எ(நம)து அருமை நண்பர் வால்பையன் ஈரோடு அருணின் மனைவி இன்று அதிகாலை 1.10 மணிக்கு அவர்களின் இரண்டாவது பெண் குழந்தையை
பெற்றெடுத்துள்ளார். ஆண்டவன் அருளால் தாயும் சேயும் நலம்.
அருணுக்கும் அவர் மனைவிக்கும் என் வாழ்த்துக்கள். மூத்த வாலுக்கு இனி பொறுப்பு வருமென்று நம்புவோம்.
வாழ்த்துக்களை அனுப்ப மின்மடல் : arunero@gmail.com
Sunday, August 22, 2010
Thursday, July 8, 2010
நண்பர்களுக்கு நன்றி
நேற்று என்னுடைய பிறந்த நாள் (ஜூலை ஏழு). முதல் முறையாக என் பிறந்த நாள் பொதுத் தளங்களில் அறிவிக்கப் பட்டது (கண்ணு பட்டு விடுமுன்னு அம்மா என் போட்டோவை
சன் டிவிக்கெல்லாம் அனுப்புனதில்லை - அப்படியே அனுப்பிட்டாலும்...).
என்னுடைய இருபத்து எட்டு வருட வாழ்க்கையில் இத்தனை ஆயிரம் பேர் எப்போதும் வாழ்த்தியதில்லை (சரி சரி இதுக்கு எதுக்கு டென்ஷன் ஆகுறீங்க - வயசில ஒண்ணு ரெண்டு
அதிகமாகவும், வாழ்த்தியவர்கள் எண்ணிக்கையில் ஒண்ணு ரெண்டு கம்மியாகவும் இருந்திருக்கலாம், அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்ப்பான்னு அடியேனை மன்னியுங்கள்).
தங்கள் பதிவுகளில் வாழ்த்து சொன்ன தோழர் ஈரோடு அருணுக்கும் (valpaiyan.blogspot.com), நண்பர் / Neighbour / Colleague/ என்னோட தற்போதைய கம்ப்யூட்டர்
கன்சல்டண்ட் அனைத்துமாகிய இளாவுக்கும் பெரிய கும்பிடு போட்டுக்கறேன். அவ்விரு தளங்களின் பின்னூட்டங்களில் வாழ்த்திய பழமை பேசி, சுகுமார், மேனகா, ஜே, செந்தில், தேவா,
ராம்ஜி, நசரேயன்,பா.ரா, கலா நேசன், கீதா ஆச்சல், நேசமித்ரன், கிரி, பட்டாபட்டி, இனியவன் உலக்ஸ், Nari, Writer விசா, கும்க்கி, வெறும் பய, காவேரி கணேஷ்,
தருமி ஐயா, ஈரோடு கதிர், மங்குனி அமைச்சர், விதூஷ், விக்னேஷ்வரி, வத்திராயிருப்பு பாலகுமாரன், ஜோதிஜி, சசி குமார், மைதிலி, உண்மைத் தமிழன், கபீஷ், ஆரூரன்
விசுவநாதன் ஆகியோருக்கும் நன்றி.
தனி மடலில் வாழ்த்திய பொற்கொடி, அப்பாவி தங்கமணி, அநன்யா, உமா ருத்ரன், தருமி ஐயா, நர்சிம், அனாமிகா துவாரகன் ஆகியோருக்கும் நன்றி. தொலைபேசிய
சீமாச்சு அவர்களுக்கும் நன்றி. மேலும் மனதிலேயே வாழ்த்திய உள்ளங்களுக்கும், இனிமேல் Belated wishes சொல்லப் போகும் நண்பர்களுக்கும் நன்றி.
ப்ளாக் எழுதி என்னத்த கிழிச்சேன்னு கேக்கும் தங்கமணிக்கு நேத்து இரண்டு இடுகைகளையும் பின்னூட்டங்களையும் காட்டினேன், இந்த லிஸ்டில் இளா, நர்சிம்,சீமாச்சு தவிர வேறு
யாரையும் நான் பார்த்தது கூட கிடையாதுன்னு சொல்லும் போது பெருமை தாங்கல எனக்கு - நன்றி நண்பர்களே..
என்னோட அமெரிக்க விசா பத்தின தொடரில் இப்படி எழுதியிருந்தேன் - // இதுக்குக் காரணம் ஒரு டாலரின் மதிப்பு ஐம்பது ரூபாய். 1 $ = 1 ரூபாய் அதுகூட வேணாம் 1$ = 10
ரூபாய்னு ஆச்சுன்னா நம்மில் பல பேருக்கு அமெரிக்க ஆசை போயிடும்// அதுக்கு நாஞ்சில் மைந்தன்னு ஒரு நண்பரின் பின்னூட்டம் - //இதுவும் ஒரு காரணமாக இருந்தாலும் நான்
கேள்விப்பட்ட வரையில் பலர் கூறும் காரணம்... Comfortable lifestyle// - எதுவுமே எழுதாம ப்ளாக்கர்னு சொல்லிக்கிட்டு திரிஞ்சிக்கிட்டு இருந்த எனக்கு லீட் கொடுத்த
நாஞ்சில் மைந்தனுக்கு நன்றி - அமெரிக்க வாழ்க்கையில் என்னா Comfortableன்னு எழுதறேன் நண்பரே..
சன் டிவிக்கெல்லாம் அனுப்புனதில்லை - அப்படியே அனுப்பிட்டாலும்...).
என்னுடைய இருபத்து எட்டு வருட வாழ்க்கையில் இத்தனை ஆயிரம் பேர் எப்போதும் வாழ்த்தியதில்லை (சரி சரி இதுக்கு எதுக்கு டென்ஷன் ஆகுறீங்க - வயசில ஒண்ணு ரெண்டு
அதிகமாகவும், வாழ்த்தியவர்கள் எண்ணிக்கையில் ஒண்ணு ரெண்டு கம்மியாகவும் இருந்திருக்கலாம், அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்ப்பான்னு அடியேனை மன்னியுங்கள்).
தங்கள் பதிவுகளில் வாழ்த்து சொன்ன தோழர் ஈரோடு அருணுக்கும் (valpaiyan.blogspot.com), நண்பர் / Neighbour / Colleague/ என்னோட தற்போதைய கம்ப்யூட்டர்
கன்சல்டண்ட் அனைத்துமாகிய இளாவுக்கும் பெரிய கும்பிடு போட்டுக்கறேன். அவ்விரு தளங்களின் பின்னூட்டங்களில் வாழ்த்திய பழமை பேசி, சுகுமார், மேனகா, ஜே, செந்தில், தேவா,
ராம்ஜி, நசரேயன்,பா.ரா, கலா நேசன், கீதா ஆச்சல், நேசமித்ரன், கிரி, பட்டாபட்டி, இனியவன் உலக்ஸ், Nari, Writer விசா, கும்க்கி, வெறும் பய, காவேரி கணேஷ்,
தருமி ஐயா, ஈரோடு கதிர், மங்குனி அமைச்சர், விதூஷ், விக்னேஷ்வரி, வத்திராயிருப்பு பாலகுமாரன், ஜோதிஜி, சசி குமார், மைதிலி, உண்மைத் தமிழன், கபீஷ், ஆரூரன்
விசுவநாதன் ஆகியோருக்கும் நன்றி.
