட்டை குறிப்பிடுங்கள். ஒரு விஷயம் ஞாபகம் இருக்கட்டும் - கை எட்டும் தூரத்தில் இருப்பது - Reachable கஷ்டப்பட்டு எட்டிப் பிடிப்பது - Goal. உங்க கோல் எப்போதும் கஷ்டப்பட்டு எட்டும் படி இருக்கட்டும். அதுக்கப்புறம் உங்க மேனேஜரிடம் கலந்தாலோசித்து இலக்கில் மூன்று விஷயங்களை முடிவு செய்யுங்கள்.
இலக்குகள் என்னென்ன (What are the goals)
அவற்றை அடையும் வழி மற்றும் திட்டம் (How to achieve the goals)
Priority and On a Scale of one to hundred what weight do they have on your job.
Plan B - மாற்றுத்திட்டம் திட்டமிடலின் முக்கிய அம்சம், உங்களின் Plan B யும் தெளிவாக இருக்கட்டும்.
இவற்றின் மூலம் உங்களின் அடுத்தாண்டு அப்ரைசல் எதன் அடிப்படையில் இருக்குமென்று தெளிவாக குறிப்பிட முடியும்.
Good luck with your evaluation and remember - There is no harm in self promotion.
பின்குறிப்பு : எவ்வளவோ முயன்றும் இதை விட கம்மியா ஆங்கிலம் உபயோகிக்க முடியவில்லை, மன்னிக்கவும்.
Thursday, January 21, 2010
ஒரு சூப்பர் அப்ளிகேஷன்
டிஸ்கி : சுட்டபழம்
To: The Personnel manager
RE: Replacement of the dead manager
I refer to the recent death of the manager at your company and wish to apply for the replacement of the dead manager.
Each time I apply for employment I am told there is no vacancy but on this one I even attended the funeral and the all burial process and made sure that I hear from you who will take up the position. All I can remember is you saying that he will be difficult to replace meaning there is no one at the moment.
Its sad that he has left us but at least I benefit as he has left a vacancy for me.
I only hope there will be no corruption as we are all still mourning. He was my neighbor and it will be easy for me to continue with his legacy because I was seeing the time he was come for work and knocking off.
I will be sending my pictures whilst attending the funeral and burial so that you can see how tough I was and can be when employed.
Thanks for advertising the funeral because I could not have known.
Yours smiling,
XXX.
To: The Personnel manager
RE: Replacement of the dead manager
I refer to the recent death of the manager at your company and wish to apply for the replacement of the dead manager.
Each time I apply for employment I am told there is no vacancy but on this one I even attended the funeral and the all burial process and made sure that I hear from you who will take up the position. All I can remember is you saying that he will be difficult to replace meaning there is no one at the moment.
Its sad that he has left us but at least I benefit as he has left a vacancy for me.
I only hope there will be no corruption as we are all still mourning. He was my neighbor and it will be easy for me to continue with his legacy because I was seeing the time he was come for work and knocking off.
I will be sending my pictures whilst attending the funeral and burial so that you can see how tough I was and can be when employed.
Thanks for advertising the funeral because I could not have known.
Yours smiling,
XXX.
Monday, December 28, 2009
நல்ல மேனேஜரின் நற்குணங்கள் நாலு - பாகம் 2
பாகம் 1 இங்கே காணலாம்.
போன பாகத்தில் என்னை பாதித்த மேனேஜர்களின் 4 நல்ல குணங்கள் பத்திப் பாத்தோம், இந்த பகுதியில் இன்னுமொரு 4 பாயிண்ட் பாக்கலாம்.
1. பாரபட்சம் காட்டாதீர்கள் :
As the famous saying goes "Employees don't intend to leave the company but their managers" மேனேஜர்களின் மீது மிக அதிகமாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு - பாரபட்சமாக நடந்து கொள்கிறார் என்பது. டீமில் யாருக்கும் ”Special Treatment” கொடுக்காதீர்கள். ஜால்ரா அடிப்பவர்கள் / ஜொள் விட அனுமதிக்கும் பெண்கள் /மேனேஜருக்கு பர்சனல் வேலை செய்பவர்கள் போன்றவர்களுக்கு பாரபட்சம் காட்டுவது நீங்களே உங்களுக்கு குழி பறித்துக் கொள்வதற்கு சமம். நல்ல வேலையாட்கள் உங்கள் டீமில் தங்க மாட்டார்கள்.