தனி மடலில் வாழ்த்திய பொற்கொடி, அப்பாவி தங்கமணி, அநன்யா, உமா ருத்ரன், தருமி ஐயா, நர்சிம், அனாமிகா துவாரகன் ஆகியோருக்கும் நன்றி. தொலைபேசிய
சீமாச்சு அவர்களுக்கும் நன்றி. மேலும் மனதிலேயே வாழ்த்திய உள்ளங்களுக்கும், இனிமேல் Belated wishes சொல்லப் போகும் நண்பர்களுக்கும் நன்றி.
ப்ளாக் எழுதி என்னத்த கிழிச்சேன்னு கேக்கும் தங்கமணிக்கு நேத்து இரண்டு இடுகைகளையும் பின்னூட்டங்களையும் காட்டினேன், இந்த லிஸ்டில் இளா, நர்சிம்,சீமாச்சு தவிர வேறு
யாரையும் நான் பார்த்தது கூட கிடையாதுன்னு சொல்லும் போது பெருமை தாங்கல எனக்கு - நன்றி நண்பர்களே..
என்னோட அமெரிக்க விசா பத்தின தொடரில் இப்படி எழுதியிருந்தேன் - // இதுக்குக் காரணம் ஒரு டாலரின் மதிப்பு ஐம்பது ரூபாய். 1 $ = 1 ரூபாய் அதுகூட வேணாம் 1$ = 10
ரூபாய்னு ஆச்சுன்னா நம்மில் பல பேருக்கு அமெரிக்க ஆசை போயிடும்// அதுக்கு நாஞ்சில் மைந்தன்னு ஒரு நண்பரின் பின்னூட்டம் - //இதுவும் ஒரு காரணமாக இருந்தாலும் நான்
கேள்விப்பட்ட வரையில் பலர் கூறும் காரணம்... Comfortable lifestyle// - எதுவுமே எழுதாம ப்ளாக்கர்னு சொல்லிக்கிட்டு திரிஞ்சிக்கிட்டு இருந்த எனக்கு லீட் கொடுத்த
நாஞ்சில் மைந்தனுக்கு நன்றி - அமெரிக்க வாழ்க்கையில் என்னா Comfortableன்னு எழுதறேன் நண்பரே..
Saturday, May 22, 2010
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இன்று (மே மாதம் 23ம் திகதி) பிறந்த நாள் காணும் “பொற்கேடி” என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கபடும் - கழகக் கண்மணி, ஆயிரம் வடை வாங்கிய அபூர்வ சிந்தாமணி,
சியாட்டில் சிங்காரி பொற்கொடியை வாழ்த்த வயதில்லாததனால் வணங்குகிறேன். அவர் எல்லா வளமும் ,நீண்ட ஆயுளும் பெற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.
இன்னிக்கு அவருக்கு சஷ்டியப்த பூர்த்தியான்னு கேட்டு வரும் பின்னூட்டங்கள் பிரசுரிக்கப்படமாட்டா என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
சியாட்டில் சிங்காரி பொற்கொடியை வாழ்த்த வயதில்லாததனால் வணங்குகிறேன். அவர் எல்லா வளமும் ,நீண்ட ஆயுளும் பெற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.
இன்னிக்கு அவருக்கு சஷ்டியப்த பூர்த்தியான்னு கேட்டு வரும் பின்னூட்டங்கள் பிரசுரிக்கப்படமாட்டா என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
Tuesday, May 4, 2010
பத்துப் பாட்டு
இந்த அநன்யா Aunty என்னையும் ஒரு மனுஷனா மதிச்சு தொடர் பதிவு எழுதக் கூப்பிட்டு இருக்காங்க, எனக்குப் பிடிச்ச அஞ்சு பாடகர் / பாடகிகளை வரிசைப் படுத்தி எழுதணுமாம்.
என்னோட ஆங்கில அறிவும் சங்கீத ஞானமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் - கேள்வி ஞானம் மட்டுமே / இலக்கண அறிவு பூஜ்யம். என்னால் ஒரு பாட்டை உணர்ச்சிப் பூர்வமாக மட்டுமே அணுக இயலும். ஸ்ருதி சேரல ஐஸ்வர்யா கூட வரலன்னெல்லாம் (முன்னது கமல் பொண்ணு ரெண்டாவது ரஜினி பொண்ணு) பேச முடியாது. எனவே கேக்குறதுக்கு ரம்யமா இருக்குற எல்லாப் பாட்டும் நல்ல பாட்டு, மத்ததெல்லாம் குத்துப் பாட்டு - இதுதான் என்னோட அளவுகோல்(ரம்யா யாருன்னு கேட்டு வரும் பின்னூட்டங்கள் எல்லாம் நிராகரிகப்படும் என்பதை கறாராகத் தெரிவித்துக் கொள்கிறேன்)
S.P.B யும் யேசுதாஸும் என்னோட ஆல்டைம் ஃபேவரைட். தீபன் சக்கரவர்த்தி,ஹரிஷ் ராகவேந்தர், உன்னி கிருஷ்ணன் போன்ற பலர் ரெண்டாவது லிஸ்ட்ல வருவாங்க.
பாடகிகளில் S.ஜானகி யும் சித்ராவும் ஃபேவரைட்ஸ். நான் A.R.R ஐ வெறுக்காத இளைய ராஜா வெறியன். கண்ணதாசன் ஒரு கவியரசர், வாலியும் வைரமுத்துவும் கவி குறு நில
மன்னர்கள், மத்தவங்க எல்லாம் கவிச்சிப்பாய்கள்- இவை என்னோட மதிப்பீடு.
பாடகர்களை லிஸ்ட் போடறதை விட எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல்களை லிஸ்ட் போடலாமுன்னு நெனக்க்கிறேன். இந்த லிஸ்ட் ரொம்ப பெரிசு, அதில அஞ்சு மட்டும் எடுக்கவே முடியாது எனவே பத்து பாடல்களை இங்கே பட்டியலிடுகிறேன்.
1. “யார் யார் சிவம் - நீதான் சிவம்” வித்யாசாகர் இசையில் தலைவர் பாடியது. இந்த பாட்டை ஒரு முறை கேட்ட யாரும் பிடிக்கலேன்னு சொல்ல மாட்டாங்கன்னு நெனைக்கிறேன்.
எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல் இது, மறுபடியும் கேட்டுத்தான் பாருங்களேன்..
2. “செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்” எனது கார் பயணங்களில் என் மீது அடிக்கடி வந்து மோதும் பாடல்- எத்தனை முறைக் கேட்டாலும் அலுக்காத பாடல்களில் ஒன்று.
மொட்டையின் இசையில் ஜேசு அண்ணாவின் குரலில் வந்த தேவ கானமிது.
3. “பூவே செம்பூவே” - சொல்லத்துடிக்குது மனசு படத்தில் வரும் Bouncing Music பாட்டு, இசை - வேற யாரு?? ராஜாதான், பாடியது ?? பாட்ட கேட்டீங்க இல்ல,அப்புறம் என்ன டவுட்டு ? ஜேசு அண்ணா தவிர யாரல இது முடியும்???
4. “கண்ணே கலைமானே” - அல்டிமேட் பாட்டு, கண்ணதாசன் + இளைய ராஜா + யேசுதாஸ் கூட்டணியில் வந்த இன்னுமொரு சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்..
5. “மலர்ந்தும் மலராத பாதி மலர் போல” - பாசமலர் படத்தில் விச்சு + ராமமூர்த்தியின் கூட்டணி இசையில் T.M.S, P. சுசீலாவுடன் இணைந்து பாடியது.
இந்தப் பாட்டைக் கேக்க இங்க க்ளிக் பண்ணுங்க
என்னிக்காவது ராத்த்ரி தூக்கம் வரல்லன்னா நாலாவது பாடலையும் ஐந்தாவது பாடலையும் கேட்டுட்டு படுக்கைக்குப் போங்க, ரொம்ப ரிலாக்ஸ்டா இருக்கும்.
6. “மஞ்சம் வந்த தென்றலுக்கு” மௌனராகங்கள் படத்தில் ராஜா இசையில் பாலு பாடியது.மெலடிக்கு இலக்கணமா இந்தப் பாட்டை வைக்கலாம்.
7. “காற்றில் உந்தன் கீதம்” - ஜானி படத்தில் இசைஞானியின் இசையில் S.ஜானகி பாடிய எவர்கிரீன் பாடல்.
8. “பூங்கதவே தாழ்திறவாய்” - ராஜாவின் பாடல்களுக்காவே ஓடிய பல படங்களில் ஒன்றான நிழல்கள் படத்தில் தீபன் சக்கரவர்த்தியின் Mesmerizing குரலில் ஒலித்தப் பாட்டு.
தீபன் வெள்ளித்திரையில் பெரிய அளவுக்கு வராததுக்கு காரணம் என்னன்னு தெரியல. இந்தப் பாட்டைக் கேட்டா அவரும் பாலுவின் அளவுக்கு வந்திருக்கணும்னு தோணும்.
9. “ தென் பாண்டிச் சீமையிலே” படம் - நாயகன், இசை : Default குரல் : ரெண்டு வெர்ஷன் இருக்கு, பாலு பாடியது பாடியது ஒண்ணு, ராஜா மற்றும் தலைவர் பாடியது ஒண்ணு ரெண்டுமே டாப்பு.பாட்டு சின்னதா இருந்தாலும் அது க்ரியேட் பண்ணும் Impact ரொம்ப பெரிசு
10. “சங்கீத ஜாதி முல்லை” - இசைப் பாமரனான என்னைக் கூட தொடை தட்ட வைக்கும் (என்னோட தொடையைச் சொன்னேன்) ராஜாவின் கம்போசிஷன். குண்டனின் Career
peak ல இருக்கும் போது பாடியது. நீங்களும் கேளுங்க..
பத்து பாட்டும் மட்டும்தான்னு மொதல்ல சொன்னதால இங்க முடிக்கறேன், இளைய ராஜாவின் பாட்டுக்கள் பத்தி எழுத புத்தகமே போதாது, ஒரு இடுகையில எங்க முடிக்கறது.
ஒரு ஜோக்கோட முடிச்சிக்கறேன்..
இளையராஜா ஒரு முறை வெளிநாட்டில் இருக்கும் போது நண்பர் ஒருவர் அவரை ஒரு ஹாலிவுட் பிரபலத்திடம் அறிமுகப் படுத்தினாராம் இவர் ஐநூறு படங்களுக்கு இசை அமைத்தவர் என்று. அவங்க எல்லாம் வருஷத்துக்கு ஒரு படம் முடிச்சாலே பெரிய விஷயம், 500 படம் பத்தி கேட்டு மிரண்ட அந்த பிரபலம் ராஜாவைப் பாத்து கேட்டராம் உங்களுக்கு எத்தனை பசங்கன்னு? மூணுன்னு பதில் சொன்ன ராஜாவைப் பாத்து அவர் கேட்டாராம் - When did you get time???
நீங்களும் உங்களுக்கு பிடிச்ச பாடல்களை லிஸ்ட் பண்ணி ஒரு இடுகை போடுங்களேன், நாங்களும் கேக்கறோம்...
என்னோட ஆங்கில அறிவும் சங்கீத ஞானமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் - கேள்வி ஞானம் மட்டுமே / இலக்கண அறிவு பூஜ்யம். என்னால் ஒரு பாட்டை உணர்ச்சிப் பூர்வமாக மட்டுமே அணுக இயலும். ஸ்ருதி சேரல ஐஸ்வர்யா கூட வரலன்னெல்லாம் (முன்னது கமல் பொண்ணு ரெண்டாவது ரஜினி பொண்ணு) பேச முடியாது. எனவே கேக்குறதுக்கு ரம்யமா இருக்குற எல்லாப் பாட்டும் நல்ல பாட்டு, மத்ததெல்லாம் குத்துப் பாட்டு - இதுதான் என்னோட அளவுகோல்(ரம்யா யாருன்னு கேட்டு வரும் பின்னூட்டங்கள் எல்லாம் நிராகரிகப்படும் என்பதை கறாராகத் தெரிவித்துக் கொள்கிறேன்)
S.P.B யும் யேசுதாஸும் என்னோட ஆல்டைம் ஃபேவரைட். தீபன் சக்கரவர்த்தி,ஹரிஷ் ராகவேந்தர், உன்னி கிருஷ்ணன் போன்ற பலர் ரெண்டாவது லிஸ்ட்ல வருவாங்க.
பாடகிகளில் S.ஜானகி யும் சித்ராவும் ஃபேவரைட்ஸ். நான் A.R.R ஐ வெறுக்காத இளைய ராஜா வெறியன். கண்ணதாசன் ஒரு கவியரசர், வாலியும் வைரமுத்துவும் கவி குறு நில
மன்னர்கள், மத்தவங்க எல்லாம் கவிச்சிப்பாய்கள்- இவை என்னோட மதிப்பீடு.
பாடகர்களை லிஸ்ட் போடறதை விட எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல்களை லிஸ்ட் போடலாமுன்னு நெனக்க்கிறேன். இந்த லிஸ்ட் ரொம்ப பெரிசு, அதில அஞ்சு மட்டும் எடுக்கவே முடியாது எனவே பத்து பாடல்களை இங்கே பட்டியலிடுகிறேன்.
1. “யார் யார் சிவம் - நீதான் சிவம்” வித்யாசாகர் இசையில் தலைவர் பாடியது. இந்த பாட்டை ஒரு முறை கேட்ட யாரும் பிடிக்கலேன்னு சொல்ல மாட்டாங்கன்னு நெனைக்கிறேன்.
எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல் இது, மறுபடியும் கேட்டுத்தான் பாருங்களேன்..
2. “செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்” எனது கார் பயணங்களில் என் மீது அடிக்கடி வந்து மோதும் பாடல்- எத்தனை முறைக் கேட்டாலும் அலுக்காத பாடல்களில் ஒன்று.
மொட்டையின் இசையில் ஜேசு அண்ணாவின் குரலில் வந்த தேவ கானமிது.
3. “பூவே செம்பூவே” - சொல்லத்துடிக்குது மனசு படத்தில் வரும் Bouncing Music பாட்டு, இசை - வேற யாரு?? ராஜாதான், பாடியது ?? பாட்ட கேட்டீங்க இல்ல,அப்புறம் என்ன டவுட்டு ? ஜேசு அண்ணா தவிர யாரல இது முடியும்???
4. “கண்ணே கலைமானே” - அல்டிமேட் பாட்டு, கண்ணதாசன் + இளைய ராஜா + யேசுதாஸ் கூட்டணியில் வந்த இன்னுமொரு சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்..