பெண்களை இரவு ரொம்ப லேட்டாக ஆபிஸில் வேலை வாங்காமல் சீக்கிரம் அனுப்புவது பாரபட்சம் ஆகாது.
2. பாராட்டுங்கள் தாராளமாக: தவறுகளை சுட்டிக் காட்டும் போதும், திட்டுக்களையும் பிறருக்கு தெரியாமல் தனிமையில் செய்யுங்கள். டீமில் ஒருவர் செய்த நல்ல செயலை உடனடியாக பாராட்டுங்கள் அதையும் பொதுவில் செய்யுங்கள். Never mince words while appreciating. Appreciation email அனுப்பும் போது மொத்த டீமுக்கும் copy பண்ணி அனுப்புங்கள், முக்கியமாக மேனேஜ்மெட்டில் இருக்கும் ஒருவரையும் இமெயிலில் சேருங்கள்.அப்ரைசல் செய்யும் போதும் முதலில் ஒருவர் செய்த நல்ல விஷயங்களை சொல்லிவிட்டு பிறகு குறைபாடுகளை சொல்லுங்கள்- உங்கள் மீதான மதிப்பு கூடும்.
3. ஆபிஸ் நேரத்துக்குப் பின் அழைக்கும் போது அனுமதி கேளுங்கள்:
கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டியவைகளில் முக்கியமானது இது. ஆபிஸ் மட்டுமே வாழ்க்கையில்லை, எல்லோருக்கும் Personal Life உண்டு, ஆபிஸ் நேரத்துக்குப் பின் ஒருவரை தொந்தரவு செய்யும் உரிமை எந்த
மேனேஜருக்கும் இல்லை. முடிந்த வரை வேலை நேரத்துக்குப் பின் வேலை சொல்வதையோ / போன் பண்ணுவதையோ தவிருங்கள், தவிர்க்கமுடியாமல் அழைக்கும் பட்சத்தில் முதலில் அகால நேரத்தில் அழைத்தமைக்கு வருத்தம் தெரிவித்து விட்டு அவரால் பேச இயலுமா என்று கேட்டு விட்டு விஷயத்தைச் சொல்லுங்கள்.
4. Exit Interview :
Every good thing in life has an end, your mate's tenure in your team is no exception- இதனை எப்போதும் மனதில் வையுங்கள். டீமில் ஒருவருக்கு நல்ல வாய்ப்பு அமைந்து அவர் resign செய்தால் அவரை வாழ்த்தி அனுப்புங்கள். கண்டிப்பாக ஒரு Exit Interview
நடத்துங்கள். கம்பெனியில் / உங்கள் டீமில் சரியில்லாத விஷயங்கள் எவை என்று கேளுங்கள். ஏதாவது ஒன்றை மாற்றி அமைக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தால் அவர் எதை மாற்றுவார் என்று கேளுங்கள். அவர் உங்கள் பெயரை Manager's reference ஆக எப்போதும் பயன் படுத்தலாமென
சொல்லுங்கள்.
ஒரு மாசத்துக்கும் மேலாக எதுவும் கிறுக்கவில்லை, அப்படி இருந்தும் இந்தப் பக்கம் அடிக்கடி வந்து ஏன் கிறுக்கலைன்னு கேட்ட அன்பு உள்ளங்களுக்கு நன்றி..
ஒரு பத்து நாள் Florida, Bahamas Trip போயிட்டு வந்தேன், பயணக் கட்டுரை எழுதுற அளவுக்கெல்லாம் சரக்கு இல்லைங்க, எனவே படங்கள் போடுறேன் அடுத்த பதிவில்...