5. “மலர்ந்தும் மலராத பாதி மலர் போல” - பாசமலர் படத்தில் விச்சு + ராமமூர்த்தியின் கூட்டணி இசையில் T.M.S, P. சுசீலாவுடன் இணைந்து பாடியது.
இந்தப் பாட்டைக் கேக்க இங்க க்ளிக் பண்ணுங்க
என்னிக்காவது ராத்த்ரி தூக்கம் வரல்லன்னா நாலாவது பாடலையும் ஐந்தாவது பாடலையும் கேட்டுட்டு படுக்கைக்குப் போங்க, ரொம்ப ரிலாக்ஸ்டா இருக்கும்.
6. “மஞ்சம் வந்த தென்றலுக்கு” மௌனராகங்கள் படத்தில் ராஜா இசையில் பாலு பாடியது.மெலடிக்கு இலக்கணமா இந்தப் பாட்டை வைக்கலாம்.
7. “காற்றில் உந்தன் கீதம்” - ஜானி படத்தில் இசைஞானியின் இசையில் S.ஜானகி பாடிய எவர்கிரீன் பாடல்.
8. “பூங்கதவே தாழ்திறவாய்” - ராஜாவின் பாடல்களுக்காவே ஓடிய பல படங்களில் ஒன்றான நிழல்கள் படத்தில் தீபன் சக்கரவர்த்தியின் Mesmerizing குரலில் ஒலித்தப் பாட்டு.
தீபன் வெள்ளித்திரையில் பெரிய அளவுக்கு வராததுக்கு காரணம் என்னன்னு தெரியல. இந்தப் பாட்டைக் கேட்டா அவரும் பாலுவின் அளவுக்கு வந்திருக்கணும்னு தோணும்.
9. “ தென் பாண்டிச் சீமையிலே” படம் - நாயகன், இசை : Default குரல் : ரெண்டு வெர்ஷன் இருக்கு, பாலு பாடியது பாடியது ஒண்ணு, ராஜா மற்றும் தலைவர் பாடியது ஒண்ணு ரெண்டுமே டாப்பு.பாட்டு சின்னதா இருந்தாலும் அது க்ரியேட் பண்ணும் Impact ரொம்ப பெரிசு
10. “சங்கீத ஜாதி முல்லை” - இசைப் பாமரனான என்னைக் கூட தொடை தட்ட வைக்கும் (என்னோட தொடையைச் சொன்னேன்) ராஜாவின் கம்போசிஷன். குண்டனின் Career
peak ல இருக்கும் போது பாடியது. நீங்களும் கேளுங்க..
பத்து பாட்டும் மட்டும்தான்னு மொதல்ல சொன்னதால இங்க முடிக்கறேன், இளைய ராஜாவின் பாட்டுக்கள் பத்தி எழுத புத்தகமே போதாது, ஒரு இடுகையில எங்க முடிக்கறது.
ஒரு ஜோக்கோட முடிச்சிக்கறேன்..
இளையராஜா ஒரு முறை வெளிநாட்டில் இருக்கும் போது நண்பர் ஒருவர் அவரை ஒரு ஹாலிவுட் பிரபலத்திடம் அறிமுகப் படுத்தினாராம் இவர் ஐநூறு படங்களுக்கு இசை அமைத்தவர் என்று. அவங்க எல்லாம் வருஷத்துக்கு ஒரு படம் முடிச்சாலே பெரிய விஷயம், 500 படம் பத்தி கேட்டு மிரண்ட அந்த பிரபலம் ராஜாவைப் பாத்து கேட்டராம் உங்களுக்கு எத்தனை பசங்கன்னு? மூணுன்னு பதில் சொன்ன ராஜாவைப் பாத்து அவர் கேட்டாராம் - When did you get time???
நீங்களும் உங்களுக்கு பிடிச்ச பாடல்களை லிஸ்ட் பண்ணி ஒரு இடுகை போடுங்களேன், நாங்களும் கேக்கறோம்...
Monday, April 26, 2010
டாலர் தேசம் 1
நானென்ன பா.ரா வா? இந்த டாலர் தேசம் தொடருக்கு வேற யாராவது முன்னுரை எழுத?
நான் வலைப்பூக்கள் பக்கம் வர ஆரம்பிச்சது 2006ல். மொதல்ல படிக்க ஆரம்பிச்சது டுபுக்கின் எழுத்துக்களை. அதில் இம்ப்ரெஸ் ஆகி இன்னும் பல தளங்களைப் படிக்க ஆரம்பிச்சேன்.
2007, 2008ல பல வலைப்பூக்களைத் தேடித்தேடி படிக்க ஆரம்பிச்சேன், பின்னூட்டப் பதிவராகவே பல இணைய எழுத்தாளர்களுக்கு (இப்போ இந்த Title தான் ஃபேஷன்ல இருக்கு) அறிமுகம் ஆனேன். என்னோட பின்னூட்டங்களைப் பாத்த சில நண்பர்கள் என்கிட்ட கூட சரக்கு இருக்குறதா (தப்பா) நெனச்சி என்னையும் ப்ளாக் தொறக்கச் சொன்னாங்க.
யாருமே பத்த வெக்காமலே ஐஸ்லாண்ட் எரிமலை (அந்த எடத்தோட பேரின் ஸ்பெல்லிங் காப்பி பேஸ்ட் பண்றதுக்குக் கூட கஷ்டமா இருக்கு, எப்படித்தான் உச்சரிக்கராங்களோ?) பத்தி
எரிஞ்ச மாதிரி என்னோட எழுத்துத் தாகம் பத்தி எரிஞ்ச போது ஹாலிவுட் பாலாவும் வெட்டிப்பயல் பாலாஜியும் ரொம்ப கஷ்டப் பட்டு எனக்கு ப்ளாக்னா என்னன்னு புரிய வச்சு ஒரு பக்கத்தையும் வடிவமைச்சுக் கொடுத்தாங்க.(அதுக்காக வருத்தப் பட்டு முடிச்சிட்டாங்களா இல்ல இன்னும் வருத்தப்பட்டுக்கிட்டு இருக்காங்களான்னு தெரியல)
கிறுக்குறதுன்னு முடிவான அப்புறம் என் பேச்சை நானே கேக்காம கண்ட படி கிறுக்கலாமுன்னு நெனச்சேன், ஆனா எனக்கு முன்னாடி இருந்த மிகப் பெரிய கேள்வி - என்ன எழுதுறது?
நானெல்லாம் எழுதுறேங்கறதே ஒரு காமடி இந்த அழகுல நான் எங்க காமடியா எழுதுறது? எனவே எனக்கு கொஞ்சூண்டு தெரிஞ்ச அமெரிக்கன் விசா, வேலை வாய்ப்பு,Green Card, Spoken English, Personality Development பத்தி எழுதலாமுன்னு ஆரம்பிச்சேன். ஒரு சில பதிவுகள் மட்டுமே எழுதிய நிலையில் ஏதேதோ இலக்கில்லாம எழுதினேன். எழுத நேரமிருந்தாலும் என் சோம்பேறித்தனத்தினால் எந்த ஒரு தலைப்பைப் பத்தியும் தொடர்ந்து எழுதல.
இப்போ நான் சொல்லப் போற விசயம் எப்பவுமே நடக்கறதுதான். இருந்தாலும் கடந்த சில வாரங்களில் நடந்த சில பல நிகழ்வுகள் என்னை இந்த தொடர் எழுத வச்சிருக்கு.
1. வளைகுடா நாட்டில் கணணித்துறையில் இல்லாத ஒரு பதிவுலக நண்பர் ஒரு நாள் சாட்டில் வந்து SAP படிக்கலாமுன்னு இருக்கேன், அமெரிக்காவில் SAP இல் வேலை வாய்ப்புக்கள் எப்படி இருக்குன்னு கேட்டார். கணணித்துறையில் வேலை பாக்கும் நண்பர்களின் சம்பளம் அதிகமாக இருப்பதால் 10-15 வருட அனுபவத்தை விட்டு விட்டு துறை மாறத் துணிந்த நண்பரை Discourage செய்தேன்.
2. சீமாச்சு அவர்களின் தோழி அவரிடமிருந்து என் கைப்பேசியின் எண் வாங்கி சென்ற வார இறுதியில் பேசினார். இந்தியாவில் நல்ல கல்லூரியில் B.E Mechanical முடித்து,
அமெரிக்காவில் M.S Mechcalincal Engineering படித்த அவருக்கும் Software Developmentக்கும் ஸ்னானப் ப்ராப்தி கூட கிடையாது. அவரது கேள்வி - நான் எப்படியாவது அமெரிக்காவில் ஐடியில் செட்டிலாகணும், வழி சொல்லுங்க என்பதே. அவருக்கு அதில் உள்ள சாதக பாதகங்களை விளக்கிச் சொன்னேன்.
3. அமெரிக்காவில் வேலை செய்து வரும் பல நண்பர்களுக்கு H1B மற்றும் Green Card பத்தி பல விஷயங்களில் தெளிவின்மையை கண்டிருக்கிறேன். அதற்கு அவர்களையும் குறை
சொல்ல முடியாது, ஏன்னா அவங்க வேலை செய்யும் கம்பெனியில் Transparency என்பது மருந்துக்குக் கூட கிடையாது. H1B விசாவில் வேலை செய்யும் ஒரு கணணி பட்டதாரிக்கு அவருக்கு உள்ள உரிமைகள் பத்தி கூட சமயத்தில தெரியரதில்ல. சிங்கப்பூருக்கும் வளைகுடா நாடுகளுக்கும் செல்லும் கட்டிடத் தொழிலாளிகள் மாதிரி கன்சல்டன்சிகாரன் கூப்பிட்டான் இங்க வந்துட்டேன், ஆனா வேலை கிடைக்கல / சம்பளம் கொடுக்கலேன்னு புலம்புவதை பல முறை பார்த்திருக்கிறேன்.
4. சென்னையில் உள்ள பக்கத்து வீட்டுக்காரர்,என்னுடன் டெல்லியில் பணிபுரிந்தவர்,என் மாமா அனைவருக்கும் ஒரே கேள்வி - என் மகன் B.E படிச்சி முடிச்சிட்டான், அவனுக்கு அமெரிக்காவில் ஐடில ஒரு வேலை வாங்கி கொடுப்பியா என்பதுதான்.
5. இன்னொரு பதிவுலக நண்பர் புகைப்படத்துறையில் நிபுணர், அவருக்கும் ஒரு கேள்வி - தான் அமெரிக்கா எப்படி வருவது? வந்தா கேமரா மேன் வேலை கெடைக்குமா???
இப்படி நம்மில் பலருக்கும் அமெரிக்கா பற்றி ஒரு மாயை இருக்கு (வெளிய இருக்குறவங்களுக்கு எப்படி உள்ள வர்றது மற்றும் உள்ள வந்தவங்களுக்கு எப்படி இங்க நிரந்தரமா தங்கறது) இதுக்குக் காரணம் ஒரு டாலரின் மதிப்பு ஐம்பது ரூபாய். 1 $ = 1 ரூபாய் அதுகூட வேணாம் 1$ = 10 ரூபாய்னு ஆச்சுன்னா நம்மில் பல பேருக்கு அமெரிக்க ஆசை போயிடும். அதனால தான் பா.ரா உபயோகித்த தலைப்பாக இருந்தாலும் இதையே இந்த தொடருக்கு வச்சிருக்கேன்.
US Immigration (H1B, Green Card Process), Full time - Consulting jobs in USA, Study and work in USA, Living in USA
பத்தியெல்லாம் எனக்குத் தெரிஞ்ச கொஞ்ச விஷயங்களை எழுதலாமுன்னு இருக்கேன். இது பத்தி சம்பந்தப் படாதவர்களுக்கு இது போரடிக்கும், நான் எது எழுதினாலும்தான் போரடிக்கும்,
இது சில பேருக்காவது உபயோகமா இருக்கும் எனவே பொருத்தருள்க.
மொதல்ல நல்ல விஷயத்தைப் பத்தி சொல்லலாம். சில மாதங்களுக்கு முன்னால் இருந்த உள்நுழைவு பிரச்சனை பத்தி நம்ம பழமை பேசி இந்த இடுகையில் எழுதியிருந்தார், அதிலேயே இது பத்தி தெளிவு கெடச்சவுடனே எழுதறேன்னு சொல்லியிருந்தேன். என்னோட சோம்பேறித்தனத்தால இன்னிக்கு வரை எழுதல, அது பத்தியும் Current Job Market பத்தியும் அடுத்த இடுகையில எழுதறேன். Stay Tuned for the next post.. Adios
டிஸ்கி : நான் எழுதத் துணிந்த சப்ஜெக்ட் ரொம்பப் பெரிசு.எதப் பத்தி எழுதறதுன்னு யோசிச்சிக்கிட்டே எதப்பத்தியும் எழுதாம காலத்தை ஓட்டிடுவேன் நான், எனவே நீங்க உங்களுக்கு இருக்கும் கேள்விகளை பின்னூட்டத்திலோ அல்லது தனிமடலிலோ அனுப்பினால், அதுக்கு பதில் சொல்லும் சாக்கில் ஒரு தலைப்பை கவர் பண்ணிடுவேன்.
அதுக்காக பாஸ்டன்ல Strip Club எங்க இருக்குன்னெல்லாம் கேக்கப் படாது...சொல்லிட்டேன்..
நான் வலைப்பூக்கள் பக்கம் வர ஆரம்பிச்சது 2006ல். மொதல்ல படிக்க ஆரம்பிச்சது டுபுக்கின் எழுத்துக்களை. அதில் இம்ப்ரெஸ் ஆகி இன்னும் பல தளங்களைப் படிக்க ஆரம்பிச்சேன்.
2007, 2008ல பல வலைப்பூக்களைத் தேடித்தேடி படிக்க ஆரம்பிச்சேன், பின்னூட்டப் பதிவராகவே பல இணைய எழுத்தாளர்களுக்கு (இப்போ இந்த Title தான் ஃபேஷன்ல இருக்கு) அறிமுகம் ஆனேன். என்னோட பின்னூட்டங்களைப் பாத்த சில நண்பர்கள் என்கிட்ட கூட சரக்கு இருக்குறதா (தப்பா) நெனச்சி என்னையும் ப்ளாக் தொறக்கச் சொன்னாங்க.