போன பாகத்தில் என்னை பாதித்த மேனேஜர்களின் 4 நல்ல குணங்கள் பத்திப் பாத்தோம், இந்த பகுதியில் இன்னுமொரு 4 பாயிண்ட் பாக்கலாம்.
1. பாரபட்சம் காட்டாதீர்கள் :
As the famous saying goes "Employees don't intend to leave the company but their managers" மேனேஜர்களின் மீது மிக அதிகமாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு - பாரபட்சமாக நடந்து கொள்கிறார் என்பது. டீமில் யாருக்கும் ”Special Treatment” கொடுக்காதீர்கள். ஜால்ரா அடிப்பவர்கள் / ஜொள் விட அனுமதிக்கும் பெண்கள் /மேனேஜருக்கு பர்சனல் வேலை செய்பவர்கள் போன்றவர்களுக்கு பாரபட்சம் காட்டுவது நீங்களே உங்களுக்கு குழி பறித்துக் கொள்வதற்கு சமம். நல்ல வேலையாட்கள் உங்கள் டீமில் தங்க மாட்டார்கள்.
பெண்களை இரவு ரொம்ப லேட்டாக ஆபிஸில் வேலை வாங்காமல் சீக்கிரம் அனுப்புவது பாரபட்சம் ஆகாது.
2. பாராட்டுங்கள் தாராளமாக: தவறுகளை சுட்டிக் காட்டும் போதும், திட்டுக்களையும் பிறருக்கு தெரியாமல் தனிமையில் செய்யுங்கள். டீமில் ஒருவர் செய்த நல்ல செயலை உடனடியாக பாராட்டுங்கள் அதையும் பொதுவில் செய்யுங்கள். Never mince words while appreciating. Appreciation email அனுப்பும் போது மொத்த டீமுக்கும் copy பண்ணி அனுப்புங்கள், முக்கியமாக மேனேஜ்மெட்டில் இருக்கும் ஒருவரையும் இமெயிலில் சேருங்கள்.அப்ரைசல் செய்யும் போதும் முதலில் ஒருவர் செய்த நல்ல விஷயங்களை சொல்லிவிட்டு பிறகு குறைபாடுகளை சொல்லுங்கள்- உங்கள் மீதான மதிப்பு கூடும்.
3. ஆபிஸ் நேரத்துக்குப் பின் அழைக்கும் போது அனுமதி கேளுங்கள்:
கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டியவைகளில் முக்கியமானது இது. ஆபிஸ் மட்டுமே வாழ்க்கையில்லை, எல்லோருக்கும் Personal Life உண்டு, ஆபிஸ் நேரத்துக்குப் பின் ஒருவரை தொந்தரவு செய்யும் உரிமை எந்த
மேனேஜருக்கும் இல்லை. முடிந்த வரை வேலை நேரத்துக்குப் பின் வேலை சொல்வதையோ / போன் பண்ணுவதையோ தவிருங்கள், தவிர்க்கமுடியாமல் அழைக்கும் பட்சத்தில் முதலில் அகால நேரத்தில் அழைத்தமைக்கு வருத்தம் தெரிவித்து விட்டு அவரால் பேச இயலுமா என்று கேட்டு விட்டு விஷயத்தைச் சொல்லுங்கள்.
4. Exit Interview :
Every good thing in life has an end, your mate's tenure in your team is no exception- இதனை எப்போதும் மனதில் வையுங்கள். டீமில் ஒருவருக்கு நல்ல வாய்ப்பு அமைந்து அவர் resign செய்தால் அவரை வாழ்த்தி அனுப்புங்கள். கண்டிப்பாக ஒரு Exit Interview
நடத்துங்கள். கம்பெனியில் / உங்கள் டீமில் சரியில்லாத விஷயங்கள் எவை என்று கேளுங்கள். ஏதாவது ஒன்றை மாற்றி அமைக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தால் அவர் எதை மாற்றுவார் என்று கேளுங்கள். அவர் உங்கள் பெயரை Manager's reference ஆக எப்போதும் பயன் படுத்தலாமென
சொல்லுங்கள்.
ஒரு மாசத்துக்கும் மேலாக எதுவும் கிறுக்கவில்லை, அப்படி இருந்தும் இந்தப் பக்கம் அடிக்கடி வந்து ஏன் கிறுக்கலைன்னு கேட்ட அன்பு உள்ளங்களுக்கு நன்றி..
ஒரு பத்து நாள் Florida, Bahamas Trip போயிட்டு வந்தேன், பயணக் கட்டுரை எழுதுற அளவுக்கெல்லாம் சரக்கு இல்லைங்க, எனவே படங்கள் போடுறேன் அடுத்த பதிவில்...
Friday, November 20, 2009
டெண்டுல்கர் - இப்பவாவது இவர இந்த உலகம் நம்புமா?
சச்சின் டெண்டுல்கர் - Probably இந்தியாவில் அதிகம் நேசிக்கப்பட்ட அதே சமயம் அதிகம் குறை கூறப்பட்ட பெயர்.
இன்னுமா இவன இந்த உலகம் நம்புதுங்கற ரேஞ்சில இருக்குற பல பேர நமக்குத் தெரியும், ஆனால் இன்னுமா இவரது திறமையில் சந்தேகம், இன்னுமா இவர இந்த உலகம் நம்பலன்னு சொல்லக்கூடிய வெகுசிலரில் சச்சினும் ஒருவர்.

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இவரது Match Saving Century க்கு அப்புறமாவது டெண்டுல்கருக்கு எதிரான விமர்சனங்களை நிறுத்துவார்களா? எத்தனையோ Match Winning Innings ஆடியிருந்தாலும் இந்த இன்னிங்க்ஸும் மிக முக்கியமான ஒன்று.
லோஷனின் எதிர்பார்ப்பை தவிடு பொடியாக்கிய சச்சின் Critics இன் கூற்றையும் தவறென நிரூபித்திருக்கிறார். இனிமேலாவது சச்சின் முக்கியமான தருணங்களில் ரன் எடுப்பதில்லை / தனக்காக ஆடுகிறார், டீமுக்காக ஆடுவதில்லைன்னு சொல்றதையெல்லாம் நிறுத்துவார்களா பெரியவர்கள்??
சச்சினின் சாதனைகள் மிக அதிகம், எல்லாருக்கும் தெரிந்த விஷயங்களை மீண்டும் சொல்லி போர் அடிக்க விரும்பவில்லை, இதை மட்டும் பாருங்கள்
30,055 இண்டர்நேஷனல் ரன்கள், 88 சதங்கள், 144 அரை சதங்கள், டெஸ்ட் ஆவரேஜ் 54.79, ODI average 44.50 at a strike rate of 85.79. இதற்கு மேலும் ஒரு குழு ஆட்டத்தில் தனி நபரிடம் என்னதான் இந்த பாழப்போன விமர்சகர்கள் எதிர்பார்க்கிறார்கள் எனத் தெரியவில்லை.
நவ்ஜோத் சித்து சொன்னது போல - Statistics is like mini skirt, it reveals most of the things but not the most import thing. சச்சின் எண்களில மட்டுமல்லாமல் Attitude / Commitment போன்றவற்றிலும் மிக உயர்ந்து நிற்கும் ஒரு மனிதர். ஆஸ்திரேலியாவிற்கு
எதிரான ஷார்ஜா ஆட்டங்கள், தந்தை இறந்து சில நாட்களிலேயே விளையாடச் சென்றது, சிட்னி சென்சுரி இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்.
ஐந்தரை அடி கூட உயரம் இல்லாத ஒரு இந்தியர் இப்படி விஸ்வரூபம் எடுத்திருப்பதை நினைத்து பெருமை படுங்கள், குறை சொல்வதை நிறுத்துங்கள்..
AB, this lil prick is going to make more runs than you one day... ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் மெர்வ் ஹூக்ஸ் ஆலன் பார்டரிடம் சச்சின் பத்தி சொன்னது - அவர் வாயில் சர்க்கரையை தூக்கி கொட்ட - அன்றே என்ன ஒரு நிதர்சனம்.....