யாருமே பத்த வெக்காமலே ஐஸ்லாண்ட் எரிமலை (அந்த எடத்தோட பேரின் ஸ்பெல்லிங் காப்பி பேஸ்ட் பண்றதுக்குக் கூட கஷ்டமா இருக்கு, எப்படித்தான் உச்சரிக்கராங்களோ?) பத்தி
எரிஞ்ச மாதிரி என்னோட எழுத்துத் தாகம் பத்தி எரிஞ்ச போது ஹாலிவுட் பாலாவும் வெட்டிப்பயல் பாலாஜியும் ரொம்ப கஷ்டப் பட்டு எனக்கு ப்ளாக்னா என்னன்னு புரிய வச்சு ஒரு பக்கத்தையும் வடிவமைச்சுக் கொடுத்தாங்க.(அதுக்காக வருத்தப் பட்டு முடிச்சிட்டாங்களா இல்ல இன்னும் வருத்தப்பட்டுக்கிட்டு இருக்காங்களான்னு தெரியல)
கிறுக்குறதுன்னு முடிவான அப்புறம் என் பேச்சை நானே கேக்காம கண்ட படி கிறுக்கலாமுன்னு நெனச்சேன், ஆனா எனக்கு முன்னாடி இருந்த மிகப் பெரிய கேள்வி - என்ன எழுதுறது?
நானெல்லாம் எழுதுறேங்கறதே ஒரு காமடி இந்த அழகுல நான் எங்க காமடியா எழுதுறது? எனவே எனக்கு கொஞ்சூண்டு தெரிஞ்ச அமெரிக்கன் விசா, வேலை வாய்ப்பு,Green Card, Spoken English, Personality Development பத்தி எழுதலாமுன்னு ஆரம்பிச்சேன். ஒரு சில பதிவுகள் மட்டுமே எழுதிய நிலையில் ஏதேதோ இலக்கில்லாம எழுதினேன். எழுத நேரமிருந்தாலும் என் சோம்பேறித்தனத்தினால் எந்த ஒரு தலைப்பைப் பத்தியும் தொடர்ந்து எழுதல.
இப்போ நான் சொல்லப் போற விசயம் எப்பவுமே நடக்கறதுதான். இருந்தாலும் கடந்த சில வாரங்களில் நடந்த சில பல நிகழ்வுகள் என்னை இந்த தொடர் எழுத வச்சிருக்கு.
1. வளைகுடா நாட்டில் கணணித்துறையில் இல்லாத ஒரு பதிவுலக நண்பர் ஒரு நாள் சாட்டில் வந்து SAP படிக்கலாமுன்னு இருக்கேன், அமெரிக்காவில் SAP இல் வேலை வாய்ப்புக்கள் எப்படி இருக்குன்னு கேட்டார். கணணித்துறையில் வேலை பாக்கும் நண்பர்களின் சம்பளம் அதிகமாக இருப்பதால் 10-15 வருட அனுபவத்தை விட்டு விட்டு துறை மாறத் துணிந்த நண்பரை Discourage செய்தேன்.
2. சீமாச்சு அவர்களின் தோழி அவரிடமிருந்து என் கைப்பேசியின் எண் வாங்கி சென்ற வார இறுதியில் பேசினார். இந்தியாவில் நல்ல கல்லூரியில் B.E Mechanical முடித்து,
அமெரிக்காவில் M.S Mechcalincal Engineering படித்த அவருக்கும் Software Developmentக்கும் ஸ்னானப் ப்ராப்தி கூட கிடையாது. அவரது கேள்வி - நான் எப்படியாவது அமெரிக்காவில் ஐடியில் செட்டிலாகணும், வழி சொல்லுங்க என்பதே. அவருக்கு அதில் உள்ள சாதக பாதகங்களை விளக்கிச் சொன்னேன்.
3. அமெரிக்காவில் வேலை செய்து வரும் பல நண்பர்களுக்கு H1B மற்றும் Green Card பத்தி பல விஷயங்களில் தெளிவின்மையை கண்டிருக்கிறேன். அதற்கு அவர்களையும் குறை
சொல்ல முடியாது, ஏன்னா அவங்க வேலை செய்யும் கம்பெனியில் Transparency என்பது மருந்துக்குக் கூட கிடையாது. H1B விசாவில் வேலை செய்யும் ஒரு கணணி பட்டதாரிக்கு அவருக்கு உள்ள உரிமைகள் பத்தி கூட சமயத்தில தெரியரதில்ல. சிங்கப்பூருக்கும் வளைகுடா நாடுகளுக்கும் செல்லும் கட்டிடத் தொழிலாளிகள் மாதிரி கன்சல்டன்சிகாரன் கூப்பிட்டான் இங்க வந்துட்டேன், ஆனா வேலை கிடைக்கல / சம்பளம் கொடுக்கலேன்னு புலம்புவதை பல முறை பார்த்திருக்கிறேன்.
4. சென்னையில் உள்ள பக்கத்து வீட்டுக்காரர்,என்னுடன் டெல்லியில் பணிபுரிந்தவர்,என் மாமா அனைவருக்கும் ஒரே கேள்வி - என் மகன் B.E படிச்சி முடிச்சிட்டான், அவனுக்கு அமெரிக்காவில் ஐடில ஒரு வேலை வாங்கி கொடுப்பியா என்பதுதான்.
5. இன்னொரு பதிவுலக நண்பர் புகைப்படத்துறையில் நிபுணர், அவருக்கும் ஒரு கேள்வி - தான் அமெரிக்கா எப்படி வருவது? வந்தா கேமரா மேன் வேலை கெடைக்குமா???
இப்படி நம்மில் பலருக்கும் அமெரிக்கா பற்றி ஒரு மாயை இருக்கு (வெளிய இருக்குறவங்களுக்கு எப்படி உள்ள வர்றது மற்றும் உள்ள வந்தவங்களுக்கு எப்படி இங்க நிரந்தரமா தங்கறது) இதுக்குக் காரணம் ஒரு டாலரின் மதிப்பு ஐம்பது ரூபாய். 1 $ = 1 ரூபாய் அதுகூட வேணாம் 1$ = 10 ரூபாய்னு ஆச்சுன்னா நம்மில் பல பேருக்கு அமெரிக்க ஆசை போயிடும். அதனால தான் பா.ரா உபயோகித்த தலைப்பாக இருந்தாலும் இதையே இந்த தொடருக்கு வச்சிருக்கேன்.
US Immigration (H1B, Green Card Process), Full time - Consulting jobs in USA, Study and work in USA, Living in USA
பத்தியெல்லாம் எனக்குத் தெரிஞ்ச கொஞ்ச விஷயங்களை எழுதலாமுன்னு இருக்கேன். இது பத்தி சம்பந்தப் படாதவர்களுக்கு இது போரடிக்கும், நான் எது எழுதினாலும்தான் போரடிக்கும்,
இது சில பேருக்காவது உபயோகமா இருக்கும் எனவே பொருத்தருள்க.
மொதல்ல நல்ல விஷயத்தைப் பத்தி சொல்லலாம். சில மாதங்களுக்கு முன்னால் இருந்த உள்நுழைவு பிரச்சனை பத்தி நம்ம பழமை பேசி இந்த இடுகையில் எழுதியிருந்தார், அதிலேயே இது பத்தி தெளிவு கெடச்சவுடனே எழுதறேன்னு சொல்லியிருந்தேன். என்னோட சோம்பேறித்தனத்தால இன்னிக்கு வரை எழுதல, அது பத்தியும் Current Job Market பத்தியும் அடுத்த இடுகையில எழுதறேன். Stay Tuned for the next post.. Adios
டிஸ்கி : நான் எழுதத் துணிந்த சப்ஜெக்ட் ரொம்பப் பெரிசு.எதப் பத்தி எழுதறதுன்னு யோசிச்சிக்கிட்டே எதப்பத்தியும் எழுதாம காலத்தை ஓட்டிடுவேன் நான், எனவே நீங்க உங்களுக்கு இருக்கும் கேள்விகளை பின்னூட்டத்திலோ அல்லது தனிமடலிலோ அனுப்பினால், அதுக்கு பதில் சொல்லும் சாக்கில் ஒரு தலைப்பை கவர் பண்ணிடுவேன்.
அதுக்காக பாஸ்டன்ல Strip Club எங்க இருக்குன்னெல்லாம் கேக்கப் படாது...சொல்லிட்டேன்..
Friday, April 2, 2010
டாப் டென் படங்கள்
தருமி ஐயாவோட இந்த பதிவ படிச்ச உடனே ரூமெல்லாம் போடாம ஒக்காந்து யோசிச்சேன் - நான் இது வரை பார்த்த தமிழ் படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த 10 படங்கள் எதுன்னு.
நானெல்லாம் ஒரு காமடி பீஸு, என்னை யாரும் தொடர் பதிவு எழுத கூப்பிடமாட்டங்க, அதனால நானே ஜீப்பில ஏறி இந்த டாப் டென் பதிவ போடறேன்.
இந்த பத்துப் படங்கள் தமிழ்த்திரையுலகின் மிகச் சிறந்த படங்கள்னு அர்த்தமாகாது, நான் பார்த்ததில் எனக்கு மிகவும் பிடித்த படங்கள் இவை.
1. அன்பே சிவம்
2. மொழி
3. மூன்றாம் பிறை
4. நாயகன்
5. எதிர் நீச்சல்
6. தவமாய் தவமிருந்து
7. பாட்ஷா - இத விட சிறந்த எண்டர்டெயினர் தமிழில் நான் இதுவரை பார்க்கவில்லை
8. ஆண் பாவம்
9. முதல்வன்
10.ரிதம்.
பம்பாய், சேது, மைக்கேல் மதன காம ராஜன், சலங்கை ஒலி, சர்வர் சுந்தரம் ஆகிய படங்களும் நான் மிகவும் ரசித்தவை. But they did not make it to my top 10.
இதைப் படிக்கும் அனைவரையும் அவர்களுக்குப் பிடித்த பத்து படங்களை பட்டியலிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்..
நானெல்லாம் ஒரு காமடி பீஸு, என்னை யாரும் தொடர் பதிவு எழுத கூப்பிடமாட்டங்க, அதனால நானே ஜீப்பில ஏறி இந்த டாப் டென் பதிவ போடறேன்.
இந்த பத்துப் படங்கள் தமிழ்த்திரையுலகின் மிகச் சிறந்த படங்கள்னு அர்த்தமாகாது, நான் பார்த்ததில் எனக்கு மிகவும் பிடித்த படங்கள் இவை.
1. அன்பே சிவம்
2. மொழி
3. மூன்றாம் பிறை
4. நாயகன்
5. எதிர் நீச்சல்
6. தவமாய் தவமிருந்து
7. பாட்ஷா - இத விட சிறந்த எண்டர்டெயினர் தமிழில் நான் இதுவரை பார்க்கவில்லை
8. ஆண் பாவம்
9. முதல்வன்
10.ரிதம்.
பம்பாய், சேது, மைக்கேல் மதன காம ராஜன், சலங்கை ஒலி, சர்வர் சுந்தரம் ஆகிய படங்களும் நான் மிகவும் ரசித்தவை. But they did not make it to my top 10.
இதைப் படிக்கும் அனைவரையும் அவர்களுக்குப் பிடித்த பத்து படங்களை பட்டியலிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்..
Thursday, April 1, 2010
ரொம்ப நல்லவனின் இரு தவறுகள் மற்றும் இரு வேடங்கள்
ஒரு ஊர்ல ஒரு தான் தோன்றி இருந்தானாம். அவன் ஒரு நாள் ரொம்ப நல்லவங்க ஒண்ணா கூடின எடத்துக்குப் போயிட்டு வந்து தன்னோட நோட்டுப் புத்தகத்தில அது பத்தி
கிறுக்கினானாம். அப்படி கிறுக்கயில ரெண்டு தடவ தப்பு பண்ணானாம். ஒரு தப்பு ஒரு தனி மனுஷியப் பத்தி கமெண்ட் சொன்னது, ரெண்டாவது தப்பு ஒரு சமூகத்தையே நோக்கி
காரணமில்லாமல் மற்றும் அடிப்படை இல்லாமல் புழுதியைத் தூற்றினது.
ரெண்டுமே தப்புதான்னு அவனுக்கும், அவனைச் சுற்றி இருப்பவர்களுக்கும், அந்த நல்லவங்க கூட்டம்னு சொன்னேனில்ல அங்க வந்த எல்லோருக்கும் தெரியும். ஒரு சமூகத்துக்கே அவன் செஞ்ச கொடுமையை எல்லோரும் சுட்டிக் காட்டியும், பல பேர் காட்டமாகக் கூறியும் அவன் அதை தவறுன்னு ஒத்துக்கவுமில்லை, கிறுக்கியதை ரப்பர் போட்டு அழிக்கவுமில்லை. இந்த பஞ்சாயத்து நாலஞ்சு நாள் நடந்தும் இதுதான் நிலைமை.
இவன் ஒரு பெண்மணிக்கு செஞ்ச தப்பை யாருமே சில நாள் கண்டுக்கலை (பெரிய தப்பு சின்ன தப்பை மறைத்து விட்டதுன்னு நினைக்கிறேன்), நாலு நாள் கழிச்சி இரண்டாம் கம்பர்
நல்லவங்க கூட்டம் நடத்தின பின்னர் நடக்கும் அரசியல் பத்தி தன்னோட நோட்ல எழுதும் போது தான் தோன்றியின் இந்த தப்பை சுட்டிக் காட்டி துப்பியிருந்தார். உடனே களத்தில குதிச்ச நண்பர்கள் இது தப்பு, இது தப்புன்னு பின்பாட்டு பாடினார்கள். சம்பந்தப்பட்ட பெண்மணியும் தான் தனக்கு இழைக்கப் பட்ட கொடுமையை தான் பெருந்தன்மையாக மன்னித்து விட்டதாக சொல்லிட்டாங்க. இதுல வேடிக்கை என்னன்னா தான் தோன்றி தான் தப்பாக எதுவும் சொல்லவில்லை, தனது வார்த்தைகளை இரண்டாம் கம்பர் திரித்து விட்டாதாக சொன்னான். அப்படி சொல்லிட்டு உடனே அடிச்சான் பாருங்க பல்டி.. அந்தர் பல்டி, இந்தர் பல்டியெல்லாம் தோத்துப் போயிடும் இவருகிட்ட.
தான் தவறு செய்யவே இல்லைன்னு நம்புறவன் என்னா செய்யணும், சம்பந்தப் பட்டவங்ககிட்ட பேச்சின் மூலமோ எழுத்தின் மூலமோ தனது நிலைப் பாட்டை தெளிவு படுத்தி இருக்கணும். ஆனா நம்ப ஹீரோ என்ன செஞ்சாருன்னா, சம்பந்தப்பட்ட பெண்மணிக்கு போன் பண்ணி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டிருக்கிறார். ஏன்னா ஒரு பெண் சம்பந்தமான குற்றச்சாட்டு தன் மீது சுமத்தப் பட்டால் என்ன ஆகும்னு ஹீரோவுக்கு நல்லாவே தெரியும். கவுஜ படிக்க வர்ற பெண்கள் யாரும் வரமாட்டாங்களே.. கடையில யாருமே கல்லா கட்ட மாட்டாங்களே...