If I've to bowl to Sachin, I'll bowl with my helmet on. He hits the ball so hard: Dennis Lillee. He is 99.5 per cent perfect. I'd pay to see him: Viv Richards.
நம்ம விமர்சகர்கள் விவியனைவிடவும் லில்லியை விடவும் அதிகம் கிரிக்கெட் பத்தி தெரிஞ்சவங்களா??
இன்னுமா இவன இந்த உலகம் நம்புதுங்கற ரேஞ்சில இருக்குற பல பேர நமக்குத் தெரியும், ஆனால் இன்னுமா இவரது திறமையில் சந்தேகம், இன்னுமா இவர இந்த உலகம் நம்பலன்னு சொல்லக்கூடிய வெகுசிலரில் சச்சினும் ஒருவர்.

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இவரது Match Saving Century க்கு அப்புறமாவது டெண்டுல்கருக்கு எதிரான விமர்சனங்களை நிறுத்துவார்களா? எத்தனையோ Match Winning Innings ஆடியிருந்தாலும் இந்த இன்னிங்க்ஸும் மிக முக்கியமான ஒன்று.
லோஷனின் எதிர்பார்ப்பை தவிடு பொடியாக்கிய சச்சின் Critics இன் கூற்றையும் தவறென நிரூபித்திருக்கிறார். இனிமேலாவது சச்சின் முக்கியமான தருணங்களில் ரன் எடுப்பதில்லை / தனக்காக ஆடுகிறார், டீமுக்காக ஆடுவதில்லைன்னு சொல்றதையெல்லாம் நிறுத்துவார்களா பெரியவர்கள்??
சச்சினின் சாதனைகள் மிக அதிகம், எல்லாருக்கும் தெரிந்த விஷயங்களை மீண்டும் சொல்லி போர் அடிக்க விரும்பவில்லை, இதை மட்டும் பாருங்கள்
30,055 இண்டர்நேஷனல் ரன்கள், 88 சதங்கள், 144 அரை சதங்கள், டெஸ்ட் ஆவரேஜ் 54.79, ODI average 44.50 at a strike rate of 85.79. இதற்கு மேலும் ஒரு குழு ஆட்டத்தில் தனி நபரிடம் என்னதான் இந்த பாழப்போன விமர்சகர்கள் எதிர்பார்க்கிறார்கள் எனத் தெரியவில்லை.
நவ்ஜோத் சித்து சொன்னது போல - Statistics is like mini skirt, it reveals most of the things but not the most import thing. சச்சின் எண்களில மட்டுமல்லாமல் Attitude / Commitment போன்றவற்றிலும் மிக உயர்ந்து நிற்கும் ஒரு மனிதர். ஆஸ்திரேலியாவிற்கு
எதிரான ஷார்ஜா ஆட்டங்கள், தந்தை இறந்து சில நாட்களிலேயே விளையாடச் சென்றது, சிட்னி சென்சுரி இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்.
ஐந்தரை அடி கூட உயரம் இல்லாத ஒரு இந்தியர் இப்படி விஸ்வரூபம் எடுத்திருப்பதை நினைத்து பெருமை படுங்கள், குறை சொல்வதை நிறுத்துங்கள்..
AB, this lil prick is going to make more runs than you one day... ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் மெர்வ் ஹூக்ஸ் ஆலன் பார்டரிடம் சச்சின் பத்தி சொன்னது - அவர் வாயில் சர்க்கரையை தூக்கி கொட்ட - அன்றே என்ன ஒரு நிதர்சனம்.....
If I've to bowl to Sachin, I'll bowl with my helmet on. He hits the ball so hard: Dennis Lillee. He is 99.5 per cent perfect. I'd pay to see him: Viv Richards.
நம்ம விமர்சகர்கள் விவியனைவிடவும் லில்லியை விடவும் அதிகம் கிரிக்கெட் பத்தி தெரிஞ்சவங்களா??
Subscribe to:
Posts (Atom)