ஒரு பெண்மணிக்கு ஏற்பட்ட மனவருத்தத்தை உணர்ந்து தான் தவறு செய்ததாகவே கருதாத போதிலும் மன்னிப்பு கேட்ட தான் தோன்றி ஒரு சமூகத்தையே கேவலமாகப் பேசியதன் மூலம்
பலருக்கு ஏற்பட்ட (நான் உள்பட) மனவருத்தத்தைப் போக்க ஏதாவது செய்வாரா??? யாராவது கேட்டு சொல்லுங்களேன்... ரெண்டாம் கம்பரே..உங்க சொல்லுக்கு ஹீரோ மதிப்பு
தருவான்னு நெனைக்கிறேன்.. you too Kambar? கேள்விக்கு பதில் சொல்லிட்டு இதுக்கு பதில் கேட்டுச் சொல்லுங்களேன்...
டிஸ்கி 1: இது ஒரு கற்பனைக் கதை, யாரையும் குறிப்பதில்லைன்னு ஜல்லி அடிக்கப் போறதில்லை, நீங்க நெனைக்கிற ஆளைப்பத்தித்தான் சொல்லி இருக்கிறேன்.
டிஸ்கி 2 : இது பல நாள் குமுறல், சும்மா சும்மா தேவையில்லாம பாப்பான்னு எழுதினா எவண்டா ஜாட்டான்னு நானும் கேக்கலாமுன்னு இருக்கேன்.
டிஸ்கி 3 : இது நாள் வரை பின்னூட்டப் பெட்டி திறந்த்துதான் இருந்தது, உங்க எல்லாரோட Maturity மேல இருக்குற நம்பிக்கையில இன்னிக்கும் அப்படியே வச்சிட்டு தூங்கப்
போறேன்.
கிறுக்கினானாம். அப்படி கிறுக்கயில ரெண்டு தடவ தப்பு பண்ணானாம். ஒரு தப்பு ஒரு தனி மனுஷியப் பத்தி கமெண்ட் சொன்னது, ரெண்டாவது தப்பு ஒரு சமூகத்தையே நோக்கி
காரணமில்லாமல் மற்றும் அடிப்படை இல்லாமல் புழுதியைத் தூற்றினது.
ரெண்டுமே தப்புதான்னு அவனுக்கும், அவனைச் சுற்றி இருப்பவர்களுக்கும், அந்த நல்லவங்க கூட்டம்னு சொன்னேனில்ல அங்க வந்த எல்லோருக்கும் தெரியும். ஒரு சமூகத்துக்கே அவன் செஞ்ச கொடுமையை எல்லோரும் சுட்டிக் காட்டியும், பல பேர் காட்டமாகக் கூறியும் அவன் அதை தவறுன்னு ஒத்துக்கவுமில்லை, கிறுக்கியதை ரப்பர் போட்டு அழிக்கவுமில்லை. இந்த பஞ்சாயத்து நாலஞ்சு நாள் நடந்தும் இதுதான் நிலைமை.
இவன் ஒரு பெண்மணிக்கு செஞ்ச தப்பை யாருமே சில நாள் கண்டுக்கலை (பெரிய தப்பு சின்ன தப்பை மறைத்து விட்டதுன்னு நினைக்கிறேன்), நாலு நாள் கழிச்சி இரண்டாம் கம்பர்
நல்லவங்க கூட்டம் நடத்தின பின்னர் நடக்கும் அரசியல் பத்தி தன்னோட நோட்ல எழுதும் போது தான் தோன்றியின் இந்த தப்பை சுட்டிக் காட்டி துப்பியிருந்தார். உடனே களத்தில குதிச்ச நண்பர்கள் இது தப்பு, இது தப்புன்னு பின்பாட்டு பாடினார்கள். சம்பந்தப்பட்ட பெண்மணியும் தான் தனக்கு இழைக்கப் பட்ட கொடுமையை தான் பெருந்தன்மையாக மன்னித்து விட்டதாக சொல்லிட்டாங்க. இதுல வேடிக்கை என்னன்னா தான் தோன்றி தான் தப்பாக எதுவும் சொல்லவில்லை, தனது வார்த்தைகளை இரண்டாம் கம்பர் திரித்து விட்டாதாக சொன்னான். அப்படி சொல்லிட்டு உடனே அடிச்சான் பாருங்க பல்டி.. அந்தர் பல்டி, இந்தர் பல்டியெல்லாம் தோத்துப் போயிடும் இவருகிட்ட.
தான் தவறு செய்யவே இல்லைன்னு நம்புறவன் என்னா செய்யணும், சம்பந்தப் பட்டவங்ககிட்ட பேச்சின் மூலமோ எழுத்தின் மூலமோ தனது நிலைப் பாட்டை தெளிவு படுத்தி இருக்கணும். ஆனா நம்ப ஹீரோ என்ன செஞ்சாருன்னா, சம்பந்தப்பட்ட பெண்மணிக்கு போன் பண்ணி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டிருக்கிறார். ஏன்னா ஒரு பெண் சம்பந்தமான குற்றச்சாட்டு தன் மீது சுமத்தப் பட்டால் என்ன ஆகும்னு ஹீரோவுக்கு நல்லாவே தெரியும். கவுஜ படிக்க வர்ற பெண்கள் யாரும் வரமாட்டாங்களே.. கடையில யாருமே கல்லா கட்ட மாட்டாங்களே...
ஒரு பெண்மணிக்கு ஏற்பட்ட மனவருத்தத்தை உணர்ந்து தான் தவறு செய்ததாகவே கருதாத போதிலும் மன்னிப்பு கேட்ட தான் தோன்றி ஒரு சமூகத்தையே கேவலமாகப் பேசியதன் மூலம்
பலருக்கு ஏற்பட்ட (நான் உள்பட) மனவருத்தத்தைப் போக்க ஏதாவது செய்வாரா??? யாராவது கேட்டு சொல்லுங்களேன்... ரெண்டாம் கம்பரே..உங்க சொல்லுக்கு ஹீரோ மதிப்பு
தருவான்னு நெனைக்கிறேன்.. you too Kambar? கேள்விக்கு பதில் சொல்லிட்டு இதுக்கு பதில் கேட்டுச் சொல்லுங்களேன்...
டிஸ்கி 1: இது ஒரு கற்பனைக் கதை, யாரையும் குறிப்பதில்லைன்னு ஜல்லி அடிக்கப் போறதில்லை, நீங்க நெனைக்கிற ஆளைப்பத்தித்தான் சொல்லி இருக்கிறேன்.
டிஸ்கி 2 : இது பல நாள் குமுறல், சும்மா சும்மா தேவையில்லாம பாப்பான்னு எழுதினா எவண்டா ஜாட்டான்னு நானும் கேக்கலாமுன்னு இருக்கேன்.
டிஸ்கி 3 : இது நாள் வரை பின்னூட்டப் பெட்டி திறந்த்துதான் இருந்தது, உங்க எல்லாரோட Maturity மேல இருக்குற நம்பிக்கையில இன்னிக்கும் அப்படியே வச்சிட்டு தூங்கப்
போறேன்.
Subscribe to:
Posts (Atom)